அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 2

சென்ற தடவையில் கெனத் ஆர்னோல்ட்டின் அனுபவத்துடன், உலகினரிள கவனத்திற்கு எவ்வாறு பறக்கும் தட்டுகள், அறிந்திரா வானவூர்திகள் என்ற பதம் புகுந்தது எனப் பார்த்தோம், இனி, இனம் தெரியாத பறக்கும் பொருள்கள் எவ்விதம் சாதாரண மனிதர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தது எனப் பார்ப்போம். சில ஆய்வாளர்கள் 'எம்மால் இந்த பறக்கும் பொருள்களை இனம் காணமுடியவில்லையே! ஒருவேளை ஏதாவது உயர் தொழில்நுட்பம் தெரிந்த நாடுகளின் புதுவகை விமானங்களோ? அல்லது பறவைகளில் பட்டுத் தெறிக்கும் கதிரவனின் ஒளியின் வேலைப்பாடோ? அதுமில்லாவிடில், வானிலே ஏற்பட்ட நிறமாயமாக இருக்குமோ? ஏன்றெல்லாம் எண்ணினார்கள். இன்னொரு விதமாகவும் சிலர் சிந்தித்தார்கள். 'ஒருவேளை இவை வேற்றுக் கிரகங்களில் இருந்து எமது புவிக்கு வருகிற வேற்றுக் கிரகவாசிகளின் வாகனங்களாக இருக்குமோ?' தமது எண்ணத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, இன்னொரு பரபரப்பு ஆரம்பமாகியது. அது
Aliens என்கிற அந்நியர்கள் என்னும் 'வேற்றுக் கிரக மனிதர்கள்'.

விளைவாக பறக்கும் தடடுகளில் வேற்றுக்கிரக மனிதர்கள் வருகிறார்கள் என்ற செய்தி மனிதர்களிடையே பரவத் தொடங்கியது. கூடவே அந்த வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய பல ஐயங்களும் எழத் தொடங்கின. ஏன் வருகிறார்கள்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? எங்களுடன் தொடர்பு கொள்கிறார்களா? அவர்களால் எங்களுக்கு ஏதும் ஆபத்து வருமா? இது போன்ற பல கேள்விகள் பரவாலக எல்லோரிடமு; எழத் தொடங்கின. இதனால், பறக்கும் தட்டுகள் பற்றியும் வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றியும் பலவகையான கருத்துக்களும் பரிமாறப்பட, பாமரர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் விண்வெளியை கவனமாக அவதானிக்கத் தொடங்கினர். இன்னமும் பல புதுப்புது விசித்திரமான வடிவங்களில் இனம் தெரியாப் பறக்கும் பொருட்கள் பலரின் கண்களுக்குத் தென்படலாயின. சிலர் இவற்றைத் தமது கமராக்களில் கூடப் படம் பிடித்தனர். வீடியோக்களிலும் பதிவு செய்தவர்களும் இருந்தார்கள். சிலர் இதற்காகவே புகைப்படக் கருவிகளும் கையுமாகத் திரியவும் தொடங்கினர் திரிகின்றார்கள்.

பறக்கும் தட்டுகள் விடயங்களை விடவும் வேற்றுக் கிரக மனிதர்கள் விடயம் பெரும் சலசலப்புகளை உண்டாக்கத் தொடங்கியது. சிலர் தாங்கள் வேற்றுக் கிரக மனிதர்களைக் கண்டோம் என்றார்கள். அவர்கள் இப்படியிருந்தார்கள், அப்படியிருந்தார்கள் என்றெல்லாம் வேற்றுக்கிரக மனிதர்களின் உருவ அமைப்புக்கள் பற்றியும் கூறினார்கள். வேறுசிலரரோ, வேற்றுக் கிரக மனிதர்கள்; தங்களைக் கடத்திக் கொண்டு போனார்கள், தங்கள் மேல் வைத்தியப் பரிசோதனைகளைச் செய்தார்கள் எனக் கூறினார்கள். இன்னும் சிலரோவென்றால் வேற்றுக்கிரகிகள், தங்களை உடலுறவுக்கு உள்ளாக்கினார்கள் எனவும் கூறினார்கள்.

இப்படியாக அறிந்திராப் வானவூர்திகளும்; விடயங்களும்; வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய விடயங்களும் பலவகையிலும் மனிதரிடையே பரவ, மனிதர்கள் இவற்றைப் பல்வேறு கோணங்களிலும் பார்க்கத் தெடங்கிவிட்டனர். தத்தமது இயல்புகளுக்கு ஏற்ப ஆய்வுகள் செய்து, தமது முடிவுகளை மற்றவர்களுக்கும் கூறத் தொடங்கினார்கள். இதனால் 'யுஎவ்ஓ' பற்றி ஆய்வு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. பெரும் பணக்காரர்கள், விஞ்ஞானிகள், விமான ஓட்டுனர்கள், வானவியலாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இவ்வாராய்சிசியில் இறங்கினார்கள். சிலரோ தர்க்கரீதியில் தத்தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். இன்னும் சிலர் தமது முழுநேரத் தொழிலாகவே இதனைச் செய்யத் தொடங்கினார்கள். இப்படி ஆய்வு செய்தவர்களிற் சிலருக்கு அரசாங்கங்களின் உதவிகளும் கிடைத்தன.

இனம்தெரியாத பறக்கும்தட்டுகளைப் பற்றிய ஆய்வுகளைச் செய்பவர்களை யூஎவ்ஓலோயிஸ்ர்
(UFOlogists)  எனக் கூறத் தொடங்கினர். இந்த யூஎவ்ஓலோயிஸ்ருகளின் கருத்துக்களை ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர்; சாதாரண மக்களுக்கும் பலவழிகளில் தெரிவிக்கத் தொடங்கினார்கள். இவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை; கொடுக்க, யூஎவ்ஓலொயிஸ்ர்கள் பலவகைக் குழக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். இக்குழுக்களைப் பற்றியும் சற்றுத் தெரிந்து கொள்வோம்.

முதலாவது வகையினர், தமது ஆய்வுகளின் பயனானக, இப்பேரண்டத்தில் பூமியின் மனிதர்கள் தனித்தவர்கள் அல்லர். வேற்று உலகங்களில் கூட மனிதரைப் போன்ற உயிரினங்கள் உண்டு. எங்களது 'ஸ்ரார் ட்ராக்'
(Star track) என்ற விஞ்ஞானப் புனைகதைப் படங்களில் வருவது போன்றே, அறிவியல் வளர்ச்சி கண்ட வேற்றுக்கிரகிகளின் பேரண்டத்; தேடலின் விளைவான காட்சிகளைத்தான் நாம் யூஎவ்ஓவாக காண்கின்றோம், அந்நியர்களாகக்; காணுகிறோம் என்கின்றார்கள். அதனால், அறிந்திரா வானவூர்திகள்;; விடயத்தினை அவ்வளவு சுலபமாக விட்டுவிட முடியாது என்கின்றார்கள்.

இரண்டாவது வகையினர், யூஎவ்ஓக்கள், ஏலியன்கள் என்று ஒன்றுமே இல்லை என வாதிடுபவர்கள். இவர்களிற் சிலர், தங்களைப் பிரபலமாக்கிக் கொள்வதற்காகச் சிலரால் உண்டாக்கப்பட்ட பேலிக்;கதைகள் என்கிறார்கள். வேறுசிலரோ, இதெல்லாம் சந்தேகப் பேர்வழிகளினால் ஏற்படுத்தப்பட்ட புரளி;யே தவிர வேறென்றில்லை என்கிறார்கள். வேறு சிலரேர், எவ்வளவு காலமாகத்தான் நாமும் இந்த விண்வெளியை இரவு பகலாகப் பார்க்கின்றோம், இதுவரையில் ஒன்று கூடத் தெரியவில்லையே என்கின்றார்கள். 'அதோ கண்டோம், இதோ கண்டோம், அப்படிக் கண்டோம், இப்படிக் கண்டோம்' என்பதெல்லாம் சும்மா என்கிறார்கள். இன்னும்; சிலர், ஆகாயத்தில் காணப்பட்ட இனம் தெரியாத பறக்கும் பொருட்கள், ஏதோ ஒரு நாட்டின் புதுவகை விமானங்களாக இருக்கலாம், ஒருவேளை வேவு விமானங்களாகக் கூட இருக்கலாம் என்கின்றார்கள். சில சமயங்களில் காலநிலையை அறியும் பூதிகளாகவோ (பலூன்களாகவோ) அல்லது ஏதாவது செய்மதிகளாவோ கூட இருக்கலாம். இவை இன்னதுதான் என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் இவற்றை ஏலியன்களின்; விமானங்களாக இருக்கலாம் எனத் தப்பாகக் கருதி யூஎவ்ஓ என்கிறார்கள், என்கின்றார்கள். யூஎவ்ஓ என்பதெல்லாம் இயற்கையின் பௌதீக விளைவுகளின் தோற்றப்பாடுகள் என்பவர்களும் உண்டு. மனிதர்களின் அறிவியல் நிலையானது இப்பௌதீக விளைவுகளின் தோற்றப்பாடுகளை முற்றாக விளங்கிக் கொள்ளக்கூடிய நிலைக்கு இன்னமும் வரவில்லை. அதனால்தான் இந்த யூஎவ்ஓ சிக்கல் என்று விளக்கம் தருகிறார்கள்.

இன்னமும் இனம் தெரியாத பறக்கும் பொருட்கள் என்று ஒன்றுமே இல்லை என்று வாதிடுபவர்கள்; இன்றுள்ள யூஎவ்ஓ பதிவுகளில் தொண்ணூற்றொன்பது வீதமானவற்றிற்கு அவை பொய்யானவை எனத் தம்மால் விளக்கம் தர முடியும் என்கின்றார்கள். மற்றவர்கள் அவ்விளக்கங்களை ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ, சரியானது போன்ற விளக்கங்களை இவர்கள் வைத்திருக்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் தொண்ணூற்றொன்பது வீதமான பறக்கும் தட்டுகள் பற்றிய காட்சிகள் உண்மையல்ல என நிரூபிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஒரு வீதம் கூட எம்மால் புரிந்து கொள்ளமுடியாத விஞ்ஞான விளக்கங்களாக இருக்கமுடியுமே தவிர ஏலியன்களாகவோ அல்லது யூஎவ்ஓக்களாகவோ இருக்கமுடியாது என அடித்துக் கூறுகின்றார்கள்.

பதிவுகளில் உள்ளவைகளில் இனம் தெரியாத பறக்கும் பொருள்கள் இல்லை என நிரூபிக்கப்பட முடியாத அந்த ஒரு வீதத்தினுள் ஏன் வேற்றுக் கிரக மனிதர்களின் வாகனங்கள் இருக்கக் கூடாது என்பதும் இனம் தெரியாத பறக்கும் தடடுகள் உண்டு என்பவர்பளின் வாதங்களில் ஒன்றாகும். அத்துடன் யூஎவ்ஓ இல்லை என்று மறுப்பவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களில் கூடத் தெளிவுத்தன்மையும், நம்பகத்தன்மையும் பெரியதாக இல்லை என்கின்றார்கள் இவர்கள்.
இருபகுதியினருமே, தமது கூற்றுக்களைச் சரியெனக் காட்டுவதற்காக பெரும் முயற்சிகளைச் செய்கின்றார்கள். அவர்களிற் சிலர் தமது சொந்தப் பணச் செலவிலேயே பல இடங்களுக்கும் சென்று ஆதாரங்களைத் திரட்டி ஆய்வுகளைச் செய்கின்றார்கள். நேரடியான நேர்முடிவுகள் எதனையும் இதுவரை இருபகுதியினராலும்; பெறமுடியாத போதிலும், இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடியனவாகத்தான் இருக்கின்றன.

யூஎவ்ஓலொயிஸ்ர் என்றவுடன் பறக்கும் தட்டுகள் உண்மை என்பவர்களே பொதுவாக நினைவிற்கு வருவார்கள். ஆனால், இனம் தெரியாத பறக்கும் பொருட்கள் பற்றி ஆராய்பவர்கள் எல்லோருமே யூஎவ்ஓலோயிஸ்ர்கள்தான். அதாவது யூஎவ்ஓ உண்டு என்பவர்களையும் யூஎவ்ஓ இல்லை என்பவர்களையும் சேர்த்தே யூஎவ்ஓலொயிஸ்ர் என்ற பதம் பாவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் இன்னொரு சாரார்; இந்த யூஎவ்ஓ என்பது உண்மையாக இருக்கலாம், அல்லது பொய்யாகவிருக்கலாம். எதுவாக இருப்பினும் சரியானபடி நிரூபணமாகவேண்டும். நிரூபிக்கப்படாத ஒன்றினை எவ்விதம் சரியென்றோ அன்றேல் தவறென்றோ ஏற்றுக் கொள்வது?

இந்த மூன்று வகையான குழுக்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி, போட்டி போட்டுக் கொண்டு தத்தமது பக்கக் கருத்துக்களைக் கூறிக் கொள்ள, விடயம் பொது மக்களிடையே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலவே, அறிவுத்தாகம் உள்ள சாதாரணமாவர்களுக்கு இவர்களது சச்சரவு பல அறிவியல் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது, கொண்டு வருகின்றது.

இதுவரையில், அங்நியர்களும் அறியப்படா வானூர்த்திகளும் என்பதின் அறிமுகத்தைப் பார்த்தோம் இனி வரும் நாட்களில் இந்த விவகாரம் பற்றி, வெளிப்பட்ட சுவையான விஞ்ஞான அறிவியல், பற்றிப் பார்ப்போம்.
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்