அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 3

புவியில் மனிதர்கள்:

இதுவரையில் அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் என்ற தொடரின் அறிமுகத்தைப் பாhத்தோம். இனி வரும் நாட்களின் அறிவியலின் பல பகுதிகளையும் இத்தொடரின் ஊடாகப் பார்க்கப் போகின்றோம். அடுத்த பகுதிக்குள் போவதற்கு முன்னர், இன்னொரு முக்கியமான ஏலியன் எதிவு ஒன்றினையும் தெரிந்து கொள்வோம்.

செப்ரெம்பர் 19, 1961 இல் ஹில்
(Barney & Betty Hill) தம்பதிகள்; தமது குறுகிய விடுமுறையைக் கனடாவிற் கழித்துவிட்டு தமது காரில் அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். நியூ கம்செயர் என்ற இடத்தில் இன்ரஸ்ரேர் வழி 3 இல் இவர்கள் வந்து கொண்டு இருக்கையில்; வானிலே விண்மீனை ஒத்த பொருள் ஒன்று தம்மைத் தொடர்வதை அவதானித்தார்கள். சற்று நேரத்தில் அப்பொருள் அவர்களது காரின் முன் வந்து விட்டது. காரை விட்டு வெளியே வந்த பெனி தனது தொலைகாட்டியின் ஊடாக அப்பொருளைப் பார்த்தார். அவ்வேளையில்தான் அது ஒரு பறக்கும் தட்டு; (UFO) என்பதை அவர்களால் அறியக்கூடியதாக இருந்தது. அத்துடன் அவ்விண்கலத்தில் பல மனிதரை ஒத்த ஆனால் சுமாராக 3 அடி உயரமான பிராணிகள் இருப்பதையும் கண்டார்கள். பயம் கொன்ட தம்பதிகள் தமது காரின் வேகத்தை அதிகமாக்கி வீடு வந்து சேர்ந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்ததும் ஒரு விடயத்தை அவர்களால் அவதானிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்து சேரவேண்டிய நேரத்திலும் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகத் தாம் வந்து சேர்ந்ததை அறிந்து கொண்டார்கள். அதனையிட்டு வியப்படைந்த அவர்களினால் 'தவறிய அந்த இரண்டு மணித்தியாலங்கள'; பற்றி எந்த விதமான விபரங்களையும் நினைவிற்குக் கொண்டு வரமுடியவில்லை. அந்த இரண்டு மணித்தியாலங்களுக்கும் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

இதன் பின்னர் வந்த நாட்கள் இவர்களுக்குச் சிக்கலான நாட்களாக இருந்தன. இரவுகளில் இவர்களால் சரியாகத் தூங்க முடியவில்லை. விளக்கங்கள் இல்லாத, பயங்கரமான கனவுகளினால் அவதிப்பட்டார்கள். பகற்பொழுதுகளில் தாங்க முடியாத தலைவலியினால் அவதிப்பட்டார்கள். இவர்களுக்கு வைத்தியம் செய்த மருத்துவர்களால் இவற்றிக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய முடியாதிருந்தது. அவர்களது வைத்திய அறிக்கைகள், இருவருமே நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறின. இந்நிலையில் இவரகளை வைத்தியர்கள் தனித்தனியாக அறிதுயில் நிலைக்கு (ஹிப்னரைஸ்) உள்ளாக்கிப் பார்த்தார்கள். அப்போதுதான் அவர்களின் அந்தத் தவறிய இரண்டு மணித்தியாலங்கள் பற்றிய விபரம் வெளிவந்தது. அறிதுயில் நிலையில் இருவரும் ஒரே மாதிரியான, ஆச்சரியமான சம்பவம் ஒன்றினைப் பற்றிக் கூறியிருந்தார்கள்.

அறிதுயில் நிலையில் அவர்கள் கூறியதின்படி, அன்றிரவில் விண்கலத்தில் இவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள், தமது விண்கலத்திற்கு இவர்களைக் கடத்திச் சென்றிருக்கின்றார்கள். அங்கு இருவரைரும் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் இருவரினதும் தோல், நகம், தலைமயிர் என்பவற்றின் மாதிரிகளையும் எடுத்திருக்கிறார்கள். அத்துடன் பெற்றியின் பெண்மையினைப் பற்றியும், தாய்மை பற்றியும் கூடச் சோதனைகள் நடந்திருக்கின்றது. இவ்வளவும் செய்த அந்த வேற்றுக் கிரகவாசிகள், புவியினைப் பற்றிய பல விபரங்களைக் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த வேற்றுக் கிரக மனிதர்கள், பெற்றியிடம் விண்மீன்களின் படம்;
(star map) ஒன்றைக் காட்டி தாம் அங்கிருந்து வந்ததாகவும் கூறியுள்ளார்கள். பெற்றி அந்த விண்மீன் தொகுதியின் வரைபடத்தைக் கூடக் குறித்துக் கீறிக் காட்டியிருக்கிறார். பெற்றியின் குறிப்புக்களின்படி, அந்த விண்மீன்களின்; தொகுதி Zete Reticulli  என யூஎவ்ஓ ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள் எனப் பதிவுகள் கூறுகின்றன.

ஆர்னோல்டின் சம்பவம் போன்றே, இந்தச் சம்பவமும் வேற்றுக் கிரக மனிதர்கள் விடயத்தில் மிகவும் பிரபலமானது. ஆந்நியர்கள், அறிந்திரா வானவூர்த்கள்; பற்றிய ஆய்வுப் புத்தகங்களிலும் இணையத் தளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள இச்சம்பவத்தை மிகவும் சுருக்கமாகத் தந்துள்ளேன். இவர்களது விவகாரம் தனி ஆய்வுநூலாகவும் வந்துள்ளது என்கிறார்கள். இச்சம்பவமானது, யூஎவ்ஓ, ஏலியன்கள் என்பவை பற்றிய உண்மைத் தன்மையைக் காட்டக் கூடிய ஒன்றாக, யூஎவ்ஓலோயிஸ்ர்கள் கருதுகின்றார்கள்.

பெற்றி, தங்களைக் கடத்தியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற வரைபடத்தைக் காட்டியிருந்தாரல்லவா. அதில்தான் ஆச்சரியமான விடயம் உள்ளது. விண்வெளி பற்றிய அறிவில்லாத பெற்றி அவ்வரைபடத்தை 1963ம் ஆண்டில் கொடுத்திருந்தார். ஆனால், 1969ம் ஆண்டில்தான் ஒகியே பல்கலைக்கழகத்தின் வானவியலாளர்கள்
Zete Reticulli  விண்மீன் தொகுதியை கண்டு உலகிற்குக் காட்டியிருந்தார்கள். பெற்றியின் வரைபடம் அச்சொட்டாக ஒகியோ பல்கலைக்கழக வாவியலாளர்களின் குறிப்பிட்ட அந்த விண்மீன் தொகுதியுடன்; பொருந்தியிருந்தது. இதுதான் மிகவும் புதிரான ஒன்றென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். யூஎவ்ஓ, ஏலியன்கள் என்ற இரண்டு பதங்கள் பற்றியும் பொருத்தப்பாடாகச் சிந்தித்தவர்களின்; சிந்தனைக்கு ஒத்துப் போகும் விதமாக இது அமைந்திருந்தது.

ஏலியன்கள், பற்றிச் சிந்தித்தவர்களின் மனதில், இப்புதிரை விடுவிக்கும் அல்லது தெளிவு படுத்தும் விதமாகன சிந்தபை;புலத்துள் அகப்பட்டவர்கள் மனிதர்களாகிய நாங்கள்தான். ஏலியன்கள் இவ்விடம் வருவதெனில் அவர்கள் அறிவியலில் நல்ல முன்னேற்றம் அடைந்தவர்களாக இருக்க Nவுண்டுமே? ஏப்படி? என்றெல்லாம் கேட்டவர்களுக்கு சிந்தனையில் வந்தது, நமது புவியில் மனிதர்களிள் எவ்விதம் புத்திசீவிகளாக மாறினார்கள்; என்ற கேள்விதான். அதன் பதிலில் இருந்துதான். வேற்றுக்கிரக மனிதர்களைப் பற்றித் தெளிவுபடுத்துகிறார்கள். அதன் வழியே நாமும் அவர்களுடன் இணைந்து சிந்தித்துப் பார்க்கப் போகிறோம். அதற்கு புவியின்; சரித்திர கால வளர்ச்சியையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. ஆனாலும் அவை பற்றிப் பின்னர் பார்க்கப் போகின்றோம் என்பதனால், நேரடியாகவே விடயத்திற்குள் நுழைவோம்.

நாங்கள் அறிந்தபடியே, சுமாராக 4600 மில்லியன் (மெய்யிரம்) வருடங்களின் முன்னராக கதிரவ நெபுலா என்ற பென்னாம் பெரிய தூசுக் கூட்டம் ஒன்றில் இருந்து உருவாகியதுதான் நமது கதிரவன் என்கிறது விஞ்ஞானம். கதிரவனுடன் சேர்ந்தே அதன் கோள்கள் எல்லாம் தோன்றிவிட்டன. கதிரவனின் சுழற்சியின் காரணமாக காலத்திற்குக் காலம் கதிரவனில் இருந்து வெளியேறிய கதிரவனின் வெளித் தள்ளல்கள்தான் கதிரவனின் கோள்கள் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது. அக்கருத்து ஏற்புடையது அல்லவென இந்நாட்களில் காட்டியுள்ளார்கள். கதிரவனின் தோன்றுகையின் போதான பக்க விளைவாகக் கதிரவ நெபுலாத் தூசுகளில் இருந்து தோன்றியவைதான் கதிரவக் குடும்பத்தில் உள்ள அத்தனையும் என்கின்றது இந்நாட்களின் விஞ்ஞான முடிவுகள். அதன்படி, நமது புவியின்; வயதும் 4600 மில்லியன் (மெய்யிரம்) ஆண்டுதான்;. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, புவி தோன்றிப் 1000 மில்லியன் (ஒரு மெய்யிரம்; - ஒரு பில்லியன்) வருடங்களின் பின்னர் இயற்கையில் ஏற்பட்ட வேதியல் மாற்றங்களின் காரணமாக பூமியில் உயிரினங்கள் தோன்றத் தொடங்கின அல்லது தோன்றுவதற்கான சாத்தியங்கள் ஆரம்பமாகின. அதிலிருந்து, முதலில் ஒருகல உயிரினங்கள் தோன்றின. காலத்தினூடான, இயற்கைக்கு ஒத்ததான, இயற்கையின் தேர்வின்படியேயான பரிணாம மாற்றங்களின் விளைவாக பூமியில் வௌ;வேறு உயிரினங்களும் பின்னர் ஒவ்வொன்றாகத் தோன்ற, இப்பூமியானது இன்று இவ்விதம் பரிணமிக்கின்றது என்கின்றார்கள் விஞ்ஞானிகள் சிலர். (இது பற்றிய பார்வை ஒன்றினைப் பின்னர் பார்ப்போம்.) உயிரினத் தோற்றக் காலங்களின் வரிசையில் மனிதவினம் பூமியில் தோன்றியது இருநூறரயிரம்; வருடங்களுக்குள்தான் என்கின்றது விஞ்ஞானம்.

அந்த விபரத்தை அடுத்த தடவையிற் பார்ப்போம்.


 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்