அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 13

சென்ற தடவையில் நிருபு என்ற 'கோள்எக்ஸ்', உண்மையிலேயே இருக்கலாம் என்பதை எவ்விதம் வானவியலாளர்களும், ஆய்வாளர்களும் நியாயப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தோம். மேலும் நிருபுவினர், புவியிலே செய்த குளோனிங் பற்றிய குறிப்புகள் பற்றியும் பார்த்தோம். இன்று இன்னமும் இந்த விடயம் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்வோம்.

'நிருபு' கோளின் வளங்கள் குன்றிவிட்டது, அல்லது அவர்கள் மிகவும் பெரியதான அறிவியல் நிலைக்கு வருகையில் அவர்களது கோள் மாசடைந்து விட்டது. அதனைத்; துப்பரவு செய்வதற்கு, அல்லது சீர் செய்வதற்கு அவர்களுக்குத் தங்கம் தேவைப்பட்டது. எனவே அயற்கோள்களை ஆராய்ந்ததில் புவியே அவர்களுக்கு தங்கத்தை எடுப்பதற்கு பொருத்தமான கோளாக இருக்க, புவியை நாடி வருகிறார்கள். இதற்கிடையில் நிருபுவில் அரசியல் சிக்கல்களும் ஏற்படுகிறது. அவற்றினையும் கொஞ்சம் விபரமாகத் தெரிந்து கொள்வோம். ஆதற்கு முன்னராக, வெகு பொதுமையாக நிருபுவினர் புவியிற் செய்தவற்றைத் தெரிந்து கொள்வோம்.

அறிவியல் நிலை உயர்வாக இருந்தாலும் விண்வெளிப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவர்களாற் செய்யக் கூடியதாக இருந்தது. அதனால், நிருபு, புவியிற்கு அருகில் வருங்காலங்களிலேயே புவியிற்கு வந்தார்கள். ஆரம்பக் காலங்களில் புவியிலேயே தங்கியிருந்து தங்கம் தோண்டும் வேலைகளில் ஈடுபட்டார்கள். பின்னர், நாட்கள் செல்லச் செல்ல, அதிலே இருந்த சிரமங்களைக் குறைப்பதற்காக, கோமோ இnhக்ஸ்சுகளில் மரபணுப் பொறிமுறைப் பரிசோதனையைச் செய்கிறார்கள்.

ஒருகாலகட்டத்தில் அவர்களது தேவைகள் முழுமையடைய அல்லது புவியில் தங்கத்தின் வளம் குறைந்து விட, புவியினை விட்டு வெளியேறுகின்றார்கள். அப்படி வெளியேறுகையில் ஆபிரிக்காவில் தங்களாற் தோற்றுவிக்கப்பட்ட மனித இனத்திற்குப் புவியில் வாழத் தேவையான அறிவையும், பயிற்சியையும் கொடுத்து, ஆபிரிக்காவில் இருந்து, மெசப்பத்தேமியா பகுதிக்கு அனுப்புகிறார்கள். அவர்கள்தான், சுமேரியர்கள். நிருபுவினரிடம் இருந்து பெற்ற செல்வங்கள்தான் சுமேரியரின் கட்டிடக்கலை, வானியல் அறிவு, மருத்துவ அறிவு, விவசாய அறிவு, நீர்ப்பாசன முறைகள், சித்திர எழுத்துக்கள் போன்றவை. இப்படியாக வந்த சுமேரியர்கள், தங்களைத் தோற்றுவித்தவர்களை, அல்லது தங்களை ஆண்டவர்களைக் கடவுள்கள் எனப் போற்றினார்கள். அவர்களுக்குக் கோயில் கட்டி, அவர்களது சிலைகளை வைத்து மரியாதை செய்யத் தொடங்கி, வணங்கவும் செய்தார்கள். அவர்களைப் பற்றிய கதைகளும் சோடனைகளும் சுமேரியர்களின் புராணங்களாக
(myth) ஆகிவிட்டன. இந்தப் புராணப் பண்பாடு, சுமேரியர்களிடம் இருந்து, அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குச் சுமேரியரின் அறிவியல் வளங்களுடம் சேர்ந்து கடத்தப்பட்டு, நாளடைவில், பல்வகையான முன்னேற்றங்களுடன் இன்று உலகம் முழுவதுமே பரவி விட்டது.

சுமேரியரின் களிமண் தகடுகளின் குறிப்பின்படி, ஆபிரிக்காவில் வந்திறங்கிய நிருபுவினரைப் பொதுவாகவே அனுனாக்கியர் என்றே அழைத்தார்கள். கால ஓட்டத்தில் அனுனாக்கியரில் ஒருவரே கோமோ சேபியன்களாகிய எங்களின் செப்பனிடுகைக்குக் காலாக இருக்கிறார். புதிதாக உருப்பெற்ற கோமோ கேபியன்களின் கவனத்திற்கு வந்த அவருக்கே அனுனாக்கி
(Anunnaki) என்ற பெயர் தனித்து விட்டது. பொதுவிலே, அனுனாக்கியர் என்பதன் கருத்து, 'வானில் இருந்து வந்தவர்கள்', 'தேவர்கள்;' எனச் சுமேரிய மொழியிற் கூறப்படுகிறது. சுமேரியத்தில் 'அன்' என்பதன் கருத்து 'வான்' என்பதாம். உண்மையில் ஆனுனாக்கியர் என உச்சரிக்கப்ட வேண்டுமோ என்ற எண்ணமும் உண்டு. ஏனெனில் எங்களின் (தமிழரின்) 'வான்' என்பதுதான் 'ஆன்' என உச்சரிக்கப்பட்டுப் பின் 'அன்' என மாறியதாக இருக்கலாம் எனக் கூறும் நம்மவர்கள் சிலர் உள்ளனர். இந்த அனுநாக்கியை 'அனு' என்றும் சில இடங்களிற் சுமேரியர்கள் குறித்து வைத்திருக்கிறார்கள்.

(படம், சுமேரியர்கள் கூறும் அனுனாக்கியைக் காட்டுகிறது.)
இந்த அனுனாக்கி என்பவர் வல்லமை மிக்கவராய் இருந்திருக்கிறார். இவரது வல்லமைக்கு இவர் கையில் இருந்த ஆயுதத்தையும் ஒரு எடுத்துக் காட்டாகக் கூறுகிறார்கள். இந்த அனுனாக்கிதான் இன்று உள்ள எல்லாக் கடவுள்களினதும் உற்பத்தியிடம் எனக் கூறும் ஆய்வாளர்களும் உள்ளனர். கிட்டத்தட்ட அந்நாளின் எல்லாக் கடவுள்களும் வைத்திருக்கும் ஆயுதங்கள் எல்லாமே, மிகவும் தொழில்துட்பம் கூடிய கருவிகள்தான் எனவும் இவர்கள் கூறுகின்றார்கள். காட்டாக, கிரேக்க, உரோம, தமிழ் மற்றும் பல இனத்துக் கடவுளர்களினது கைகளிற் காட்டப்படும் ஆயுதங்களைப் பாருங்கள். சூலாயுதம், வேலாயுதம், சக்கராயுதம் என்பவை நினைவில் வருகின்றனவா!

நிருபுவினர் கோமோ இரெக்ஸ்சுகளின் மரபணுவிற் செய்த மாற்றுப் பரிசோதனையில் தமது மரபணுவின் கூறுகளையும் இணைத்ததற்கான குறிப்புகள் சுமேரியரின் களிமண் தகடுகளிற் காணப்படுகின்றன. இம்முயற்சியின் பின்னரே அவர்களது பரிசோதனைகள் வெற்றியளித்து கோமோ சேபியன்கள் ஆகிய நாங்கள் தோன்றியிருக்கிறோம். இப்படியாக நிருபுவினரால் உருவாக்கப்பட்ட முதல் மனிதனுக்கு ஆதமு எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இப்பெயர்தான் கிறிஸ்தவர்களின் ஆதாம் என வருகிறதோ எனச் சந்தேகிக்கும் ஆய்வாளர்களும் உள்ளனர். எங்களுக்கும், ஆதன் என்ற பெயரொன்று உள்ளதும் உங்களுக்கு நினைவிற்கு வரலாம். ஆதன் என்பது, முதலாமவன் என்ற கருத்தும் கொள்ளும் என்பர் சிலர். இந்த ஆதன் - ஆதமு – ஆதாம் என்ற மூன்று பெயர்களையும் ஒன்றாகக் காண்பவர்களும் உள்ளனர். (உங்களுக்கும் அப்படியொரு எண்ணம் எழுகின்றதா?) ஒருவேளை நிருபுவினருக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் கூட, ஏதோ தொடர்பு இருக்குமோ! ஐமிச்சம் ஒன்று வருகிறது, இல்லையா?

(படம், மனித உருவாக்கத்திற்கான அடையாளப்படுத்தல் ஆகும்.)
விடயங்கள் ஒன்றும் நான் கூறியது போலச் சுலபமானதாக இருந்திருக்கவில்லை, நிருபுவினருக்கு. அனுநாக்கியர், புவியில் மனித இனத்தை, கோமோ சேபியன்களை உருவாக்கி முடிப்பதற்கும் முன்னர் பல வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையாக இருந்தது, தங்கச் சுரங்கங்களில் தங்களுக்காக வேலை செய்யக் கூடிய, வலிமையான, அடிமைத்தனமான உயிரினம் ஒன்று. முதலில் தங்களையே பிரதி (குளோனிங்) செய்வதற்கு முயற்சித்திருக்கிறார்கள். அதிலுள்ள சிரமங்கள், பாரதூரங்கள் என்பவற்றை நினைவிற் கொண்டு, அடுத்துப் புவியின் ஒன்றிரண்டு வலிமையான உயிரினங்களைச் சேர்த்துப் புதிய, தங்களுக்குத் தேவையான உயிரி உன்றினைத் தோற்றுவிப்பதற்கு முயன்றிருக்கிறார்கள், வெற்றியும் கண்டார்கள். அப்படியாகத் தோன்றியவைதான் புராணங்கள் கூறும் ஈருருச்சேர்ப்பு
(Hybrid) உயிரினங்கள் என்கிறார்கள். மனிதத்தலையுடன் கூடிய மிருகங்கள், மனித உடலும் மிருகத் தலையும் கொண்ட பிராணிகள், முதலை உடலோடு கூடிய மனிதன், கடற்கன்னிகள் (Mermaid)> பறவைமுக மனிதர்கள், இப்படியான ஈருருச்; சேர்மானங்களைத் தயாரித்த போதிலும், அவ்வுயிரினங்களை நிருபுவினரால் கட்டுக்குள் வைத்திருக்கவோ, அல்லது அவற்றைத் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்வதற்குப் பயிற்றுவிக்கவோ முடியவில்லை. அப்படியான ஈருருச்சேர்ப்புகளுக்கு அவற்றின் உடற்பருமனுக்குத் தேவையான மூளையையும் கொடுக்க முடியவில்லை. அதனால் ஈற்றிலே கோமோ இரெக்ஸ்சுகளில் கண்வைத்தனர், அறிவியல் வல்லமை கொண்ட நிருபினர். இம்முயற்சியில் வெற்றியும் கண்டார்கள்.

'இறைவன் மனிதரைத் தன் சாயலிலேயே படைத்தான்' என்பதைத்தான் எல்லா மதங்களுமே கூறுகின்றன. கோமோ இரெக்ஸ்சுகளின் 'டீஎன்ஏ'யில் அனுனாக்கி, மட்டுப்படுத்தப்பட்ட அளவில், தனது டீஎன்ஏ அமைப்பினை உருவாக்கியே மரபணு மாற்றப் பரிசோதனையைச் செய்து, கோமோ சேபியன்களை, அல்லது ஆதமுவை உண்டாக்கியிருக்கிறார். அதனால்தான், 'ஆண்டவன் தன் சாயலில் மனிதரை உண்டாக்கினான்' என்ற வாசகம் எல்லா மதங்களிலும் காணப்படுகிறது என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். இங்கும் முதலில் ஆதமுவின் பல பிரதிகளைத்தான் (குளோனிங்) ஆக்க முயற்சித்திருக்கிறார்கள். அப்படி உருவாக்கியும் இருக்கிறார்கள். ஆனால், அதிலுள்ள வில்லங்கங்களைச் சமாளிக் முடியாமல், குளோனிங்கை நிறுத்திவிட்டு, கோமோ சேபியன்கள் (மனிதர்கள்) தங்களைத் தாங்களே மீளுற்பத்தி செய்யக் கூடியதாக, பெண்னின் அமைப்பை உண்டாக்கினார்கள். (கோமோ இரெக்ஸ்சுகளில் இனவிருத்தி அமைப்பாக, ஆண், பெண் பாலமைப்புகள் இயற்கையாகவே இருந்தததையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.) இப்படியான நிருபுவினரின் தொடர்செயற்பாடுகளின் வழியில், ஆதமுவின் வழித்தோன்றல்களாகப் பல்கிப் பெருகியவர்கள்தான் மனிதர்களாகிய, கோமோ சேபியன்கள் எனப்படுகிற நாங்கள்.

என்ன! எங்களின் சங்கதிகள் சுவரசியமாக இருக்கின்றதா! இன்னமும் சுவரசியங்கள் இருக்கின்றன. தொடரும் சில நாட்களில் ஏலியன் பற்றிய பதிவுகளை மறந்து விட்டு இவற்றைச் சுவைப்போம். ஆனாலும் எங்கள் பாதை 'அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்' என்ற அறிவியற் பகுதிதான். மறுமுறையில் இன்னமும் சில அறிவியற் சுவாரசியங்களைத் தருகிறேன்.
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்