புவியின் உயிரினங்கள் வந்தேறிகளா?

கனி விமலநாதன் B.Sc


2020 பெப்ரவரியின் இறுதிப்பகுதியில் உலக விஞ்ஞானிகள் இரண்டு சுவாரசியமான விடயங்களை வெளியிட்டிருந்தார்கள். அவை பற்றிய ஒரு அறிவியற பார்வையைத்தான் இம்முறை பார்க்கப் போகின்றோம். அதற்கு உதவியாக, சில அறிவியல் விடயங்களைத் தெரிந்து கொள்வோம். இவ்விரு செய்திகளில் முதலாவது செய்தியின் வெளிப்பிற்கான தலைப்பைத்தான் மேலே காண்கின்றீர்கள்.

புவியில் மனிதர் உட்பட சகல உயிரினங்களின் தோற்றத்திற்கு காரணம் என்ன என்பது பெரும் புதிராகவே உள்ளது. சிலர் புவியில் உயிரினங்களை இறைவனே படைத்தார் என உறுதியாகக் கூறுகின்றனர். வேறு சிலரோ, அது அப்படியல்ல, புவியில் உயிரினங்கள் இயற்கையின் தெரிவுக்கு அமைவாகவே தோன்றின என்கின்றனர். இப்படியாக உயிரினத் தோன்றல் இறைவனின் படைப்பா ஆல்லது இயற்கையின் தெரிவா என்ற கேள்விகளுக்கான தெளிவான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன்னரே இன்னொரு கருத்தும், இவையிரண்டையும் பொதுமைப்படுத்தும் விதமாக இப்போது வந்து, மனிதரிடையே பரவிக் கொண்டு இருக்கின்றது. அது புவியை இன்று கட்டியாளும், சிறப்பு விலங்குகள் எனும் மனிதர், உண்மையிலே இயற்கையின் தெரிவும் (இறைவனது) படைப்பும் கலந்த இணைப்பு என்கிறார்கள். இவை பற்றிய அலசலாக இக்கட்டுரை இருக்கப் போவதில்லை. தனியவே அறிவியற் பார்வை என்னும, உயிர்கள்; இயற்கையின் தெரிவு என்பதற்கான அடிப்படையில் மிகச் சுருக்கமாக அமைகின்றது.

புவியில் 3.75 பில்லியன் ஆண்டு முன்னராக நுண்ணுயிர்கள் தோன்றி, அவற்றில் இருந்துதான் ஒருகல உயிரினங்கள் தோன்றிப் பின்னர் கூர்ப்பு வழியில் இயற்கையின் தெரிவாக இன்றுள்ள உயிரினங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தோன்றின என்று உயிரியல் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இந்த ஒருகல உயிரினங்கள்தான் மனிதர்கள் உட்பட ஏனைய பெரிய உயிரினங்கள் எல்லாம் இன்று புவியில் உலாவுவதற்கு அடிப்படை என்கிறார்கள். ஆனால் இந்த உயிரினங்கள் எல்லாவற்றிக்குமான அடப்படைக் கட்டுமானப் பொருள் புரதம் என்கிற இரசானப் பதார்த்தமாகும். மேலும், இப்புரதங்கள், அமினோ அமிலங்கள் என்பவற்றிக் சேர்க்கையினால் ஆனவை என்பது அறிவியல் உண்மைகளில் ஒன்று. எனவே, உயிரினக் கட்டுமானத்தில் அமினோ அமிலங்களே அடிப்படை என்றாகின்றது. இந்த அமினோஅமிலங்கள் என்பவை இயற்கையில் உள்ள காபன், ஒட்சிசன், ஐதரசன், நைதரசன் போன்ற மூலகங்களின் சேர்க்கையினால் உருவான இரசாயனப் பொருட்கள்.

உலகிலே பல எண்ணிக்கையிலான அமினோ அமிலங்கள் உள்ளன. இருப்பினும் 21 வகையான அமினோ அமிலங்களின் ஒழுங்கமைப்புச் சேர்க்கையினாலே எங்களின் உடலுக்குத் தேவையான ஆயிரக் கணக்கான புரதங்கள் உருவாகின்றன. இப்புரதங்களே மனிதர் உட்பட அத்தனை உயிர்களின் உயிர்க்கும் தொமிற்பாட்டிற்கும், உடல் அமைப்புகளுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் அடைப்படைக் காரணிகளாக உள்ளன.   

4.6 பில்லியன் ஆண்டு முன்னர் புவி தோன்றியது என்பது இப்போது நாமறிந்த விடயம். சூட்டுக் கோளமாகத் தோன்றிய புவி தோன்றிய சில ஆயிரமாண்டு பின்னரும் மிகவும் சூடாக இருந்தது. அந்நேரத்தில் இயற்கையாகபே புவியை ழூடியிருந்த, அடர்த்தி குறைந்த வளிமண்டலத்தில் நீராவி, மெதேன், அமோனியா, ஐதரசன், நைதரசன் போன்ற வாயுக்கள் அதிகம் இருந்தன. அத்துடன், அக்காலத்திற் புவியில் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் மின்னல், எரிமலைக் கொந்தளிப்புகள் என்பன ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இந்த மின்னல், எரிமலைக் கொந்தளிப்புகளினால் வெளிப்பட்ட மின்சாரம், வெப்பம், சக்தி என்பவை வளிமண்டலத்தில் இருந்த வாயுக்களில் இரசாயன மாற்றங்களை உண்டாக்க, புவியின் மேற்பரப்பில் முதன் முதலில் அமினோ அமிலங்கள் தோன்றத் தொடங்கின.

இப்படியாக இயற்கையின் சூழலில் அமினோ அமிலங்கள் உண்டாகும் என்பதைப் பரிசோதனை மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். 'உரேய்-மில்லர் பரிசோதனை' என இன்றும் பிரபலமாகப் பேசப்படும் இப்பரிசோதனையை மில்லர் என்பவரும் உரேய் என்பவரும் இணைந்து 1952ம் ஆண்டிற் செய்து காட்டி உயிரியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். (அருகில் உள்ள படம் உரோய்- மில்லரின் பரிசோதனையின் மாதிரியைக் காட்டுகிறது.) இவ்வண்ணமாகத் புவியின் ஆரம்பக் காலத்தில் தோன்றிய அமினோ அமிலங்கள் அப்போதிருந்த கடல் நீரில் அங்கிங்காகாத் தேங்கத் தொடங்கின. பின்னர் ஒருகட்டத்தில் பெருந்தொகையான அமினோ அமிலங்கள் ஆரம்பப் புவியின் கடலில் மிதந்தன. பின்னர் அவை ஒன்றிணைந்து ஏராளமான புரதங்களை உண்டாக்கின. இப்புரதங்களே இயற்கையாகவே ஒன்றினைந்து மெதுமெதுவாக உயிரினங்கள் தோன்றுவதற்கு காலாக இருந்து விட்டன.

இக்கருத்தினைப் பெரும்பாலான உயிரியல் அறிஞர் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சிலர் இதனை முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அமினோ அமிலங்கள் தோன்றுதல், பின்னர் அவை இணைந்து புரதங்கள் தோன்றுதல் என்ற செயற்பாடுகள் இரசாயன முறையில் மிகச் சரியானவைதான். ஆனால், இது புவியிலே முழுமையாக நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் பொருத்தமாக இல்லை என்கிறார்கள். ஏனெனில் அமினோ அமிலங்கள் திரண்டு புரதச் சங்கிலியை ஏற்படுத்துவதற்குத் தேவையான காலம் புவியிற்குப் போதாது என்பதே அவர்களின் வாதம். அதனால், அவர்கள் என்ன கூறுகின்றனர் என்றால், அமினோ அமிலமோ அல்லது உயிரினங்களின் அடிப்படையான புரதமோ, புவியிற் தோன்றாமல் புவியிற்கு வெளியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும், அதன் பின்னராகப் புவியின் இயற்கைச் சுழலில் கூர்ப்புpனால் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். அது எவ்விதம் நடந்திருக்கலாம் என்பதையும் கூறுகின்றார்கள்.

எங்களது கதிரவத் தொகுதியில் பல மெய்யிரம் (மில்லியன்) கணக்கிலான பாறைகள் சிறியதும் பெரியதுமாகக் கோள் செவ்வாயிற்கும் கோள் வியாழனுக்கும் இடையில் ஒரு பட்டையாகக் கதிரவனை வலம் வந்து கொண்டிருக்கின்றன. 4600 மெய்யிரம் ஆண்டு முன்னர் கதிரவன் தோன்றுகையில், புவி தோன்றியது போலவே இப்பாறைகளும் தோன்றின என்று வானவியலாளர்கள் கூறுகின்றததுகள். இவற்றை குறுங்கோள்கள் அல்லது சிறுகோள்கள் (asteroids) என்போம். வானவியலாளர்கள் இந்தப் பட்டையை ஆங்கிலத்தில் asteroids belt  என்பார்கள்.

சில சமயங்களில் இந்த பாறைப்பட்டையில் உள்ள பாறைகள் கதிரவனைச் சுற்றி வருகையில் அதிலுள்ள சில பாறைகள் பெரிய கோள்களுக்குக் கிட்டவாகவும் வந்துவிடுகின்றன. அப்படிப் பெரிய கோள்களின் அருகில் அப்பட்டையில் உள்ள சில பாறைகள் வருகையில் அப்பெரிய கோள்களின் ஈர்ப்பினால் கதிரவனைச் சுற்றிவரும் தங்களது பாதையில் நின்றும் விலத்திப் புதிய பாதைக்குள் வந்து விடுகின்றன. இப்புதிய பாதையின் காரணமாகச் சில சமயங்களில் அப்பாறைகள் கதிரவனின் புவி உட்பட புவியின் மற்றக் கோள்களுடன் மோதுவதும் உண்டு. இப்படியாகப் புவியை வந்து மோதுகின்ற கற்களை விண்கற்கள் (meteoroites) என்கிறோம். 63 மில்லியன் ஆண்டு முன்னர் புவியுடன் வந்து மோதிய விண்கல் ஒன்றினால்தான் டைனோசர்கள் என்ற பாரிய விலங்கினம் முற்றாகவே அழிந்தன என்ற கொள்கை ஒன்றும் உண்டு.

இப்படியாகப் புவியிற்கு அருகில் வந்து புவியுடன் மோத வரும் விண்கற்கள் பொதுவாகவே புவியின் வளிமண்டலத்துள் வந்ததும், வளியின் உரசலினால் எரியத் தொடங்கும். இரவில் இந்நிகழ்வு ஏற்படுகையில் வானிலே ஒரு ஒளிக்கீற்றாக அவை எரிந்து கொண்டு வருவது எங்களின் கண்களுக்குத் தெரியும்.  இப்படியாக எரியும் விண்கல் ஒன்றினை 'எரிகல்; அல்லது 'எரிநட்சத்திம்' எனக் கூறுவார்கள். ஆங்கிலத்தில் இதனைத்தான் 'சூட்டிங் ஸ்ரார்' (Shooting star) என்பார்கள்

பொதுவாகவே இந்த எரிகற்கள் வளிமண்டலத்தின் உள்ளே முற்றாக எரிந்து சாம்லாகிவிடும். அவ்வளவு சிறியனவாக இருக்கும். ஆனால் சில எரிகற்கள், சற்றுக் பெரியனவாக இருந்தால் முற்றாக எரிந்து போகாமல், சிறு துண்டு எஞ்சிவிடும். அப்படி எரியாது மீதியான துண்டு புவியில் வந்து விழுந்துவிடும். அவற்றை விண்கற்கள் என்கிறோம். அப்படியான விண்கற்களை தேடியெடுத்து ஆய்வுகள் செய்வார்கள். அவை கூட விண்வெளி பற்றியும் வேறும் பல அறிவியற் செய்திகளையும் ஆய்வாயர்களுக்கு கூறுவதுண்டு.

(அருகில் உள்ள படம் எரிகல் அல்லது எரிநட்சத்திரம் ஒன்றினைக் காட்டுகிறது.)

இப்படியான விண்கற்கள்தான் புவியிற்கு அமினோ அமிலங்களை அல்லது புரதங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். புவியின் ஆரம்ப காலத்தில் புவியைச் சுற்றி இன்றிருப்பது போன்று பெரிய அளவில் வளிமண்டலம் இருக்கவில்லை. அதனால் புவியில் பெரிய பெரிய விண்கற்கள் வந்து மோதிக் கொண்டிருந்தன. இந்நிலையில் அவை பெருமளவில் அமினோ அமிலங்களையோ அல்லது புரதங்களையோ புவியின் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவற்றில் இருந்துதான் இரசாயன, உயிரியல் கூர்ப்புகளினால் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும், தோன்றின என்கிறார்கள் அவர்கள்.

அதாவது, புவியின் உயிரினங்கள் எல்லாமுமே, அதன் உடமைகள் இல்லை, ஒருவிதத்தில் பார்த்தால் உண்மையில் அவை வந்தேறிகள் என்றுதான் கூறவேண்டும் என்கிறார்கள். இறைவனின் படைப்புதான் புவியின் உயிரினங்கள் எனக் கூறுவோரிற் சிலர் இவர்களின் கருத்திற் பாதியை அதாவது, புரதச் சங்கிலி தோன்றுவதற்கான புவியின் காலம் போதாது என்பதைப் பிடித்துக் கொண்டு உயிரினங்கள் இறைவனால்தான் படைக்கப்பட்டவை என்று உறுதிப்படுகின்றார்கள்.

வெளியில் இருந்துதான் அமினோ அமிலங்கள் அல்லது புரதங்கள் புவிக்குப் பெருமளவில் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்ற கொள்கையாளர்களுக்கு ஒரு பெரும் சிக்கல் இருந்தது. இவர்களது கூற்றினை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக எந்தவொரு விண்கல்லிலும் இவர்களால் அமினே அமிலம் அல்லது புரதம் இருந்ததற்கான சுவடுகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் நான் முன்னர் கூறிய செய்திகளில் ஒன்றை அறிவியலாளர்கள் வெளியிட்டிருந்தார்கள். 2020ம் ஆண்டின் பெப்ரவரியின் இறுதிப் பகுதியில் அந்த விஞ்ஞானிகள் ஒரு அரிய கண்டுபிடிப்பின் முடிவினை; தந்திருந்தார்கள். 30 வருடங்களுக்கு முன்னர் புவியில் (அல்ஜீரியாவில்) வந்து விழுந்த விண்கல் ஒன்றினை ஆய்வு செய்த ஆய்வாளர்களை அக்கல் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அக்கல்லின் உள்ளே 'உயிரனங்களின் கட்டுமானத்திற்குத் தேவையான, அமினோ அமிலங்களினாலான புரதம்' காணப்பட்டது.

புவியை வந்து மோதிய விண்கற்கள்தான் புவிக்கு அமினோ அமுpலங்களை அல்லது புரதங்களைக் கொண்டு வந்திருக்கலாம் என எதிர்வு கூறியவர்களின் கூற்றினை உண்மையாக்குவது போன்று இந்தக் கண்டுபிடிப்பு உள்ளது. இக்கணடுபிடிப்பு புவியின் உயிரங்களின் தோன்றலுக்கான உண்மையான காரணியை எதிர்காலத்தில் விளக்கலாம். இதனைவிட இன்னொரு முக்கியமான புதிருக்கும் கூட விடையளிக்கலாம். அதாவது, ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரக மனிதர்கள் உண்மையிலேயே இருக்கலாம் என்பதற்கான உறுதிப்பாட்டையும் இந்த விண்கல்லில் உள்ள புரதங்கள் கூறுகின்றன, இல்லையா.

சரி, இதனை இத்துடன் நிறைவு செய்து கொண்டு அடுத்த சுவையான செய்துக்கு வருகிறேன். அதற்கும் ஒரு குட்டியான தலைப்பு "சந்திரனுக்கோர் தம்பி".

சந்திரனுக்கோர் தம்பி

சந்திரனுக்குத் தம்பியா? எந்தச் சந்திரனுக்கு எனக் கேட்கின்றீர்களா? நிலா, நிலவு, மதி, அம்புலி என்றெல்லாம் கூறுவோமே, அதே சந்திரனுக்குத்தான் தம்பி. வேண்டுமாயின் குட்டிச் சந்திரன் என்றும் கூட அழைக்கலாம். சுவாரசியமான அந்த விடயத்தையும் தெரிந்து கொள்வோம்.

பெப்ரவரி 15, 2020ல் வானவியலாளர்கள் வானிலே எங்களது புவியினை இன்னொரு சிறிய உருப்படி வலம் வருவதைக் கண்டு கொண்டார்கள். ஆயினும் பெப்ரவரி 27, 2020ல்தான் உலகினருக்கு அது பற்றி அறியத் தந்தார்கள். அச்சந்திரனுக்கு 2020ஊனு3 எனப் பெயரும் சூட்டி விட்டார்கள். இந்தக் குட்டியர் எப்படித் திடீரென எங்களுக்குக் கிடைத்தார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்வோம்.

நான் முன்னரே குறிப்பிட்டிருந்த அஸ்ரரோயிட் பெல்ரில் இருந்து, கோள்களின் ஈர்ப்பினால் சில பாறைகள் தங்களது சுற்றுப் பாதையை விலத்தி வெளியே வந்து விடுகின்றன என்பது இப்போது எங்களுக்குத் தெரியும். இப்படியான ஒரு பாறைதான் எங்களது குட்டிச் சந்திரனார். இவர் எங்களது புவியுடன் மோத வரவில்லை. சற்று எட்டவாக வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போகவிருந்தவர். ஆனால் எங்களின் புவியின் ஈர்ப்பு எல்லைக்குள் வந்து விட்டார். உடனே புவி, தனது ஈர்ப்பு வலிமையினால் அவரை இழுத்துத் தன்னைச் சுற்றிவரச் செய்து தனது இரண்டாவுது சந்திரனாக மாற்றி விட்டது.

அருகில் உள்ள படத்தில் புவியிற்கும் சந்திரனுக்கும் நடுவில், சற்று மேலாக ஒரு சிறிய பொட்டுப் போல் ஒன்று தெரிகின்றது அல்லவா. அதுதான் எங்களது குட்டிச் சந்திரன். எங்களுடன் வந்து ஒட்டிக் கொண்ட இந்தக் குட்டியருடன் ஒட்டியுள்ள சில விபரங்களைப் பார்ப்போம்.

அந்த குட்டியர், சுமாராக 1.9 மீற்றருக்கும் 3.5 மீற்றருக்கும் இடையிலான பருமன் கொண்டவர். அருகில் இருந்து பார்க்கையில் ஒரு காரின் (உயச) அளவாகவே இருப்பார். இன்னொரு விடயம், புவிசந்திரன் தொகுதிக்குள் இடையில் வந்த சேர்ந்த இவர் அதிக நாட்களுக்கு எங்களின் இரண்டாவது சந்திரனாக இருக்கமாட்டார் எனவும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். இந்த ஏப்ரலின் நடுப்பகுதிக்குள் புவியுடனான உறவைத் துண்டித்துக் கொண்டு, புவியின் ஈர்ப்பு எல்லையை விட்டுத் தப்பித் தன்வழியில் சென்று விடுவராம். ஒருவேளை நீங்கள் இதனை வாசிக்கையிற் எங்களை விட்டுப் புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்து முடித்திருப்பர்.

இந்தச் சந்திரத் தம்பியரின் வருகையானது, வானவியலாளருக்கு ஓரறிவியல் உண்மையை எடுத்துக் காட்டுகிறது. இப்போது இந்தக் குட்டிச் சந்தினார் புவியின் ஈர்ப்புக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தது சிக்கியது போலேதான் முந்நாளில் எங்கள் புவியின் ஈர்ப்பு எல்லைக்குள் வந்து சிக்கிக் கொண்டு, பின்னர் தப்பிப் பொக முடியாமற் சிக்கிக் கொண்டு, அப்படியே தங்கியவர்தான் எங்களின் அம்புலிமாமா என்கிற சந்திரன் என்பதும் சந்திரன் தோன்றியதற்கான கதைகளில் ஒன்று. இங்கு சந்திரனின் பருமன், புவியில் இருந்துள்ள அதன் தூரம் என்பவை காரணமாக சந்திரனால் புவியின் ஈர்ப்பில் இருந்து தப்பி ஓட முடியவில்லை. அதனாலேயே எப்பொழுதும் புவியைச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நியதிக்குள் வந்து விட்டது. சந்திரனுக்கான இந்தக் கொள்கையை உண்மையாக்கக் கூடியதாக இந்த இரண்டாம் சந்திரனின் வருகை நிரூபிக்கின்றது.

முன்னரும் இது போன்று குட்டிச் சந்திரன் ஒன்று பற்றிய கதை 2006ம் ஆண்டும் வந்தது. அதற்கு 2006 சுர் 20 எனப் பெயருமிட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் அதுவொரு விண்கல் அல்ல, அமெரிக்கரின் அப்போலோக்களின் விடுபாடுகளில் ஒன்று என்பது பின்னர் தெரிய வந்திருந்தது. எனவே குட்டிச் சந்திரன் என்ற பெயர் அதற்குக் கிடைக்கவில்லை.

இன்று இத்துடன் நிறைவு வெய்து கொள்கிறேன். அடுத்த தடவையில் இன்னொரு புதிய அறிவியல் விடயத்துடன் வருகின்றேன்.

அன்புடன்,

கனி.

 



கனி -  647 782 2827.  
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்