வயல் வவட்டங்கள்  (Crop Circles)

கனி விமலநாதன் B.Sc

யல் வட்டங்கள் என்கிற அபூர்வமான தோற்றங்கள் பற்றிய ஒரு அலசலினை இன்று செய்யப் போகின்றோம். இவற்றினைப் பயிர் வட்டங்கள் எனக் கூறுவதுமுண்டு. மிகவும் சுவாரசியமான பின்னனியைக் கொண்டுள்ள இந்த விடயத்தைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் அமைந்ததுதான் இக்கட்டுரை. முதலில் வயல் வட்டம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

அருகில் இருக்கும் படத்தில் 2019ல் இங்கிலாந்திற் காணப்பட்ட மிகவும் எளிமையான வயல்வட்டம் ஒன்றினைக் காண்கின்றீர்கள். இந்த வயல் வட்டங்கள் விவசாயிகளின் வயல்களில் அந்நியத்தனமாக ஆக்கப்பட்டிருக்கும் வடிவங்கள் (patterns) ஆகும். ஆரம்ப நாட்களில் இவ்வடிவங்கள் எல்லம் வட்ட வடிவமாக இருந்ததால் இவற்றினை வயல் வட்டங்கள் என அழைத்தார்கள். ஆனால் இந்நாட்களில் இவற்றின் வடிவங்கள் வௌ;வேறு பருமன்களில், அமைப்புகளிற்; காணப்படுகின்றன.

பொதுவாகவே நன்கு செழித்து வளர்ந்த கோதுமைப் பயிர்களின் கதிர்கள் ஒழுங்கான முறையில் மடிக்கப்பட்டு இந்த வடிவங்கள் ஆக்கப்பட்டிருக்கும். எளிய சிறிய வடிவங்களில் இருந்து மிகப் பெரிய சிக்கலான பல வடிவங்களில் இவை செதுக்கப்படுகின்றன. பெரும்பாலும், இரவுகளில், யாரும் காணாத நேரங்களிலேயே இந்த வயல் வட்டங்கள் வயற் பரப்புகளில் தோன்றுகின்றன அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. இப்படியான வடிவங்கள் வயல் வெளிகளில் மட்டுமல்லாது, மணற்பரப்புகளிலும் பனி உறைந்துள்ள இடங்களிலும் புல்வெளிகளிலும் கூட வேறு சில நாடுகளில் காணப்பட்ட போதிலும் அதிகமாகக் காணப்படும் இங்கிலாந்தின் வயல் வட்டங்களே பிரசித்தமானவை.

1590ம் ஆண்டில் இருந்தே இங்கிலாந்தில் வயல் வட்டங்கள் காணப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன என்கிறனர், ஆய்வாளர்கள். அக்காலத்தில் விண்வெளி பற்றிய அறிவு விஞ்ஞானிகளுக்கே இன்றுள்ளது போன்ற அளவில் இருக்கவில்லை. வயற்பரப்புகளில் தோன்றுகின்ற இந்த விந்தை வடிவங்கள் பற்றிய அறிவியல் விளக்கங்கள் எதனையும் எவரொருவராலும் கொடுக்க முடியாதிருக்க, இவையெல்லாம் பேய் பிசாசுகளின் வேலைகள் என அந்நாட்களில் முடிவு செய்தார்கள். அதன்படி, அவற்றினைத் துரத்துவதற்கான பரிகாரங்களும் அவ்வப்போது செய்யப்பட்டுக் கொண்டும் வந்தன. ஆனாலும் பூசாரிகளின் பைகள் நிரப்பப்பட்டனவே தவிர, இந்த வயல் வட்டச் வேட்டைகள் நின்றபாடில்லை, தொடர்ந்தன.

இப்படியிருக்க, அறிவியல் விஞ்ஞானிகளிடமும் மற்றவர்களிடமும் பரவலாக வளர்ந்து விட்ட நிலையில் 1970இன் பிற்பகுதிகளில் இருந்து வயல் வட்டங்கள் பலராலும் பலகோணங்களிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பலர் இந்த விவகாரத்தில் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்க, வயல் வட்டங்களின் நவீன காலம் மெதுமெதுவாக ஆரம்பமாகத் தொடங்கியது.

வயல் வட்டங்கள் பற்றிய ஆய்வுகள் செய்பவர்கள், 'சீரியலோயிற்றுகள்' (Cerealogists) என அழைக்கப்பட்டார்கள். இந்த சீரியலோயிற்றுகளின் வயல் வட்ட ஆய்வுகளின் முடிவுகள் ஒன்றுக் கொண்று வேறுபட்டே காணப்பட, வயல் வட்டப் புதிர் இன்னமும் வளர்ந்து கொண்டே போனது. ஆனாலும் இப்படியான வேறுபாடுகளுக்கு காரணம் ஆய்வுகளுக்காக அவர்கள் தெரிவு செய்து கொண்ட வயல் வட்டங்களும் அவை இருந்த இடங்களுமேதான் என்பது எனது எண்ணம். சரி, இனி சீரியலோயில்றுகள் கூறிய சில முடிவுகளை, கருத்துகளை இனிப்பார்ப்போம்.

மனிதரின் திருவிளையால்கள்

சில ஆய்வாளர்கள் வயல் வட்டங்கள் என்பதெல்லாம் சில மனிதர்களினது கைங்கரியங்கள் என்று கூறுகின்றார்கள். சில விசமிகள் நள்ளிரவுகளில் குறிப்பிட்ட சில விவசாயிகளின் வயல்களின் நடுவில் இப்படியான விசமச்செயல்களைச் செய்துவிட்டு நழுவிவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்தார்கள். இரண்டு அல்லது மூன்று பேர், கால்களில் நீண்ட தட்டையான பலகைகளைப் பொருத்திக் கொண்டு, வயலில் இறங்கி, மிக வேகமாக இயங்கி, இது போன்ற வடிவங்களைச் சில மணிநேரத்துள் செய்து முடித்திடலாம் எனவும் செய்து காட்டினார்கள். இவர்களது முடிவை உறுதிப்படுத்துவது போல டேவ் என்பவரும் டக் (Dave & Doug) என்பவரும் தாம் இப்படியான திருவிளையாடல்களைப் பல காலமாகச் செய்து கொண்டு வருவதாக கூறினார்கள்.

அருகில் டேவ், டக் இருவரும் வயற் காட்டில் அருகருகே இருப்பதைப் பார்க்கிறீர்கள். 1991ல் இங்கிலாந்தில் இவ்விருவரும் ஓரளவுக்கு எல்லோராலும் அறியப்பட்டும் இருந்தார்கள். சிறிதளவு மதுவை அருந்திவிட்டு வயல் பரப்புகளில் எவ்விதம் வயல் வட்டங்களைச் செதுக்கினோம் எனபதை ஊடகவியலாளர்களுக்குச் இவர்கள் இருவரும் செய்தும் காட்டினார்கள். 80களில் இருந்தே இருவரது வயற் காட்டுத் திருவிளையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதனைத் தமது வெளிப்படுத்தல்களின் போது கூறியிருந்தார்கள். இவர்களது ஒப்புதல் வாக்குமூலமானது ஒருகாலத்தில் மிகவும் பரபரப்பாக D & D crop circle work எனப் பேசப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் கூகுளில் இவர்கள் பற்றியும் பார்க்கலாம். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இவர்களது கூற்று முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. வேண்டுமாயின் ஒருசில எளிமையான வடிவங்களை மட்டும் அவர்களால் செதுக்கியிருக்க முடியும் எனக் கூறவாம். இங்கே காட்டப்பட்டடிருக்கும் வடிவினைப் பாருங்கள். ஓரிரவின் சில மணிநேரத்துள் மர்மமாக இத அவ்வயற் பரப்பில் முளைத்திருந்தது. இப்படியான அழகான சமச்சீர் வடிவ வயல் வட்டத்தை ஒரு சில மணி நேரத்துள் கும்மிருட்டில் டேவ் டக் கூட்டாளிகளோ அல்லது வேறு நாலைவரோ இரகசியமாகக் கனகச்சிதமாகச் செய்திட முடியுமா? முடியாது என்றுதான் கூற வேண்டும. அத்துடன் 600, 700 வருடங்களுக்கும் மேலா இப்படியான வயல் வட்டங்களை, சில மனிதர்கள், இரகசியமாகச் செய்து கொண்டு வருகிறார்களா என்றும் கேட்க வேண்டியிருக்கிறது. அப்படியாயின் இதற்கென ஒரு இரகசிய அமைப்பொன்றினைப் பல்வேறு நாடுகளில் 600, 700 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வைத்திருக்கிறார்களா? சரி, இவை மனிதர்களின் வேலையாக இருக்க முடியாதெனில், இவையெல்லாம் எப்படி எனக் கேட்கின்றீர்களா? சற்று விரிவாக அலசிப் பார்ப்போம். ஒருவேளை தெளிவு வரலாம்.

பெரும்பாலும் வயல் லட்டங்கள் இரவு இரண்டு மணிக்கும் நான்கு மணிக்கும் இடையிலேயே ஆக்கப்படுகின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறைந்தது 20 நிமிடங்களுக்குள் இவை முற்றாகவே செதுக்கப்பட்டு விடுகின்றன. வயல் வட்டங்களில் மடிக்கப்படும் கதிர்கள் எல்லாம் நிலத்தில் இருந்து ஒரு அங்குல உயரத்தில், ஒரே அமைப்பிற் 90 பாகை கோணத்தில் மடிக்கப்பட்டு இருப்பதையும் ஆய்வாளர்கள் கவனித்திருந்தனர். சில வயல் வட்டங்களில் மடிக்கப்பட்ட கதிர்கள் உச்சியில் இருந்து 6 அங்குல தூரத்தில் மடிக்கப்பட்டு இருந்தன. எந்தவொரு மடிக்கப்பட்ட தண்டும் முறிக்கப்பட்டோ அல்லது காயப்பட்டோ இருப்பதில்லை. இன்னமும் சில வயல் வட்டங்களின் மத்தியில் தனிப்பயிரொன்றோ அல்லது ஒரு சிறிய தொகுதியோ சேதமின்றிக் காணப்பட்டு இருந்ததையும் அவதானித்திருந்தார்கள்.

இன்னொரு விடயத்தையும் சீரியலோயிஸ்ருகள் அவதானித்தார்கள். வயல் வட்டங்களின் உள்ளே புவிக்காந்தப்புலம் வடக்கு - தெற்காக இல்லாது எழுந்தமாறாக வௌ;வேறு திசைகளில் வேறுபட்டுக் காணப்பட்டது. மிகவும் வலிமையான இக்காந்தப் புலங்கள் சில குறிப்பிடத்தக்க விளைவுகளையும் காட்டுகின்றன. இப்பகுதியில் கைத்தொலைபேசிகள் மற்றும் றேடியோ சமிக்கை உபகரணங்கள் போன்றவை வேலை செய்வதில்லை. வயல் வட்டத்துள் வருகின்ற வாகனங்களின் பற்றரிகள் பழுதாகி விடுகின்றன. மேலும் வயல் வட்டங்கள் தோன்றுகின்ற வேளைகளைச் சுற்றியுள்ள இடங்களின் மின்சாரம் தடைப்பட்டு இருந்ததையும் சீரியலோயிற்றுகள் அறிந்து கொண்டார்கள். பறவைகள், விலங்குகள் கூட இவ்விடங்களில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொண்டன. ஒருவேளை அவ்விடங்களிற்குத் தப்பித்தவறி வந்து விட்டால் தமது இயல்பு நடத்தைகளில் இருந்து விலத்தி, வித்தியாசமாக நடந்து கொள்கின்றன. இப்படியான விளைவுகளின் தொகுப்பு முடிவாகச் சில விளக்கங்களை அவர்கள் முன்வைத்தார்கள்.

புவியின் மேற்பரப்பின் மேலேயிருந்து சக்திமிக்க மின்னல், இடி என்பன புவியின் மேற்பரப்பில் இறங்குவது எங்களுக்குத் தெரியும். அப்படியிறங்குகையில் ஏற்படுகின்ற சக்தியின் அசைவுகளின் விளைவாகவே வயல் வட்டங்கள் தோன்றுகின்றன என்றனர், சிலர். இன்னமும் மேலிருந்து சக்தி வருவது போலவே எங்களின் புவியும் தனக்கு உள்ளே நடக்கிற இயற்பியல், வேதியல், மாற்றங்களின் விளைவாகச் சக்தியை வெளியே வீசுகின்றது. அப்படியாகப் புவியானது சக்தியை வீசுகையில் அதன் செற்பாடுகளின் விளைவுகள் சில இடங்களில் இப்படியான வடிவங்களை உண்டாக்கி விடுகின்றன எனச் சிலர் விளக்கம் தருகிறார்கள். இக் கூற்றினை வலிமைப்படுத்துவது போன்ற வடயமொன்றினைச் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

வயல் வட்டங்கள் தோன்றுவதங்குமுன், அவ்வயற்பரப்புகளின் மேலாகச் சில வெளிச்சங்கள் பந்து வடிவில் அசைந்து திரிந்ததாகவும், பின்னர் வானிலே மறைந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். இதனைக் கண்ட பல சாட்சிகளையும் அவர்கள் காட்டினார்கள். இவை மாத்திரமல்ல, இயற்கையின், எங்களால் இன்னமும் கண்டறியப்படாத சில சக்தியின் வடிவங்கள்தான் பயிர்களை இப்படியாக ஆக்குகின்றவோ எனச் சத்தேகிக்கிறார்கள் சிலர். இவர்களை விட, சடுதியான வளிமண்டல மாற்றங்கள் கூட, பயிர்களில் விசித்திர வடிவங்களை ஆக்கிட முடியும் என்பவர்களும் உண்டு. இவையெல்லாம் சரிதான், இப்படியான இயற்கையின் வெளிப்பாடுகளால், சிக்கலாக சமச்சீர் அமைப்பு வடிவங்களை ஏற்படுத் முடியுமா என்ற கேள்வியிற்கு அவர்களாற் சரியாகப் பதிலளிக்க முடியவில்லை.

இப்படியாக வயல் வட்டச் சிக்கல்கள் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பகுதியினர், வயல் வட்டங்களுக்கு வேறு விதமான விளக்கங்களுடன் வந்தார்கள். அவர்கள் வேறுயாருமல்ல, யூஏவ்ஓலோயிஸ்ருகள் எனப்படும், விஞ்சையர் என அழைக்கப்படக் கூடிய வேற்றுக் கிரக மனிதர்கள், கடக்கும் தட்டுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்பவர்கள்தான் அவர்கள். இந்த பறக்கும் தட்டியலாளர்கள் தரும் விளக்கத்தைப் பாருங்கள். எமது புவியினைச் சுற்றி, மிகவும் அறிவுடைய வேற்றுக்கிரக வாசிகள் தங்களது விண்கலங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் எங்களது புவியினைச் சுற்றி வருகையில் எங்களது நடவடிக்கைகளை மிகவும் அவதானமாகக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்னமும் எங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் முயற்சித்த வண்ணமாகவே இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியின் ஒரு வெளிப்பாடே இந்த வயல் வட்டங்கள் என்கிறார்கள். வயல் வட்டங்களில் உள்ளவை எல்லாம் அந்த விஞ்சையர்கள் எங்களுக்குக் கூறும் செய்திகளே. ஆனால் எங்களால்தான் அவற்றினை வாசித்து அறிந்திட முடியவில்லை என்கின்றனர். இவர்கள் கூறுவது சரிதான் என்பது போன்ற சம்பவங்களும் நடந்துதான் இருக்கின்றன.

இது என்ன படம் எனக் கேட்கிறீ)ர்களா? கூறுகிறேன். SETI. META என்பவை விண்ணிலே உள்ள வேற்று கிரக மனிதர்களைத் தேடும் அமைப்புகள். இவை 1984ம் ஆண்டு ஆர்சிபோ (ARECIBO) என்று குறிப்பிடப்படும், 1679 செய்திப் புள்ளிகள் கொண்ட றேடியோ சமிக்கையை விண்வெளியில் 26,000 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் Globular Cluster M13 என்ற விண்மீன் தொகுதியிற்கு அனுப்பி இருந்தார்கள். அதனது விளக்கப் படம்தான் இது. அந்த 1679 சமிக்கைப் புள்ளிகளும் 23 க்கு 73 என்ற அமைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டு, ஒரு செவ்வக அமைப்பில், புவி பற்றிய விபரங்களைக் காவிக் கொண்டு செல்கின்றன. இவர்கள் அந்த எம்13 என்ற விண்மீன் தொகுதியை ஏன் தெரிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், இச்செய்தி எம்13ஐ அடைந்ய, அங்கே யாராவது அதனை வாசித்து பதில் கொடுத்தால், அப்பதில் உண்மையில் எங்களுக்கு 52,000 வருடங்களின் பின்னர்தான் வந்து சேரும். ஆனால், அதன் பதில் 27 வருடங்களில் எங்களுக்குக் கிடைத்ததோ என்ற மாதிரியான நிகழ்ச்சி ஒன்று வயல் வட்ட வடிவிற் கிடைத்தது.

2001ம் ஆண்டில், 19774ல் அனுப்பிய அந்த 23 க்கு 73 என்ற செவ்வக வடிவில் அனுப்பப்பட்ட சமிக்கைச் செய்திகளின் மாதிரி ஒன்று அச்சொட்டாக வயல் வட்டப் வடிவமாக ஓரிரவில் இங்கிலாந்தின் வயல் ஒனடறில் செதுக்கப்பட்டிருந்தது.

வயல் பரப்பில் வரையப்பட்டிருந்த ஆர்சிபோ செய்தி இதுதான். இந்த வடிவம் சக்தியின் வெளிப்பாடு என்றே அல்லது ஓரிரவுக்குள் விசமிகளின் கைவண்ணமோ எனக் கூற முயாது சீரியலோயிஸ்ருகள் திணறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த விடயம் தொடர்பில், ஒருவேளை அந்த விஞ்சையர் எங்களது அறிவியல் நிலையை ஏளனம் செய்கிறார்களோ எனக் கூறுபவர்களும் உண்டு. அல்லாமலும், இது தொடர்பான வேறு சில வயல் வட்டங்களும் இதனுடன் தோன்றியிருந்தன.

அப்படியான இன்னொரு வயல் வட்ட வடிவம்தான் இது. ஆர்சிபோ விற்கான இன்னொரு பதில் போன்ற வயல் வடிவத்துடன் அதேகாலப்பகுதியல் வயற் பரப்புகளில் காணப்பட்ட சிக்கலான, புரியாத வடிவம். இது ஒருவேளை யாரோ வேற்றுக் கிரகிகள் தங்களைப் பற்றிய விபரங்களைத் தெரிவித்திருக்கிறார்களோ? ஏனச் சில ஆய்வாளர்கள் ஐயுறுகின்றார்கள். அவை பற்றித் தீவிரமான ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

இனி வழமை போலவே, உங்கது நேரத்திற்கு வந்து விட்டோம். வயல் வட்டங்கள் என்ற விந்தை வடிவங்கள் பற்றிய செய்திகளை மேலோட்டமாக எல்லாக் கோணங்களிலும் தெரிந்து கொண்டோம். உங்களது முடிவாக, இதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று எண்ணுகின்றீர்கள்? நாங்கள் இதனை இன்னமும் தீவிரமாக அலசப் பொகிறோம். அதன் பின்னர்தான் முடிவு ஒன்றினைக் கூறுவோம் எனக் கூறுகின்றீர்களா? மகிழ்கிறேன். உங்கள் முடிவை, கருத்துக்களை தமிழ்ஆதேர்ஸ் டொட் கொம்மில் பதிவு செய்வீர்கள் தானே? காத்திருக்கிறோம்.



கனி விமலநாதன் B.Sc
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்