பிணி இல்லா பெருவாழ்வு

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A


'உணவே மருந்து, மருந்தே உணவு.' என்று தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழக்குடிமக்கள். எகிப்தில் முதலில் காலடி வைத்தவர்கள் தமிழர்கள். நைல் நதியைக் கொண்டு விவசாயத்தைச் செழித்தோங்கச் செய்தவர்கள் தமிழர்கள். நாகரீகமென்றாலும், உணவு, கலாச்சாரம், பண்பாடு; என்றாலும் உலகம் முழுக்க எடுத்துச் சென்றவர்கள் தமிழர்கள். 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது சித்த மருத்துவம். சித்த மருத்துவ முறைப்படி பெரும்பாலான உணவுகள் பக்குவப் படுத்தப்பட்டே உட்கொள்ளப் படுகிறது. இப்படிப் பக்குவப் படுத்திச் சாப்பிடும் போது அது மருந்தாகவும் அதே வேளை உணவாகவும் உபயோகமாகிறது. அனுபவத்தின்படியும் அறிவியல்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயைக் குணப்படுத்துவதுடன் அது மீண்டும் வராமல்ப் பாதுகாக்கும் தன்மையு முடையது. இதுவே மருந்தின் இலக்கணம்.

கிடைப்பதற்கு அரிதான அல்லது பெறுமதியுள்ள பல உணவுகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியாது. அவ்வப்போது கிடைக்கிற நேரத்தில்ச் சாப்பிட்டு வந்தால் அதன் மருத்துவப் பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். உலகம் இப்போ மிகவும் சிறுத்து விட்டது. உலகெங்கணும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் தெரிந்தும், பழக்கப்பட்டும் ஏற்றுக் கொண்டும் உள்ளோம். எனினும் நாம் நம்முடைய 'உணவே மருந்து - மருந்தே உணவு' எனும் தத்துவத்தை மறக்கவுமில்லை மறுக்கவுமில்லை. அது நமது உணவுமுறையில் நன்றாகவே ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனால் இன்றைக்கு ஒரு சளியோ காய்ச்சலோ வந்துவிட்டால் உடனடியாக ஒரு மருத்துவரைத் தேடி ஓடுவதற்குப் பதிலாக வீட்டுப் பெரியவர்கள் மூலமாக, உணவு மூலமாக நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்கிறோம். இதனைக் கைவைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் என்கிறோம். குசினியிலுள்ள பாட்டியின் அஞ்சறைப் பெட்டி கைகொடுக்கும். அஞ்சறைப் பெட்டி ஒரு அருமருந்து. நம் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டுமல்ல, நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, தொடங்கி மிளகு கிராம்பு வரை ஒவ்வொன்றுமே உயிர் காக்கும் சஞ்சீவினிகள். பொதுவாக மசாலாப் பொருட்கள் உடலுக்குத் தீங்கானவை என்று ஒரு கருத்து, ஆனால் எதுவுமே அளவுக்கு மீறும் போதுதான் நஞ்சாகிறது. மசாலாப் பொருட்களை நேரடியாகச் சாப்பிட முடியாது. அதுபோலவே அடிக்கடியோ அல்லது தொடர்ந்தோ சாப்பிடவும் கூடாது. ஆனால் தொற்று நோய் முதல் புற்று நோய் வரை நோய் எதிற்கும் ஆற்றலைத் தரும் இவற்றை அறவே தவிர்க்க முடியாது. பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் உணவைத் தேர்ந் தெடுத்தால் நோய் என்பதற்கே இடமில்லை. அப்படிக் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள் யாவுமே நமது மிகப் பெரிய பொக்கிசம்.

இப் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் இயக்கத்திற்கும் முக்கியமானது உணவு. உட்கொள்ளப்படும் உணவானது குடலில்ச் செரித்துச் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலின் வளர்ச்சி மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றது. உயிரினங்கள் யாவும் உணவுக்காகவே தமது பொழுதின் பெரும் பகுதியைச் செலவிடுகின்றன. தொடக்க காலத்தில், மனிதர்களிடையே தோன்றிய பிணக்குகள், மோதல்கள், பூசல்கள்;; உணவுக்காகவே ஏற்பட்டிருக்க வேண்டும். இன்று உணவு ஒரு அலங்காரப் பொருளாக மாறிவிட்டது. வௌ;வேறு நாட்டின் உணவு வகைகளுக்கும், விதவிதமான சமையல் முறைகளுக்கும் நாம் பழக்கப்பட்டு விட்டோம். ஏன் நமது நாக்கு அவற்றிற்கு அடிமைப்பட்டு விட்டது என்றே கூறிவிடலாம். அதனால் நமது உடலுக்கு அரோக்கியமானதோ இல்லையோ நாவுக்குச் சுவையானதாக இருந்துவிட்டால் போதும் நாம் அதனைத் தேடிச் சாப்பிட்டு விடுகிறோம். பின்விளைவுகள் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. உணவு பசிக்காக மட்டுமன்றி ருசிக்காகவும் சாப்பிடுகிறோம். மேலும் உணவு உடல் ஆரோக்கியத்திற்கும் உள ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. அதற்காக அதற்கு ஏற்ற உணவு வகைகளைத் தேடி கலப்படமில்லாததாகவும், இரசாயன தாக்கம் இல்லாததாகவும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். நாம் உண்ணும் உணவு நம் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்றதாக அமைந்தருத்தல் வேண்டும். அவைகளே நல்ல சிந்தனை ஆற்றலையும், செயற்திறனையும் கொடுக்கும். ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் உணவில் கவனம் செலுத்துவது குறைவு, இல்லையென்றே சொல்லிவிடலாம்.

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.'
(குறள் 942)

'அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.'
(குறள் 944)

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கும், ;பசித்துப் புசி' எனும் சொல்லணிக்கும் மாறாக, நேரம் பார்த்து உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டனர் மக்கள்;. மேலும் கண்டநேரத்திலும் உண்ணவும் பழக்கப்பட்டு விட்டனர். கடைகளில் விற்கப்படும் 'துரித உணவு' வகைகளை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களைக் கெடுப்பதற்கு தாமே காரணமாகின்றனர்;. இதன் வினைவாக குழந்தைகளால் ஒழுங்காகப் படிக்க முடிவதில்லை, ஊக்கமாகவும் உற்சாகமாகவும் செயற்பட முடிவதுமில்லை. நாம் அவர்களைக் குற்றம் கூறுவதில் உபயோகமில்லை. நாமே தப்பைச் செய்துவிட்டுப் பரிகாரம் தேடுகிறோம். உண்மையிலே தப்பு எங்கேயுள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. நம் முன்னோர்களின் வழிகாட்டலைச் சிறிதளவாவது பின்பற்ற எண்ணியிருந்தால் எதாவது பிரயோசனம் இருந்திருக்கும். இனியாவது சிந்தித்துச் செயலாற்ற முயல வேண்டும்.

முன்பெல்லாம் கேப்பைக் களி, வரகரிசிச் சோறு, கம்புத் தோசை, தேன் கலந்த தினை மாப்போன்ற சிறு தானிய உணவுவகைகளே பெருவாரியாக நம்மவர்களின் உணவாக இருந்து வந்திருக்கிறது. வரகு, சாமை, கம்பு, சோளம், தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடல் வலுவுடன் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள். நோய் எதிர்ப்புச் சக்தியும் நல்ல ஊட்டச்சத்தும் பெற்றிரு;தார்கள். உடல் பருமன் போன்ற தேவையற்ற பிரச்சினைகள் இருந்ததில்லை. மேலும் இத்தானியங்களில் அதிக நார்ச் சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் இருந்ததில்லை. குறைந்த அளவே குளுக்கோஸ் உள்ளதால் சர்க்கரை நோய் பற்றிய பேச்சிற்கு இடம் இருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் பின் கோதம்பை மா, 'அமெரிக்கன் மா' என்ற பெயருடன் அதிகமாகப் பாவனைக்கு வந்துதோ இல்லையோ தேக்க மரம் போல வலுவாக இருந்த உடல்நிலை வாழைத் தண்டாக மாறிவிட்டது. இன்று எல்லாம் மாறிவிட்டது. கோதம்பை மாவும் அரிசியும் தான் தஞ்சம். போதாதற்கு அரிசி நன்கு தீட்டப்பட்டுத் தவிடு நீக்கப் பட்டு வெறும் சக்கையை மட்டும் சாப்பிட வேண்டியுள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல் பலவீனம் அடைகிறது. இதற்கு நம்மிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நவீன அறிவியலைப் பக்க பலமாகக் கொண்டு நமது பாரம்பரியத்திற்குத் திரும்பவேண்டும். நம் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். பாரம்பரிய உணவுமுறை மீண்டும் செழிக்க வேண்டும். கால் போன போக்கில் போகாது நன்கு ஆராய்ந்து நம்முன்னோர் போற்றிய உணவு வகைகளைத் தேடி உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ முயல வேண்டும்.

வீட்டில் நிகழும் எந்தச் சடங்கு சம்பிரதாயங்களிலும், முக்கிய பண்டிகை திருவிழா என்றாலும் பந்தி இருத்தி வாழையிலையிலேயே சாப்பாடு பரிமாறுவது நமது பாரம்பரியப் பழக்கம். சாதாரணமாக உணவகங்களிலும் இதுவே நடைமுறை. மேலும் அவசர அவசியம் கருதி பனை ஓலையைக் கோலி 'தட்டுவம்' வட்டில் போலச் செய்து பாவிப்பதும் உண்டு, சபை சண்டிக்கு அல்ல. எதுவாக இருந்தாலும் ஒருமுறை பாவனைதான்.

இதையே அறிஞர் அண்ணா பெருமையாகக் கூறியிருக்கிறார் 'சாப்பாட்டுத் தட்டை நாம் மறுபாவனை செய்வதில்லை' என்று. வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். அங்கே தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகைவகையான தட்டுக்கள் மேசையில் இருந்தன. சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், 'நான், தினம் ஒருதட்டு வீதம் முப்பது நாளும் முப்பது தட்டில் சாப்பிடுவேன்.' என்றார் பெருமையுடன்! அதற்கு அண்ணா, 'எங்கள் நாட்டில் குக்கிராமத்தில் வாழும் ஓர் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுவேளை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்.' என்றார். இதைக் கேட்ட அiனைவருக்கும் பணக்காரர் உட்பட ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கமும் கேட்டனர். அதற்கு அண்ணா 'ஆமாம் அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ' என்று பெருமிதத்துடன் பதில் தந்தார்.

வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின் வெற்றிலை, பாக்குச் சுண்ணாம்புடன் போடுவதும் மரபாக இருந்துள்ளது. மேலும் உணவு பரிமாறுவதிலும் ஒரு முறையுண்டு. உணவு செரிமானம் வாயிலிலேயே ஆரம்பமாகிறது. அதனால் உமிழ்நீர் சுரப்பதற்காக முதலில் இனிப்பு தொடர்ந்து சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவு பரிமாறப்படும். உணவைச் சுவைத்து அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சரியான முறையில் நடைபெறும். உமிழ்நீரினில் உள்ள செரிக்க வைக்கும் நொதிகள் நன்கு சுரக்கப்பட்டு செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்றார்கள். உணவின் இறுதியில் மோர் சேர்க்கப்பட வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. தண்ணீர் செரிமானத்தைத் தூண்டும் நொதியங்களைச் செயலிழக்கச் செய்துவிடும். பழங்களைத் தனியாகவே சாப்பிட வேண்டும். நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக் கொள்ளப் படுவதுடன் சரி விகித உணவாகவும் உள்ளது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துக்களுக்கும் செரிமானத்திற்குத் தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. இந்த பழைய முறையை நன்கு தெரிந்து கொண்டு பின்பற்றி வந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துச் சிறப்போடு வாழ முடியும்.

சித்தர்கள் கடைப்பிடித்த மருத்துவ முறை சித்த மருத்தவமாகும். சித்த மருத்துவம் 'வரு முன் காக்கும்' ஓர் அதிசய மருத்துவம். சித்தர்களின் ஒரே குறிக்கோள் இறை உணர்ந்து, இறையுடன் கலக்கும்வரை மூப்பைத் தள்ளி வைத்து நோய் இல்லாமல், இதே உடம்பை மரணமில்லாமல் தான் விரும்பும்வரை வாழும் மார்க்கம் அறிந்து அதை மக்களுக்கு அறிவிப்பதாகும். மருத்துவத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் சித்தர்கள்.

மருந்து உடல் நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
மருந்து உள நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
மருந்து இனி நோய் வராது இருக்கச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.
மருந்து சாவு வராமல் இருக்கச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

எத்தனை உயர்வான மருத்துவ முறை! உடல் நோய் மட்டுமல்ல உளநோயும் சேர்த்துத் தான்! தற்காலத்தில் உள்ள மனம் சார்ந்த நோய்கள் பற்றியும் எத்தனை காலம் முன்பே கண்டறிந்துள்ளனர். நோய் வந்தபின் தீர்ப்பது மட்டுமல்லாமல், நோய் வராமலும் இருக்க வேண்டுமாம், சாவே வர வேண்டாமாம்! உலகம் எப்படித் தாங்கும்! இத்தகைய உயர்வான மருத்துவ முறையை அறிந்திருந்தார்கள், தமிழர்கள்;. அது தற்காலத்தில்ச் செயலிழந்து, மதிப்பின்றி எனினும் வாழ்ந்து கெண்டுதான் இருக்கிறது. வாழையடி வாழையாக விளங்கி வரும் சித்தர்கள் வழங்கிய அறிவியல் உண்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது இப்போது காலத்தின் கட்டாயமாகிறது.

சைவ சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள் மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறைகளையும் எழுதி வைத்தார்கள். இவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்தக்காலத்துடன் ஒப்பு நோக்கினால் அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும் வியாதிகளுக்காகான நிவாரணங்களும் ஆச்சரியமானவை. உடலின் சூடு, உடலின் நிறம். குரல், கண்களின் பார்வை, மல சலத்தின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு நோயைக் கண்டறியும் உன்னத சிகிச்சை முறைகளைக் கண்டு, அறிந்து, தெரிந்து நமக்குப் அழியாச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்கள். நவீன அராய்ச்சிகளின் வாயிலாக இப்போது கண்டு பிடிக்கப்படும் பல மருத்துவ இரகசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தமருத்துவம் கூறியிருப்பது கண்டு வெளிநாட்டவர்கள் பெரும் பிரமிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனாலேயே மதிப்புக்கும் பெரு வியப்புக்கும் உரிய மருத்துவ முறையாகச் சித்த மருத்துவம் கொண்டாடப் படுகிறது. இதனை நன்கு படித்துத் தெரிந்து கொள்ளாதவர்களால் ஊட்டிலே ஏதாவது சிரமங்கள் எற்படலாம். அதனை நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் நிலவேம்புக் கசாயம் பேருதவி செய்தமையை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. பதஞ்சலி எனும் சித்தர் உருவாக்கிய யோகாசனப் பயிற்சி இன்று சர்வ தேச அளவில் பின்பற்றப்பட்டுவருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இது போல ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை நம் சித்தமருத்துவம் சொல்லித் தருகிறது. அவற்றைப் பின்பற்றினாலே நோய் நொடியின்றித் திடகாத்திரத்துடனும் தெம்புடனும் நூறாண்டு காலம் வாழலாம்.

சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வின் பயனாகத் தமிழர்கள் 'உணவே மருந்து மருந்தே உணவு' என்ற கொள்கையில் முழுமையாக வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. தமிழர்கள் ஆதி காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்ன என்று பார்க்கும் போது சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அவற்றுள் பிரதானமானவை வரகு, தினை, குதிரைவாலி, சாமை என்பனவாகும். முருகக் கடவுளுக்குப் பிடித்த உணவு தேனும் தினைமாவும். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் உயிர் நண்பனான கபிலர், ஊன் உணவு. தேனும் தினைமாவும் அரசவையில் சாப்பிட்டதாகப் கூறப்படுகிறது. அரசனே தினை சாப்பிட்டுள்ளான் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்கள் எந்த நோய் நொடியுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார்கள் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது. அதனாலேயே அவர்களால் பலப்பல போர்களைச் செய்வதற்கு உடல் வலுவும், உளத்தெம்பும் இருந்திருக்கிறது என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள்.

நோயில்லாது உடலைப் பேணிக்காக்கச் சித்தர்கள் எத்தனையோ வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். இன்றைய அவசர உலகில் அதிகாலையில் எழுந்திருத்தல், அன்றைய வேலையை நெறிப்படுத்தி சரிசெய்யும் திறமையை ஊக்கப்படுத்துகிறது. உணவு முறையில் கவனம் செலுத்துவதற்கு இலகுவாக இருக்கிறது. சத்துள்ள உணவை தெரிந்து உட்கொள்ள முடிகிறது. மேலும் காலையில் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சருமம் சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாப்புத்தருகிறது. மஞ்சள் ஒரு கிருமிநாசினி. மேலும் எண்ணெய்க் குளியல் வாரம் இரண்டு முறை, பல உடல் உபாதைகளுக்குச் சிறந்த தீர்வு. முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் மறுநாள் உண்ணக் கூடாது என்பது விதி ஆனால் நாம் எதிர்மாறாகச் செய்து வருகிறோம். நன்கு பசி எடுத்த பின்தான் உண்ணவேண்டும் என்பதும் விதி. நாம் அதனையும் மீறுகிறோம். மேலும் ஏலம், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு இவற்றை உண்ணும் உணவில்ச் சேர்க்கவேண்டும். மேலும் நீர் சேகரிப்பதற்கு வெண்கலம், செம்பு, பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் தண்ணீரைச் சுத்திகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஏனெனில் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகிறது. பசும் பால் தினமும் அருந்தி வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். காய்ச்சின பாலை இரவில் அருந்திவிட்டுப் படுப்பதால் நல்ல தூக்கத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். பகலில்த் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். இடது கையை மடக்கி, இடது புறமாக ஒருக்களித்து உறங்குவது நல்லது. இதன்மூலம் நோய்கள் குறைவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. உடலின் உறுதியையும் உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாத்து ஆரோக்கிய வாழ்வு வாழ, சாவு வரும்வரை இறைவனை எண்ணித் தியானம் செய்து வாழ வழிகாட்டினார்கள் சித்தர்கள்.

இன்றெல்லாம் 40 வயதானாலே இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயப் பிரச்சனை என்று எல்லாம் வந்து விடுகிறது. முழங்கால்ப் பிடிப்பு, நாரிப் பிடிப்பு, முதுகு வலி, மூட்டுக்கள் இறுக்கம், சயற்றிக்கா என்று முறைப்பாடுகள் எங்கும் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அவரவர் வாழ்க்கை முறையே. நம் உடலுக்கு எது சரியாக இருக்கும் என்று பார்க்காமல் நாவுக்கு உருசியாக, எது இலகுவாக இருக்குமோ என்று பார்த்துச் சாப்பிடுவது, மேலும் எது துரிதமாகக் கிடைக்குமோ என்று சாப்பிட்டால் அவை துரிதமாகவே வாசலிலே நின்று நோய்களை வரவேற்றுக் கூட்டி வந்து விடுகிறது. இப்படியான சூழலிலும் ஆங்காங்கே நம்பிக்கையூட்டும் மனிதர்களாக சிலர் நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வழிகாட்டத்தான் செய்கிறார்கள். அவர்கள் சித்தர்கள்; காட்டிய வழிமுறைகளை பின்பற்றினார்களோ என்னவோ, ஆனால் அவர்கள் முறையான சாப்பாட்டை நெறி முறையாகச் சாப்பிட்டு வேண்டிய பயிற்சிகளைச் செய்து பிணி இல்லாப் பெரு வாழ்வு வாழ்கிறார்கள் என்பது உண்மை. வாழ்ந்து காட்டுகிறார்கள். நாமும் ஆரோக்கியமாக மகிழ்ச்;சியாக ஆனந்தமாக வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம் எல்லாத் தொந்தரவும் பறந்து போகும். பிணியில்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.

வாழ்வோம் சிறப்போடும் செழிப்போடும்!




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்