சங்க இலக்கிய நற்றிணையில் தொன்மங்களும் மானிடவியலும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


முதாயத்தைக் காட்டும் ஒளிவிளக்கக் கருவூலம் இலக்கியம். மக்களின் வாழ்வியலை அறிந்துகொள்ள படைப்பாளியின் ஆற்றல்மிகு படைப்புகள் துணைபுரிகின்றன. பிரபஞ்சன் சமுதாய நிகழ்ச்சிகளைச் சிறுகதைகளில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். காதல், திருமணம், கல்வி, பிறரை ஏமாற்றுதல், குழந்தைகளின் நிலை போன்ற சமுதாயக் கருத்துக்கள் இவரது சிறுகதைகளில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழியின் செவ்வியல் தகுதிக்கு முதன்மையாக அமைந்தவை சங்க இலக்கியங்களாகும். பண்டைத் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் வரலாற்றுத் தரவுகளாகத் திகழ்பவை இவ்விலக்கியங்களே ஆகும். இதன் காரணமாக இலக்கியங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அல்லது காலத்தைக் காட்டும் கண்ணாடியென்று மொழிகின்றனர். சங்க இலக்கியப் பாடல்கள் கவிதையியல் நோக்கில் திணை, துறை அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுக்கப்பட்டவற்றுள் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்ததாக, நிலப்பின்னணியின் அடிப்படையில் புலவர்களால் இயற்றப்பெற்றுள்ளது. இவற்றுள் நெய்தல் நிலம் சார்ந்த மக்களின் சமூக உறவுகளை, அவற்றின் தனித்தன்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சமுதாயம் - விளக்கம்

மனிதனின் வாழ்வு சமுதாய சூழல்களில் உருவாகின்றது. தனிமனிதனின் உள்ளத்தையும் அவனைச் சார்ந்த சமூகத்தின் நிகழ்ச்சிகளையும் விளக்குவது 'சமூகவியல்' எனப்படுகிறது. சமுதாயம் என்பது மக்கள் கூட்டம் ஆதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். மனிதர்களின் கூட்டமைப்பு சமுதாயம் எனப்படுகிறது. 'சமுதாயம் என்னும் சொல்லுக்கு மக்களின் திரள்' என்று தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.
'சமூகம் கூட்டம், திரள், சமுதாயம்-கூட்டம், சங்கம் பொதுவானது. மக்களின்திரள், பொருளின்திரளஇ; உடன்படிக்கை' என்று கழகத்தமிழ் அகராதி கூறுகிறது. 'ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்டகாலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பே சமூகம'; என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. சமுதாயம் என்பது மனித இனத்தின் சமூகப்பொருளாதார அரசியல் ஈடுபாடுகளினால் தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகிறது. இவ்வமைப்புஇ 'ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கிவருகிறது என்றும் சமூகவியலார் குறிப்பிடுகின்றனர்' என்கிறார் சு.சக்திவேல்.

'மனிதன் தன்னந்தனியாக வாழ்பவன் அல்ல . கூடிவாழும் இயல்புடையவன். முனித வாழ்வு சமுதாய சூழல்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. மனிதனின் ஆளுகை சமுதாயத்தின் மீதும்,சமுதாயத்தின் ஆளுகை தனிமனிதன் மீதும் இறுகப்படிந்து ஒன்றையொன்று பற்றிக்கொண்டே இருக்கின்றன' என பா.முருகேசுவரி கூறுகிறார். தனித்தனிக் குடும்பஙகள் இணைந்து குழுவாயின. அக்குழுக்கள் ஒரேயிடத்தில் தங்கியபோது ஊர் உருவானது. புல ஊர்கள் சேர்ந்தபோது நாடு உருவானது,நாகரிகச் சமூகம் உருவான வரலாற்றின் சுருக்கமே இது. மனித இனக்குழு தங்களுக்குள் விதிமுறைகளை வகுத்துக்கொண்டும்,உறவு முறைகளால் பின்னப்பட்டும் வாழ்கின்ற அமைப்பு முறை சமுதாயம் எனப்படுகிறது. மனிதனின் ஒரு சமூக உயிரிமை மனிதனின் வாழ்க்கை சார்ந்திருத்தலை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளது. திருமணம் இல்லறத்தின் நுழைவாயிலான திருமணம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத இடத்தைப்பெறுகின்றது. 'திருமணம'; என்பது தற்போது சமுதாயத்தின் ஒரு தகுதியாகக் கருதப்படும் தேவை எனப்படுகிறது. 'திருமணம'; என்ற சொல் திரு 10மணம் எனப் பிரிக்கப்படுகிறது. மணம் என்பதே தமிழரின் பழைய மரபு 'ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு இனியவளாக வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக்கொள்வதனாலேதான் மணம் திருமணம் என்னும் பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன'. என்கிறார் சசிவில்லி. 'ஒரு பாதியாகிய பெண்ணும் மற்றொரு பாதியாகிய ஆணும் ஒன்று சேர்வதையே திருமணம் என்பர்' என ந. சுப்புரெட்டியார் கூறுகிறார்.

தமிழர்கள் காலங்காலமாக நம்பிக்கையில் அதிகமாக பற்றுள்ளவர்கள். அதனை நற்றிணையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தலைவி தலைவனின் பிரிவால் பெருந்துயரடைகின்றாள். அதனைக் கண்டு தோழியும் வருந்துகிறாள். அதற்கு அவள் கையாளும் பல உத்திகளுள் பல்லியை வைத்து ஆறுதல் கூறி தேற்றுவதும் ஒன்று என்பர். காப்பியஞ் சேந்தனர் என்னும் புலவர்.

தோழி, தலைவியை நோக்கி நாம் குறிப்பிட்ட இடங்களிலே இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக நிகழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம்பக்கமாக அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது என்பாள்.

'இடுஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்'
(நற்-
246)

மேற்கண்ட பாடலின் மூலம் பல்லி நெடுஞ்சுவரில் தங்கி இருப்பதும், இனிய குறிகளாக அதன் ஒலிகள் தோன்றுகின்றன என்றும் தோழி கூறுவதைக் காணமுடிகின்றது.

விழாவும் குயவன் ஊருக்கு அறிவித்தலும் - தோழிக்கூற்று

விழா ஊரில் நடைபெறுவதை மக்களுக்குக் கூறுபவர்களாக குயவர்கள் இருந்துள்ளார்கள். இத்தகைய குயவரிடம் தோழி பேசியுள்ளார் என்று கூடலூர் பல்கண்ணனார் நற்றிணை 200வது பாடலில் தமிழர்களின் செயற்பாடுகளை பதிவுசெய்துள்ளனர். தலைவனைப் பிரிந்த தலைவி, வருத்தத்தினால் காத்திருக்கிறாள். தலைவனோ பரத்தையிடம் இடம் சென்று உறவை நாடி இன்புற்றான். பின்னர் வெறுப்பு ஏற்பட்டது. தலைவி நம்மை எப்படி சேர்த்துக் கொள்வாள் என்று அச்சப்பட்டு பாணனைத் தூது அனுப்புகிறான். பாணனைக் கண்டதும் தலைவியின் உள்ளம் நெகிழ்ந்தது, இதைக் கண்ட தோழி, விழாவினை அறிவிப்போனாக வந்த குயவனிடம் பேசுவாள் போல பாணனுக்கு மறுப்புக் கூறுகின்றாள்.

'கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல்குடி
யாறு கிடந்தன்ன அகல்நெடுந்தெருவில்
சாறு என நுவலும் முதுவாய்க் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ'
(நற்
-200)

இருபுறமும் அரும்பிட்டுக் கட்டிய ஒரு குதிரைப் போன்ற ஒள்ளிய கொத்தினைக் கொண்ட நொச்சியது மாலையைச் சூடிக் கொண்டு, ஆறு குறுக்கிட்டு இருந்தாற் போல அகன்ற நெடிய தெருவினிலே வந்துள்ளவனே! இற்றை நாளில் இவ்வூரிடத்தே திருவிழா நடைபெறா நின்றது – எனக் கூறும் அறிவு முதிர்ச்சிகொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அந்த இடங்களில் உள்ளோர்க்குச் சொல்லிச் செல்க என்பாள் தோழி. மேற்கண்ட சான்றின் மூலம் குயவர் ஊர்விழாவைக் கூறுவதையும், அவர்களிடம் தோழி பேசுவதையும் காணமுடிகின்றது.

கொல்லிப்பாவையின் அழகும் காத்தலும்

தலைவன், தலைவியைக் கண்டு காதலுற்றான். அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினான். அதனைக் கேட்ட பாணன், அவள் குறவனின் அன்புக்குரிய இளமகள் அவள். அவளை நீ பெறுவது அரிது என்றான், மேலும், நீ நெருங்க முடியாத அளவுக்கு பெருங்காவலை உடையவள் என்றும் கூறினான். உன் சொல்லைக் கேட்டு நடக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையாத சிற்றிளம் பருவத்தையுடையவள், அத்தகையவளை காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந்தாது என்றான்.

இதற்கு மறுமொழி கூறிய தலைவன், வேர்பலா மரங்களையுடையது கொல்லிமலை. அதனை தெய்வம் காவல் காத்து வருகின்றது. நெடிய கோட்டினின்றும் விழும் வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்தில் பாறையிடத்தில் உள்ளது கொல்லிப்பாவை. காற்று மோதி இடித்தாலும் மிகுதியான மழைத்துளிகள் விழுந்தாலும், இடிகள் சிதைந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய பல இயற்கையினாலான ஊறுகள் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது. இந்த பெருநிலமே நிலநடுக்கம் ஏற்பட்டாலும் காப்பாற்றும் கொல்லிப்பாவை. ஏனென்றால் தான் கொண்டுள்ள, கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மைக் கொண்டது அக்கொல்லிப்பாவை. எனவே, பாங்கனே நீ என்ன கூறினாலும், தலைவியின் அழகும், அதனால் என் பாதுகாப்பும் கொல்லிப்பாவையைக் கண்டதுபோல் உள்ளது என்ற தன் உள்ளக் கருத்தைக் கூறுகின்றான். கொல்லிப் பாவை நிலத்தையும் வளத்தையும் காப்பதுமட்டுமின்றி பேரழகாக இருந்ததை தமிழரின் தொன்மத்தை இச்சான்றுகள் மூலம் உணரலாம்.

'மாலயுறை குறவன் காதல் மடமகள்
பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள்
சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள்
உள்ளல் கூடாதென்போய் - மற்றும்
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு'
(நற்
–201)

தொன்மங்களும் மகளிரும்

தமிழ் மக்களிடையே கார்த்திகை மாதங்களில் தீபவழிபாடு செய்வது நற்றிணை 202ம் பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவன் தலைவியுடன் உடன்போயினன், அப்பொழுது தலைவிக்கு துன்பம் தவிர்க்க சில சான்றுகளைக் கூறி அவளுக்கு மகிழ்வையும் ஊட்டுகின்றான். இந்த உரையாடலில் கார்த்திகை மீன் பொருந்தியதும் அறம் செய்வதற்கு அமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாகச் செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப் பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக என்றான் தலைவன்.

'அறுமீன் கெழிஇய அறம்செய் திங்கட்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே'
(நற்.
202)

மேற்கண்ட சான்றின் வழி அறம் செய்வதற்குரிய மாதமாக கார்த்திகையும், திங்களின் முக்கியத்தையும் தமிழர்களின் தொன்மைகளாக உள்ளதைக் காணலாம்.

எட்டுத் தொகை நூல்களுள் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்ற நூல் நற்றிணையும் ஒன்றாகும். இதில் தமிழக வரலாறும், பண்பாடும் தொன்மங்களும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக தொன்மங்களுள் மகளிர் தொடர்பானவற்றை ஆராயும் நோக்கில் இவ்வாய்வு காண முற்படுகின்றது.

உருகெழு தெய்வம் மறைந்திருக்காது

தலைவன் களவொழுக்கத்தினையை நாடி வருதலினை விரும்புகின்றான். முறையாக மணந்து கொள்ள வேண்டும் என்பதில் நாட்டமில்லாமல் இருக்கின்றான். பகற்குறி நாடி வந்த அவனிடம் தோழி சில கருத்துக்களைக் கூறுவதாக உலோச்சனார் நற்றிணை 398 ஆம் பாடலில் கூறுகின்றார்.

அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந்திருக்காமல் நடமாடிய படியிருக்கும். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேலைத் திசைக்குச் சென்று மறையும். ஆனால் நீயோ, ஒளிந்து ஒளிந்து தலைவியைச் சந்தித்து நலம் பெறுவது பொறுக்காமல் தலைவி அழுது கொண்டிருக்கிறாள். எனவே, நீயே தலைவிக்கு ஏற்பன கூறி ஆற்றுவித்துப் போவாயாக என்ற தலைவனுக்குத் தோழி கூறுவள். இதன் மூலம் தெய்வம் நேரடியாக நடமாடும் என்னும் கருத்துடைய நம் தொன்மையை உணரலாம். இதனையும் தோழி என்னும் பெண் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.

'உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே
விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே
பாணர் இளமுலை நனைய
மாணெழில் மலர்க்கண் தெண்பனிக் கொளவே'
(நற்.
398)

கண்ணெதிரே காணும் கடவுள்

தோழி – தலைவனுக்கு தலைவியைப் பற்றி சிறப்பாகக் கூறுவாள். தலைவி, எமக்கெல்லாம் கண்ணெதிரே காண்கின்றதற்குரிய ஒரு கடவுள் போல்வானும் ஆவாள் என்று தோழி தலைவியைப் பாராட்டி தலைவனுக்குக் கூறுவாள். நீ வந்து அவளை சந்திக்க முயல்கின்றாய். நான் உன் கருத்தை தலைவிக்குக் கூறுவேன் என்பள் தோழி.
குறிப்பாக படர்ந்து செல்லும் மிளகினது வளமான செழித்த கொடியானது, தூங்கிக் கொண்டிருக்கும் புலியினது கோடுகள் அமைந்த மேற்புறத்தைத் தடவிவிடும் என்ற கருத்தைக் கூறுவாள். புலியைத் தொட பலரும் பயப்பட மிளகின் கொடி தொடுவதைப் போல தலைவி தெய்வம் போன்று இருந்தாலும் உன்னாலும் முடியும் என்று நம்பிக்கையூட்டும் இறைத்தொன்மத்தைக் குறித்துக் கூறும் போக்கைக் காணலாம்.

'எம்பதற் தெளியள் அல்லள் எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லலோ – பெரும
ஆய்கோல் மிளகின் அமலையம் கொழுங்கொடி
துஞ்சுபுலி வலிப்புறம் தைவரும்'
(நற்.
234)

வெறியாட்டு

தமிழ் குடும்பங்களிலே மகளிர்க்கு நோய் வந்தால் வெறியாட்டு செய்வது வழக்கம். குறிப்பாக தலைவிக்கு தலைவன் மீது காதல், பலபடியாக தலைவன் மீது தலைவி காதல் கொண்டாள். ஆனால் தலைவனோ தலைவியைப் போன்று ஆழமாகக் காதல் கொள்ளவில்லையே என்று தோழி வருந்திக் கூறுகிறாள் என்ற நற்றிணை
268ம் பாடலில் வெறியாடியக் காமக்கண்ணியார் என்னும் புலவர் கூறுகின்றார்.

தோழி முற்றத்தில் புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கினாலே மெய்ம்மை தேர்ந்து கூறுவோனாகிய வேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்னை ஏற்பாடு செய்தனள். மணங்கமழும் தேன் அடைக்கும் வேண்டியளவு தேன் ஊறிக் கொண்டிருக்கின்ற நாடனான நம் தலைவன். அவன் மீது ஆராக் காதல் கொண்டு நோய் ஏற்பட்ட தலைவி போன்று தலைவன் நோயால் பாதிக்கப்படவில்லையே. அதற்குரிய காரணம்தான் என்ன? இதனை வேலனிடம் கேட்போமா? என்பதாக தோழி கூறுகின்றாள்.


'பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே
காதல் செய்தலுங் காதலம் அன்மை
யாதனிற் கொல்லோ? தோழி – வினவுகம்'
(நற்.
268)


மேற்கண்டவற்றின் மூலம் வேலன் வெறியாட்டின் மூலம் புதுமணலைக் கொண்டு செய்யும் பழமை முறையையும், கழங்கை வைத்து உண்மை அறியும் முறையையும் அதுவும் மகளரிர்க்காக மகளிர் செய்யும் தொன்மையையும் உணரலாம்.

துடி, பறை முதலிய வாச்சியங்கள் முழங்கல்

களவு ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தலைவன் தலைவியை மணந்து கொள்ளுமாறு விரைவுபடுத்த வேண்டுமென்று கருதுகின்றாள் தலைவியின் தோழி. இதனை நற்றிணை
322 வது பாடலில் மதுரைப் பாடலாசிரியன் சேந்தன் கொற்றனார் கூறுகிறார். குறிப்பாக தலைவனின் தண்மை கமழுகின்ற பரந்த மார்பினைத் தனக்கே உரிமையுடையதாக நீயும் பெறவில்லை. அதனால் நின் அழகிய நுதலிடத்தே பசலையும் படர்ந்தது. பிறரால் தீர்க்க முடியாத உன் காமநோயை அணங்கு தாக்கு இது என்ற அன்னை அறியும்படி வேலன் கூறுவான். இனிய வாச்சியம் பலவும் ஒலிக்கப் பாடியபடியே பலவாகிய பூக்களைத் தூவியும் முருகனைத் துதிப்பான். இவ்யாட்டினைப் பலியாக ஏற்றுக் கொள்வாயாக என்று கூறி, அதனை அறுத்துப் பலியும் கொடுப்பான். அவ்வாறு செய்யவும் நின் நோயும் தணிவதாயினால் எவ்விடத்தும் இதனிலும் கொடியதான செயலும் பிறிதொன்றும் இல்லை கண்டாய்! அதுதான் உண்மையாமோ? என்றாள்.

'ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனிற் கொடியது பிறிதொன் றில்லை
தன்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது
நன்னுதற் பசந்த படர்மலி அருநோய்
அணங்கென உணரக் கூறி வேலன்
இன்னியங் கறங்கப் பாடிப்
பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே'
(நற்.
322)

மேற்கண்டவற்றின் மூலம், தலைவிக்கு வெறியாட்டு செய்வதனாற் தீரும் என்பது கொடுமை என்று கூறுவதையும், இனிய ஓசைகளை எழுப்புவதையும், பாடல் பாடி பல பூக்களைக் கொண்டு பலியிடலும் அறிய முடிகின்றது.

முடிவுரை:

செங்கீரையாட அழைத்த கண்ணனின் அழகையும், அவன் செய்த அரிய செயல்களையும், கண்ணன் அணிந்துள்ள அணிகலன்களையும் இவ்வாய்வுக் கட்டுரை விளக்கியதை உணரலாம்.
 


அடிக்குறிப்புகள்:


1. தமிழ்ப் பேரகராதி, ப.682.
2. கழகத் தமிழ் அகராதி,ப.429.
3. கலைக்களஞ்சியம்,தொகுதி-4 ,ப.477.
4. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.245.
5. நா. வேதமணி மனுவேல், சமூக உளவியல், ப.21.
6. நற்றிணை,கழக வெளியீடு,சென்னை.
7. சி.இ.மறைமலை, இலக்கியமும் சமூகவியலும்,ப.72.
8. க.பாஸ்கரன், சமுதாயத்தத்துவம்,ப.28.
9. பா.முருகேஸ்வரி, தெற்கத்திப்படைப்புலகம் ஆய்வுக்கோவை, ப.376.
10. சசிவல்லி,தமிழர்திருமணம், ப.7.
11. ந.சுப்புரெட்டியார்,இல்லறநெறி, ப.7.
12. சரவண ஆறுமுக முதலியார்,தமிழர் திருமணமுறைகள் கட்டுரை, ப.351.



முனைவர் பூ.மு.அன்புசிவா
149,உறரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்
கோயம்புத்தூர் -
641 007
பேச:
098424 95241.