ஏலியன்கள் இருக்கிறார்களா?

கனி விமலநாதன்


லியன்கள் (வேற்றுக் கிரக மனிதர்கள்) என்பது இந்நாளில் பெரிய அளவில் பேசப்படுகிற விடயமாகும். ஏலியன்கள் பற்றிய பல்வேறு பதிவுகள் உலக நாடுகள் எங்ஙனும் இருப்பினும், பொதுமக்களிடையே வேற்றுக் கிரக மனிதர்கள் பற்றிய நம்பிக்கை பெருமளவில் இல்லை. ஏனெனில், கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வியைப் போன்றதுதான் இதுவும். கடவுள் விடயத்தில் நம்பிக்கை என்பதைக் கொண்டு பதிலைக் கூறலாம். ஆனால் ஏலியன்கள் விடயம் அப்பிடியில்லை. படித்தவர்கள் முதற் பாமரர்கள் வரை ஆதாரங்களைக் கேட்கிறார்கள். ஏலியன்கன் பற்றிய விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்தாலும் சிலர் 'எனக்கு ஒன்றும் ஏலியன் அனுபவம் இல்லையே!' என்று கூறி நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் மறுத்தாலும், ஏலியன்களுக்கான விஞ்ஞான விளக்கங்களில் 'சிலவற்றை' அறிந்து கொள்வோம்.

நிலவினைப் பொறுத்தவரையில் 1969ல் இருந்து நாங்கள் வேற்றுக் கிரக மனிதர்கள்தான். எங்களது அப்பலோக்கள் இனம் தெரியாத பறக்ககும் பொருட்கள் ஆகிவிட்டன. மேலும் 2030ல் நிலவில் ஒரு குடியேற்றத்தையும் செய்வதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கூடவே செவ்வாயிற் குடியேறுவதற்கும் தடபுடலான ஆயத்தங்கள் நடக்கின்றன. இவற்றை ஊக்குவிக்கு முகமாக அண்மையில் இயற்கை எய்திய பிரபல கோட்பாட்டியல் விஞ்ஞானி ஸ்ரீபன் ஹவ்கிங் 'இன்னமும் 100 வருடங்களில் புவியில் மனிதர் வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்' என்று பயமுறுத்துகிறார். இவை புவியல்லாத வேறு கிரகங்களுக்கு எங்களை வேற்றுக் கிரக மனிதர்கள் ஆகவும் எங்கள் விண்கலங்களை இனம் தெரியாத பயக்கும் பொருட்களாவும் ஆக்குவதற்கு முடுக்கி விட்டுள்ளன.

புவியில் மனிதரின் தோன்றலுக்குள்ளும் ஏலியன்களைக் கொண்டு வருகின்றார்கள் சிலர். புவி தோன்றி, 4,600 மெய்யிரம் (மில்லியன்); ஆண்டு ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஒரு நெருப்புக் கோளமாக இருந்த புவியின் மேற்பரப்பு, கால ஓட்டத்தில்; குளிர்ந்து இறுகி, நீர் நிலைகளையும் கொண்டதாகி விட்டது. அந்நீர்நிலைகளில் புவியின் மேற்பரப்பில் ஏற்பட்ட இரசாயன மாற்றங்களினால், உயிரினம் ஒன்றின் அடிப்படைக் கூறானா அமினோ அமிலங்கள் தோன்றின. பின்னர், இவ்வமினோ அமிலங்களின் சேர்க்கையும் தொடர்ச்சியாக ஏற்பட்ட பரிணாம மாற்றங்களும் இன்றுள்ள மாந்தரைத் தோன்றுவித்தன. அதிலும் சற்றுப் புத்திசாலி உயிரினமான 'ஹோமோ'க் குடும்பம் தேன்றிச் சில மெய்யிரம்; ஆண்டுதான் ஆகிறது. மேலும் ஹோமோக் குடும்ப வரிசையில் ஹோமோ சேபியன்களாகிய மனிதர் தோன்றி, இருநூறாயிரம் வருடங்களுக்கு மேலாகவில்லை. அதிலும் மனிதர், தம்மைச் சிறப்பு விலங்குகளாக, புத்திசாலிகளாகக் காட்டத் தொடங்கி 55 ஆயிரம் ஆண்டுதான்; ஆகிறது. இப்படியாக புவியில் எங்களின் இப்போதய இருக்கைக்கான விளக்கத்தை விஞ்ஞானம் தருகிறது. சரி, இங்கு எங்கு ஏலியன்கள் வருகிறார்கள் என்கிறீர்களா?

ஓரு புள்ளியின் புள்ளிப் பருமனான 'பிக்பாங் ஒருமம்' என்பதிலிருந்து எங்கள் பிரபஞ்சம் தோன்றி 13,600 மெய்யிரம் வருடங்கள் ஆகிறது. இந்தக் காலப்பகுதிக்குள்தான் பேரண்டம் தன்னை இவ்வளவு பெரியதாக்கி, தன்னுள் இத்தனை விண்மீன்களையும் கோள்களையும் உண்டாக்கிக்; கொண்டது. அப்படியான பல மெய்யிரம் மெய்யிரம் கோள்களில் ஒன்றான புவியிலே புத்திசீவிகளாக நாங்கள் தோன்றி வாழ்கிறோம். ஆனால் பேரண்டத்தின் எல்லாக் கோள்களுமே ஒரே காலத்திற் தோன்றியவை அல்ல. பல ஆயிரம் பில்லியன் கோள்கள் புவிக்கு முன்னரே பேரண்டத்துள் தோன்றி விட்டன. அவற்றில் சில புவியினைப் போன்ற சூழலில் இருந்திருக்கலாம் அல்லவா. அப்படியாயின் அங்கும் மனிதரை ஒத்த அல்லது வேறுவகையிலான உயிரினங்கள் தோன்றியிருக்குதானே. அவற்றிச் சில தோன்றி பல ஆயிரம் மில்லியன் ஆண்டு கூடக் கடந்திருக்கலாம். அப்படியான சில உயிரினங்கள் இருந்தால் அவற்றின் அறிவியல் நிலை, தொழில்நுட்ப நிலை என்பவை எங்களை விட மிகவும் மேம்பட்டட நிலையில் இருக்கும் என்பதில் ஐயமில்லையல்லவா!

வெறும் இருநூறாயிரம் ஆண்டு வளர்ச்சி கொண்ட நாங்களே சந்திரனில் காலடி வைத்து விட்டோம் என்றால், மில்லியன் வருட வளர்ச்சியுள்ள புத்திசீவி உயிரினங்கள் இருந்தால், அவற்றின் வான் கையாளல் எப்படியிருக்கும்? இதன் பதில்தான் ஏலியன்கள் சாத்தியம் என்பதும் பறக்கும் தடடுகள் உண்மை என்பதும். இப்படியான உயர் புத்திசீவி ஏலியன்களின் வருகையினால்தான் புவியில் மனிதர் தோன்றியதும், மனிதரின் புத்திசாலித்தனம் மேம்பட்டதும்; என்கிறார்கள், ஆய்வாளர்கள். ஆதற்கான சான்றுகளும் தருகின்றார்கள்.

கிட்டத்தட்ட இருநூறாயிரம் ஆண்டு முன்னர் புவியில் நியாண்டரல்களும் மனிதர்களும் தோன்றி நடமாடிக் கொண்டிருக்கையில் வேற்றுக் கிரக மனிதர்கள் புவியிற்கு வந்திருக்கிறார்கள். புதுப்புதுக் கிரகங்களைக் கண்டு பிடிப்பதும் அங்கிருக்கும் வளங்களை எடுத்துச் செல்வதும் என்ற நோக்கில் வந்த அவர்கள், அவ்வேளையில் புவியிற் சற்று புத்திசாலிகளாக இருந்த மனித இனத்தில், மரபியற் பரிசோதனையைச் செய்ய, மனிதர்களின் அறிவு சடுதியில் வளர்ச்சியுற்றுத் தம்மைப் புவியிலே தக்க வைத்துக் கொள்ளக் கூடியதான ஆற்றலைப் பெற்றுக் கொண்டார்கள். அந்த வகையில் வந்ததுதான் எனது, உங்களது, அறிவியல் நிலை. இன்று மனிதர் நிலமைகளை முன் கூட்டியே புரிந்து கொண்டு வேற்றுக் கிரகங்கள் நோக்கிச் செல்வதும் அதன் விளைவே என்கிறார்கள் ஆய்வாளர் சிலர். இதற்கு என்ன ஆதாரம் எனக் கேட்டால் ஏலியன்கள் புவியிலே வந்து போனதற்கான தடங்கள் பலவற்றைக் காட்டுகின்றார்கள். பெருநாடு, ஆர்ஜன்ரீனா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஏராளமான தூர்ந்து போன (தங்கச்) சுரங்கங்களைக் குறிப்பிடுகிறார்கள். வானிலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் பெருவின்; நாஸ்காக் கோடுகள், இங்கிலாந்தின் கற்தூண்கள், ஈஸ்ரர் தீவின் கற்சிலைகள், பிரமிட்கள் போன்ற, மனிதரால் செய்ய முடியாத பிரமாண்டங்களைக்; காட்டுகிறார்கள். இவற்றை விடச் சுவாரசியமான இன்னொரு விடயத்தைக் கூறுகிறேன்.

மெசப்பத்தேமியாவில் இருந்த நிநிவே பட்டினத்தின் பழைய நூலகம் ஒன்றினை அகழ்வாய்விலே கண்டு பிடித்துள்ளார்கள். அங்கு 5500 ஆண்டு பழமையான, சுமேரியரதும் அசீரியரதும் 22000 கழிமண் தகடுகள் (புத்தகங்கள்) எடுக்கப்பட்டன. அதில் இருந்த விடயங்கள் ஆய்வாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. நிபிரு என்ற கிரகம் ஒன்றில் இருந்து தங்கம் எடுப்பதற்காகக் காலத்திற்குக் காலம் புவியிற்கு ஏலியன்கள் வந்தார்கள். அவர்கள் வந்து இறங்கிய இடம் ஆபிரிக்கா. முதலில் அவர்கள் வந்திறங்கி வேளையில் புவியில் மனித இனம் இருக்கவில்லை. அவ்வேளையில் இயல்பிலேயே மனிதக் குரங்குகளின் வழித் தோன்றல்களாக வந்திருந்த ஒரு 'ஹோமோ' இனத்தில் தங்களது DNA யைக் கலந்து ஒரு மரபுப் பொறியியல் சோதனையைச் செய்து ஒரு புதிய இனத்தை தோற்றுவித்தார்கள். ஆந்த இனம்தான் ஹோமோ சேபியன்களான மனித இனம். காலத்திற்குக் காலம் வந்த நிபிருபியன்கள் செய்த மரபணுப் பரிசோதனை ஆய்வுகள் மனித இனத்தின் அறிவை வளர்த்து விட்டது. அப்பிடியாக கடைசியாக ஏற்பட்ட மாற்றம்தான் இக்கால ஆய்வாளர்கள் கூறும் 55 ஆயிரம் வருடங்களின் முன்னர் வந்த அந்த 'மூளை விகாரம்' எனக் கருதப்படுகிறது.

இவை எல்லாம் ஆபிரிக்காலிலேயே நடைபெற்றன. பின்னர் ஆதாமு (ஆதாம்) என்பவரையும், தியமார் (ஏவாள்) என்பவளையும் முதன் முதலாக மெசப்பத்தேமியாவுக்கு நிருபுவினர் கொண்டு வந்து விட்டிருக்கின்றனர். அதில் இருந்து வந்ததுதான் மத்திய கிழக்கின் சரித்திரம் என்கிறார்கள். இதில் மனிதர்களின் ஆய்வுகளுடன் ஓரளவுக்கு ஒத்துப் போகிற பல விடயங்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக, மனிதப் பரம்பல், அறிவியல் படிமுறை வளர்ச்சி, காலத்தின் மாற்றத்திற்குத் தாக்குப் பிடியாது நியாண்டரல்கள் அழிந்து போக, தமது புத்திவளத்தால் ஹோமோ சேபியன்களான நாங்கள் தப்பித்துக் கொண்டது போன்றவற்றைக் காட்டலாம். (இந்த விடயங்களை ஆர்வமுள்ளவர்கள்
Chris H.Hardy, Ph.D  என்பவர் எழுதிய DNA of the GODS என்ற புத்தகத்தில் வாசித்தறியலாம்)

தனியவே நிபிருவினர் மட்டும்தான் புவியிற்கு வந்திருக்க வேண்டும் என்றில்லை. புவியின் பல்வேறு பகுதிகளுக்கும் வெவ்வேறு வேற்றுக் கிரகிகள் வந்திருக்கலாம், இனியும் வரலாம். ஆனால் ஏன் இப்போது வருவதில்லை என்ற கேள்விக்கு எம்மிடம் உறுதியான பதிலில்லை. ஒருவேளை மனிதரின் பாமரத்தனமான, அவர்களுடன் ஒவ்வாத அறிவியல் நிலையா? எங்களது அறிவியல் வளர்ச்சியை அந்தரத்திரே நின்று அவதானிக்கிறார்களா? வளர விட்டுக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்களா? (இந்தக் கண்காணிப்புபால் விளைந்தவைதான் பறக்கும் தட்டுகளும், ஏலியன்களால் கடத்தப்படுதல்களும் பல்Nவுறு வகையான ஆய்வுகளும் என்கிறார்கள்) ஒருவேளை அவர்களது தேவைகள் (தங்கம் போன்ற கனிமங்களை எடுத்தல்) முடிவடைந்து விட்டதால் இனிப் புவிக்கு வரவே மாட்டார்களா? ஆல்லது, நிபிருவினர் போலக் காலத்திற்குக் காலம் வருவது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்கள் திரும்பவும் வருவதற்கான காலம் இன்னமும் வரவில்லையா?
இக் கேள்விகளிற் சிலவற்றிகான பதில்கள் உங்களிற் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். அப்படியிருப்பின், உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்ன, சரிதானே?

மறுமுறை, இன்னொரு சுவாரசியமான விடயத்துடன் வருகிறேன்!.
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்