தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது- 2012

  

கவிநாதன் 
 

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் இணைந்து ஆண்டு தோறும் சிறந்த படைப்புக்களை தேர்வுசெய்து விருது வழங்கிவருகிறது. சென்ற ஆண்டு வெளியான பதின்னான்கு நூல்கள் இவ்விருதுக்கு தகுதியானவையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் கனடாவாழ் எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பிற்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது. அகிலின் இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ஏற்கனவே பல விருதுகள் கிடைத்துள்ளன. மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருது, கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கியவிருது, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கியவிருது கிடைக்கவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி - 2012 இல் இந்நூலுக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது. பெருமைக்குரிய இப்படைப்பாளிகள் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்ற கலைவிழாவில் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.