தாய்மொழிக் கல்வியின் பரிணாம வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


முன்னுரை

                              'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
                             
கற்றார் ரனைத்திலர் பாடு

என்ற திருவள்ளுவரின் திருக்குறள் படி, தமிழ் இலக்கியங்கள் எந்த மொழியில் எழுந்தாலும் அவற்றுள் சிலவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துச் செறிவுகள்; பற்றிப் படர்ந்திருப்பதை நாம் காணலாம். அன்று, நம்மில் அதிகமானோர் இவ்வாறான இலக்கியங்களை, இலக்கியக்கண்கொண்டு மாத்திரம் பார்த்ததினால், இலக்கிய நயத்தை மட்டும்தான் உள்வாங்கிக் கொண்டனர். அவற்றில் அமைந்த அறிவியல் அவர்களுக்கு அன்று புலப்படவில்லை. இன்றைய மக்களின் வாசிப்புப் பழக்கம் மாறுபட்டதனாலும், அறிவியல் ஆர்வம் கூடியதனாலும், அவர்கள் விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும்  ஒரே தட்டில் வைத்து ஆய்வு செய்யப் பழகி வருகின்றனர். இதனால், விஞ்ஞானிகள் இலக்கியத்தில் செறிந்துள்ள அறிவியலைத் தங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பல புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து அரும் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். விஞ்ஞானிகளுக்கு ஆய்வின்பொழுது பலபல சந்தேகங்கள் எழுவது இயல்பு இவற்றை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பொழுது ஆய்வின் தரம் உயர்நிலை அடைகின்றது.

கல்வியறிவு

                                  'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
                 
        நிற்க அதற்குத் தக
.' (குறள் 391)

இதன் பொருளாவது:- 'கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். இவ்வண்ணம் கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்கவேண்டும்.' என்பதாகும். 'கற்க' – எப்படி? 'கசடறக் கற்க!' – என்றார். 'கற்றபின்'- என்ன? 'நிற்க அதற்குத் தக'- கற்ற கல்விக்கமைவாக நிற்க! என்றார். ஒன்றே முக்கால் அடியில் திருவள்ளுவர் காட்டும் பாங்கிது.

மனிதன் வாழ்வு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்வுக்கு வேண்டுவது கல்வியாகும். வாழ்வு சீராக அமைவதற்கு அவனுக்குத் தேவைப்படுவது ஒரு வேலையாகும் அதற்கு அவனுக்குப் படிப்பு வேண்டும் மனிதனின் அக வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கியக் கல்வியே வாழ்க்கைக் கல்வியாகும். புற வளர்ச்சிக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உதவுகின்றன. அகம், புறம் சார்ந்த வளர்ச்சிகள் இணைந்தவைதான் வாழ்க்கையின் முழுமையாகும். ஆனால் அகவொழுக்கமின்றி மனிதன் மனிதனாக வாழ முடியாது. மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டக்கூடியது அவன் பெற்ற பகுத்தறிவும், கல்வியுமாகும். சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதும் கல்வியே.  

'கல்வி அழகே அழகு', 'கல்வியில்லாச் செல்வமும் கற்பில்லா அழகும் கடுகளவும் பிரகாசிக்காது', 'கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்', 'கல்வி கரையில, கற்பவர் நாள் சில', 'கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல', 'கல்விக்கு ஒருவர்; களவுக்கு இருவர்' என்பவை கல்வியைப் பற்றிக் கூறும் பழமொழிகளாகும்.

                                'காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு
                               
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு...'

என்று பாரதி; பாப்பாப் பாட்டு இசைத்துச் சென்றுள்ளார். காலையில் கற்கும் கல்வி பசுமரத்தில் ஆணி புகுவதுபோல் சுலபமாய்ப் பதிந்து விடும். இதனால் குழந்தைகள் காலையில் எழுந்து படிக்க வேண்டுமென்று பாரதியார் கூறியுள்ளார்.

'எத்தகைய கல்வி ஒழுக்கத்தை உருவாக்குகிறதேர் மனத்தை உறுதிப்படுத்துகிறதேர் அறிவை விரிவாக்குகிறதேர்  எதன் மூலம் ஒருவன் தன்னையே சார்ந்திருக்க முடியுமோ அத்தகைய முழுமையான மனிதனை உருவாக்கும் கல்வியே நான் வேண்டுவது.' என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

இப் பெரு நோக்கங்களை நிறைவேற்றும் அளவுக்கு நம் மத்தியில் நிலவும் கல்வி முறை அமைந்துள்ளதா என்பது கேள்விக்குரியதாகும். பயன்பாடு, பணிவு, பண்பாடு, ஆகியவற்றைக் கல்வியானது அளிக்க வேண்டும். பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ளக் கூடிய கல்விமுறைதான் இன்று நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டப்படுவதாகும். அறிவியல் வளர்ச்சி நீண்ட பெரிய உலகைக் குறுக்கி வைத்து விட்டது. அதே நேரம் மனிதநேயம் மங்கி மறைந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றது.  

இன்று பட்டம் பெறுவதற்கும் பொருள் ஈட்டுவதற்கும்தான் கல்வி வேண்டப்படுகிறது ஆனால் இன்று அறிவியல,; தொழில்நுட்பம், ஆய்வியல் போன்றவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்தி  வருவதை நாம் போற்றவேண்டும். சிறந்த இலக்கியங்கள் என்றும் சமுதாய மாற்றத்துக்கு உறுதுணையாக உள்ளன. சிறந்த இலக்கியங்கள் ஆய்வைப் பெருக்கி, திறனை வளர்த்து, அறிவை விரித்து, ஆக்கம் உண்டாக்கி, மொழி வளம் கொடுத்து நிற்கின்றன.

வாழ்வியல்

தமிழர் வாழ்;வியலில, அறவியலும் அறிவியலும் இரண்டறப் பற்றிப் படர்ந்து ஆல் போல் விழுதெறிந்த விருட்சமாய் அமைந்துள்ளன. பண்டைத் தமிழர் தம் வாழ்வியலை அகம், புறம், என்று இரு கூறாக வகுத்துள்ளனர். புறம் புறவாழ்வில் மேற்கொண்டு இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று ஆகியவற்றைப் பேணுவதற்கு மேற்கொள்ளும் ஆண்மை சார்ந்த பணிகளும், போரியல் மரபும் இப் புறத்தில் பேசப்படுகின்றன. அகம் அக வாழ்வில் அன்பின் எழுச்சி சார்ந்த நெறியோடு வாழ்ந்ததன் சிறப்பினைக் கூறுகின்றது. இங்கு கன்னியொருத்திக்கும் காளையொருவனுக்கும் இடையே வளரும் காதலன்பு பற்றிப் பேசப்படுகின்றது.

ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் ஆகிய மூன்று நிலைகளை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும் இலக்கண நூலார் கூறுவர். அன்புடைக் காமம் என்பதைக் குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல் திணை என ஐவகை ஒழுக்கக் கூறுகளாக வகுத்துள்ளனர். அதன்படி  'ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்' என்ற தாரக மந்திரத்துடன் வாழ்ந்தவன் தமிழன்.

இணைந்திருப்பதே வாழ்க்கையின் சிறப்பாகும். அதேபோன்று கலையும், விஞ்ஞானமும் இணைந்தே இருத்தல் வேண்டும். மேற்கு நாடுகளில் விஞ்ஞானம் அதி உயர் நிலைக்கு வளர்ந்துள்ளது. ஆனால் அங்கு  வாழ்வியல் வளரவில்லை. ஈழத்தில் வாழ்வியல் வளர்ந்த அளவிற்கு விஞ்ஞானம் வளரவில்லை. கற்பனைத் திறனுடன்தான் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. கலையும், விஞ்ஞானமும் பற்றிச் சில செய்திகள் இவை:-

எச்.ஜி.வெல்ஸ இவர்  புகழ் பெற்ற விஞ்ஞானக் கற்பனை சார்ந்த ஆக்கங்கள் எழுதுவதில் வல்லவர். இவர் 'இயந்திர நேரம்', 'உலக யுத்தம்', 'காணமுடியாத மனிதன்', 'சந்திரனில் முதல் மனிதன்' ஆகிய சிறந்த இலக்கியங்களை மக்களுக்குக் கொடுத்துள்ளார். 1969ஆம் ஆண்டில் முதல் முதலாகச் சந்திரனில் காலடி பதித்த ரஸ்ய விஞ்ஞானிகளுக்கு 'சந்திரனில் முதல் மனிதன்' என்ற  கட்டுரை  உந்துகோலானது  எனலாம் மேலும், இவர்  'வரலாற்றின் எல்லைக்கோடு', மனித குலத்தின் வேலை, செல்வம். நற்பேறு' போன்ற சமுக அரசியல் கோட்பாடுகளுடன் சேர்ந்த ஆக்கங்களை ஆக்கித் தந்து தான் ஓர் இலக்கியவாதி என்பதையும் நிரூபித்துள்ளார்.

இலக்கியத்தில் விஞ்ஞானம்

இலக்கியத்தில் பரவலாக நிறைந்த விஞ்ஞானம் பொதிந்திருக்கின்றது. அறிவியலார்க்கும் இலக்கியவாதிகளுக்கும் அமைந்துள்ள உள் நோக்கு, புற நோக்கு, முற்போக்குச் சிந்தனை, உணர்வு, தத்துவம், ஆக்கம் ஆகியவை அத்தனையும் பொதுவானவையாகும். இலக்கியவாதிகளை வெறும் படைப்பாளிகள் என்ற பட்டியலில் சேர்த்துவிட முடியாது. அவர்களின் ஆக்கங்களில் இடம் பெறும் அறிவியல் சிந்தனைகள் பல உள. அவை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாய் அமைகின்றன. இதோ சில உதாரணங்கள்:-

தொல்காப்பியர்

இவர் யாத்த தொல்காப்பியம் தமிழின் முதல்; இலக்கண, இலக்கிய நூலாகும்.   உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வகைப்படுத்தி ஒரு மேல்நிலை விஞ்ஞானியை விஞ்சும் முறையில் நிரல்படுத்திக் கூறியுள்ள பாங்கினையும் காண்கின்றோம்

                         'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
             
     இரண்டறி வதுவே அதனொடு நாவே
             
     மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
             
     நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
             
     ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
             
     ஆறறி வதுவே அவற்றொடு மனனே
             
     நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
.'- (பொருள்.571).

அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சி, அறிவு என்பன உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வுக்குத் தொல்காப்பியர் சூத்திரம்தான் அடிப்படையாக அமைந்ததென்பர்.

இன்னும், தாவர இனங்கள் பற்றியும், உயிர் இனங்கள் பற்றியும், அவற்றின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் பற்றியும் உலகுக்கு அளித்த சி.ஆர். டார்வின் (தி.பி. 02.02.1840—1913, கி.பி. 02-02-1809—1882) அவர்களின் ஆய்வுக்கு முன்னோடியாய் அமைந்தவர் தொல்காப்பியரேயாவார்.

இந்த உலகம் ஐம்பெரும் பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் ஆனது என்பது அறிவியல் உண்மை. இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால்,

              'நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
              
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
....'- (தொல்-635)

என்ற பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.

புறநானூறு கடைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் உள்ள அறிவியல்  சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில்:- 'செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைத் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்' என்று விண்ணியல் விஞ்ஞானம் விவரமாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.

                   'செஞ்ஞா யிற்றுச் செலவும்
                   
அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
            
   பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
            
   வளி திரிதரு திசையும்,
            
   வறிது நிலைஇய காயமும், என்றிவை
            
   சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
                   
இனைத்து என்போரும் உளரே
,... --(புறம். 30 1-7)

                                                        -உறையூர் முதுகண்ணன் சாத்தனார்-                    

ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii) வானையும், (iii) காற்றையும், (iV) நெருப்பையும், (V) நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் சங்கப் பாடலில் பாடியுள்ளார்.

                   'மண் திணிந்த நிலனும்,
                   
நிலம் ஏந்திய விசும்பும்,
                   
விசும்பு தைவரு வளியும்,
                   
வளித் தலைஇய தீயும்,
                   
தீ முரணிய நீரும்
, ... - (புறநானூறு02)

இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

விஞ்ஞானத்தின் ஆக்கமும் அழிவும்

விஞ்ஞானிகளின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் முதிர்வு நிலைகள் அவர்களின் ஆய்வின் போது மனத்தில் எழும் சந்தேகங்களிலும், கேள்விகளிலும்தான் தங்கியுள்ளன. எல்லா விஞ்ஞானிகளும் தமது கண்டுபிடிப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் நன்மையளிக்கும் என்ற பெரு நோக்குடன் ஆய்வுகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் எல்லாக் கண்டுபிடிப்புகளும் சமுதாயத்துக்கு ஆக்கத்தையும் அழிவையும் தருவனவாய் அமைகின்றன. ஆக்கத்தைவிட அழிவுகள்தான்  கூட என்றும் கூறலாம்.

ஆல்பிரடு நோபெல் (யுடகசநன ழேடிநட தி.பி.21.10.1864—10.12.1927, கி.பி. 21.10.1833 – 10.12.1896)  என்னும் சுவீடன் நாட்டு விஞ்ஞானி வெடிபொருளைக் கண்டுபிடித்தார். இதை மக்கள் அழிவு வேலைகளுக்கே பெரிதும் பயன்படுத்தினர். யுத்த காலத்தில் அணு குண்டு, வெடி குண்டு, எறி குண்டு, துப்பாக்கிகள் போன்றவற்றின் பயன்பாட்டால் இறந்துபட்ட மக்கள் தொகையினை நாம் அறிவோம்.

இவ்வுலகில் சென்ற நானூறு ஆண்டுகளாக விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இயற்கையை விஞ்ச வேண்டுமென்ற விஞ்ஞானிகளின் ஆய்வின் வேகம,; மக்கள் மத்தியில்  ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது என்பது உண்மையாகும்.

விஞ்ஞானத் துறைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை. அவற்றுள் பலவும் தனித்து இயங்குவதால் மனித சமுதாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு மிக வேண்டப்பட்ட காற்று, தண்ணீர் என்பன மாசுபட்டதால், உயிரினங்கள் அனைத்துமே அழிவை நோக்கிய வண்ணம் உள்ளன. தற்பொழுது மாசடைதல் ஓர் உலகப் பிரச்சினையாய் அமைந்து வருகின்றது.

அறிவியல் விஞ்ஞானம்  மனித வாழ்வின் வெற்றிக்கு உகந்த ஆக்கங்களை வழங்கவில்லை என்று கூறலாம். ஆனால், மூடபக்திக்கு எதிராக, கொடு நோய்களுக்கு எதிராக, சுற்றாடற் பாதுகாப்பிற்காக, வளங்களைக் காப்பதற்காக, உலக அமைதிக்காக ஆகிய சமுகம் சார்ந்த போராட்டத்திற்கு விஞ்ஞானம் உதவி நிற்கின்றது.

அன்றைய தமிழனிடம் ஆட்கொல்லி நோய் தோன்றவில்லை. பின்னாளில் மக்களிடையே எழுந்த பண்பாட்டுச் சீரழிவினால் ஆட்கொல்லி நோய் தோன்றியது. தோன்றிய நோயைத் தணிக்க விஞ்ஞானம் உதவுகின்றது. ஆனால் தமிழர் தம் கோட்பாடாம் 'ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்' என்னும் பண்பே அவர்களுக்கு என்றும் மருந்தாக அமைந்திருந்ததைக் காண்கின்றோம். ஆட்கொல்லி நோய்க்கு அகப்படாதது இல்லற வாழ்வியல் இன்பம் என்பதை  பண்டைத் தமிழர் நிரூபித்துக் காட்டியுள்ளனா.; ஆட்கொல்லி நோய்தோன்றாதிருக்க இன்னும் விஞ்ஞானத்தால் விடைகாண முடியவில்லை.

தொகுப்பரை:

இதுகாறும் தமிழர் வாழ்வியல், அறிவியல், அறம், புறம், ஒழுக்கக் கல்வி, அறிவுக் கல்வி, தாய்மொழிக் கல்வி, கலையும் விஞ்ஞானமும், இலக்கியத்தில் விஞ்ஞானம், மரபியல், புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதன், பேய், கணங்கள், அசுரர், முனி, தேவர் ஆகிய பரிணாம வளர்ச்சி, இலக்கியத்தில் ஞாயிறு, திங்கள், மாமழை, அணு விஞ்ஞானம், ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிரினங்கள், ஐம்பூதங்களான நிலம், தீ, நீர், வளி, விசும்பு, யாகசாலையில் எழுந்த மந்திரங்கள், தொழிற்சாலைகளில் இயங்கும் எந்திரங்கள், விஞ்ஞானக் கல்வி, விஞ்ஞானத்தின் ஆக்கமும் அழிவும் போன்ற விடயங்கள் மேலே பேசப்பட்டுள்ளன. வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு விஞ்ஞானப் பாடங்களும், கலை இலக்கியங்களும், மொழி அறிவும் மிக மிக வேண்டற்பாலன. கல்வி முழுமையடைய வேண்டுமெனில் அங்கு விஞ்ஞானப் பாடங்கள் அமையவேண்டும். வாழ்க்கையானது முழுமையடைவதற்கு கலை, இலக்கியங்கள் நிரம்பத் தேவைப்படுகின்றன. நவீன உலகம் சமைக்க, கலை ஆர்வமும், இலக்கிய இன்பமும், விஞ்ஞான அறிவியற் பயனும், தாய்மொழி அறிவும், அறநெறி வாழ்க்கை முறையும் மிக மிக வேண்டற்பாலனவாகும்.


முனைவர் பூ.மு.அன்புசிவ
உதவிப்
பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641 028
பேச
: 9843874545, 09842495241.