அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 6

தவறிய இணைப்பு:

சென்ற தடவையில் மனிதர்கள் புவியில் முதன்முதலில் நடமாடத் தொடங்கினார்கள் என்பதற்கான சுவாரசியமான கதை ஒன்றினைச் சிலர் கூறுவதாகக் கூறியிருந்தேன் அல்லவா. ஆதனை இன்று பார்க்கப் போகின்றோம்.

சுமாராக ஐநூறாயிரம் வருடங்களுக்கு முன்னராக வேற்றுக் கிரக மனிதர்கள் எமது புவியிற்கு வந்திருக்கின்றார்கள். கதிரவக் குடும்பத்திற்கு அப்பால் எங்கேயோ வெகுதூரத்தில் உள்ள விண்மீன்; கூட்டம் ஒன்றின் விண்மீனின்; கோள் ஒன்றில் இருந்து அவர்கள் வந்திருக்கவேண்டும். புவிக்கு வருவதற்கு முன்னராக அவர்கள் செவ்வாயில் தங்கியியும் இருக்கலாமென்றும்; சந்தேகிக்கின்றார்கள். செவ்வாயில் உயிரினங்கள் இருந்திருக்கலாமென்ற சந்தேகத்தின் சாயல் இவர்களினாலேயே விடப்பட்டிருக்கலாம் என்பது இவர்களின்; ஐயம்.

அருகில் இருப்பது செவ்வபாயின் தரையில் உள்ள உள்ள மனித முகமுடைய உருவம் ஒன்றாகும். இது, முன்னொரு காலத்தில் செவ்வாயில் வாழ்ந்தவர்கள் உண்டாக்கிய மனித முகச் சிற்பம் என்கிறார்கள், ஏலியன் ஆய்வாளர்கள். இது போன்ற பல ஐயுறக் கூடிய படங்கள் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவற்றிக்கான மறுப்புகளும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுக் கொண்டதான் இருக்கிறது. செவ்வாய் விவகாரத்தை அப்படியே விட்டு விட்டு எங்களின் பாதையிற் தொடர்வோம்.

ஐநூறாயிரம் வருடங்களுக்கு முன்னராக புவியிக்கு அந்நியர்கள் வருகிறார்கள். அது, பவியில் மனிதக் கூர்ப்புப் பாதையில் மனிதத் தன்மை கொண்ட கோமோ இரெக்ரஸ்சுகளின் காலம். அவர்களின் மூளை வளர்ச்சி, அவர்களை கூட்டாக வாழக் கூடிய தன்மையைக் கொடுத்திருந்தது. புவிவாழ் உயிரினங்களில் சற்று புத்திக்கூர்மையான ஹோமோ இரெக்ரஸ்சுகள் அந்த அந்நியர்களின்; பார்வைற் பட்டுவிடுகின்றன. அதிபுத்திசாலித்தனமும் உயர் தொழில் நுட்ப அறிவும் கொண்ட அந்த ஏலியன்கள்;, இந்த ஹோமோ இரெக்ரஸ்களில்; சில மரபணுப் பொறிமுறைப் பரிசோதனைகள் செய்து பார்க்கிறார்கள், தமது தேவை கருதி. தொடர்ச்சியான அவர்களின் ஆய்வுகளின் பலனாக, சுமார் முந்நூறாயிரம் ஆண்டு முன்னராக, இன்னமும்;; புத்திக்கூர்மையான மனிதவினமான கோமோ சேபியன்கள் புவியில் தோன்றுகிறார்கள். இப்படியாக மெய்யிரம் (pல்லியன்) வருடங்களின் முன்னராகப் புவியில்; தோன்றிய மனிதவின முன்னோடிகள், வேற்றுக் கிரக மனிதர்களின் பரிசோதனைகளால் காலக் ஓட்டத்தில் புத்தி செழிப்பான உயிரினமாக மாறிப் புவியிலே ஊசாடத் தொடங்கினர். அந்தப் பரிசோதனையின் விளைவாக வந்த மாற்றத்தால்தான், கோமே இரெக்சுகளாக இருந்த நாங்கள், கோமோ சேபியன்களாக மாற, இன்று நானு; நீங்களும் இன்னும் பலரும் புவியில் வாழுகின்றோம், என்கிறார்கள். எனவேதான் தவறிய அல்லது விடுபட்ட இணைப்பென்று ஒன்று இல்லை என்றும் எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் கூட அப்படியொன்றினை யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்றும் இவர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.

கோமே இரெக்சுகளுக்கும் கோமோ சேபியன்களுக்கும் இடையில், கிட்டத்தட்ட ஐநூறாயிரம் ஆண்டு முன்னர், 200 ஆயிரம் ஆண்டு வாழ்ந்ததாகக் கருதப்படும் உயிரினம் ஒன்று இருந்தது என்கிறார்கள் அல்லவா. கூர்ப்புப் பாதையில் அதன் இக்குறுகிய காலத்தை நினைக்கையில், ஒருவேளை அவற்றில்தான் ஏலியன்கள் என்கிற அந்நியர்கள் தங்களது பரிசோதனைகளைச் செய்தார்களோ என எண்ணவும் இடமுண்டு.

இவ்விடயங்கள் இப்படியிருக்க, இன்னமும் சிலர் ஒருபடி மேலே சென்று, வேற்றுக் கிரக மனிதர்களின் மரபணுப் பொறிமுறைப் பரிசோதனைக்கு உள்ளானவர்கள் கோமோ இரெக்சுகள் அல்ல. வேற்றுக்கிரகிகள் வந்த காலமும் ஐநூறாயிரம் ஆண்டுமல்ல. வெறும் 55 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர்தான் அந்த அந்நியர்கள் புவிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வரும்போது புவியில் வாழ்ந்த ஹோமோ சேபியன்களான ஆதிமனிதர்களிற்றான் அவர்களது மரபணுப் பொறிமுறைப் பரிசோதனை நடத்தப்பட்டது என்கிறார்கள். கிட்டத்தட்ட 55 ஆயிரம் வருடங்களின் முன்னராக இந்தப் பரிசோதனை முயற்சி நடந்திருக்கலாம் என அவர்கள்; நம்புகின்றார்கள். இதன் விளைவாகத்தான், 55 ஆயிரம் வருடங்களின் முன்னர் இருந்து மனிதர்கள் புத்திசாலித்தனம் மிநுந்தவர்களாகி, புவியை ஆட்சி கொள்ள முடிந்தது என்கிறார்கள், அவ்வழியிற் சிந்திக்கும் ஆய்வாளர்கள். எது எப்படியிருப்பினும் பூமியில் இன்று பல்கிப் பெருகியிருக்கும் மனித இனமானது புவிக்கு வந்த வேற்றுக்கிரக மனிதர்களின் மரபணுப் பொறியியல் ஆய்வின் விளைவே என்பது சில இனம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய ஆய்வாளர்களின் கருத்து.

'சரி, எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது. இதனை நம்புவதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது' எனக் கேட்டால் எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் இவர்களால் முன்வைக்க முடியாதுள்ளது. சிந்தனை ஒன்றுதான் இவர்களினது உறுதியான ஆதாரம். அத்துடன் 'வேற்றுக் கிரக மனிதர்களினால் கடத்தப்பட்டோம்' எனக் கூறும் சிலரும் மனோவசியச் சிகிச்சையின் போது (அறிதுயில் நிலையில்;) இதுபோன்று கூறியுள்ளார்கள். இந்நாட்களில் ஆய்வாளர்கள் பல ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். அவற்றினைப் பற்றியும் அவசியம் பார்ப்போம். அதற்கு முன்னதாக இவ்விடயம் தொடர்பாகச் சில தெளிவுகளைப் பெற்றுக் கொள்வோம்.

வேற்றுக் கிரக மனிதர்களின் மாபணுப் பொறிமுறைப் பரிசோதனை நடந்திருக்கலாம் என எண்ணுவதற்காக வாய்ப்பும் உண்டு. மனிதர்களின் சகோதர இனமான நியாண்டதல்களின் அழிவு இதனை உண்மைதான் எனக் கூறுவது போல இருக்கின்றது. ஹோமோ சேபியன்கள் எனப் பொதுவாகக் கூறப்படும் ஆதி மனிதர்களும், நியாண்டரல்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஹோமோ சேபியன்களில் 55,000 ஆண்டு முன்னராக எப்படியோ அவர்களது மூளையில் ஒரு 'மூளை விகாரம்'
(Brain Mutation) எற்பட்டு அவர்களது அறிவியல் நிலையானது சடுதியில் மாற்றம் அடைந்து விட்டது என்பது ஆய்வாளர்களின் கூற்று. இவ்வறிவியல் மாற்றத்தின்; விளைவாகவே, அக்காலத்தில் தங்களுடன் (போட்டியாக) இருந்த சகோதர இனமான நியாண்டதல்களை முற்றாகவே அழிக்கக் கூடயதாக இருந்தது என்கிறார்கள் நியாண்டதல்கள் பற்றி ஆய்வு செய்கிறவர்கள். இந்த மூளை விகாரம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பது இன்னமும் தெரியாது. இயற்கையின் சூழலால் ஏற்பட்டதா? ஆல்லது செயற்கைச் செயலாக அது அமைந்ததா? என்பது இன்னமும் சரியாக அறியப்படவில்லை.

சரி, இதனை ஏற்றுக் கொள்வோமாயின் இதுபற்றி சற்றுஆய்ந்து பார்ப்போம். இதன் வழியில், புவியில்; மனிதவினமென்பது இயற்கையின் முற்று முழுதான தெரிவல்ல என்றாகின்றது. வேற்றுக் கிரக மனிதர்களின் மரபணுப் பொறிமுறைப் பரிசோதனையின் காரணமாகத்தான் ஹோமோ சேபியன்கள் என்கிற மனித இனம் பக்குவம் அடைந்ததாக இருப்பின், இன்னமும் சில மெய்யிரம் (மில்லியன்) ஆண்டில், ஒருவேளை சில குரங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சியில் இன்னொரு இனம் தோன்றினாலும் தோன்றலாம். அவ்விதம் இயற்கையின் தேர்வின் அடிப்படையில் தோன்றக் கூடிய அவ்வுயிரினம் மனிதரை ஒத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயற்கை எவ்விதம் தெரிவு செய்கின்றதோ அப்படியான உயிரினமாக அது இருக்கும். புவியில் முழுமையான மனித இனம் வேற்றுக் கிரக மனிதர்களின் மரபணுப் பொறியியல் ஆய்வின் பலாபலன் என்பது சரியானதாக இருக்குமாயின், பூமியிற்கும் வருங்காலங்களில் எதுவித ஆபத்தும் நிகழாது இருக்குமாயின், எமது எதிர்கால வாரிசுகள் மனிதக் குரங்குகளின் பரிணாம வளர்ச்சியில் வரக்கூடிய உயிரினங்களையும் காணக்கூடியதாகவிருக்கும், இல்லையா!

அது சரி, பூமியில் மனிதவினம் ஏலியன்களினால்தான் தோன்றியிதாகவே இருக்கட்டும். அதற்கும் இப்ப கூறப்படும் அறியப்படா வானவூர்திகளுக்கும்
(UFO) அந்நியர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றீர்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விடை தானாகவே கிடைக்கும். எனது உதவி கூட உங்களுக்குத் தேவைப்படாது. என்றாலும் சில விடயங்களை நானும் கூறுகிறேன், அடுத்த தடவையில்.

அந்த விபரத்தை அடுத்த தடவையிற் பார்ப்போம்.




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்