பயணம்

சதீஷ

"சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வரை செல்லும் மின்தொடர் ஐந்து நிமிடங்கள் கால தாமதமாக இரண்டாம் நடைமேடைக்கு வரும் என்று எதிர் பார்க்க படுகின்றது". அன்று அறிவிப்பையும் மீறி மின்தொடர் பேசின் பால சந்திப்பின் இரண்டாம் நடைமேடைக்கு வந்து நின்றது நானும் என் நண்பனும் வண்டியின் மூன்றாம் பெட்டியில் ஏறி அமர்தோம். வண்டி புறப்பட்டதும் மெதுவாக தான் சென்றது. திடீர் என எங்கிருந்தோ ஒரு பாட்டு "தீபிடிக்க தீபிடிக்க..." என்று பாட்டின் குரல் நின்றுவிட்டது. எனது கைபேசியின் அலறல் என புரிந்து கொண்ட என் நண்பன் அதில் வது இருந்த செய்தியை படித்தான். "இந்த வண்டி எந்த நிலையத்திலும் நிற்காது" என்று அதில் செய்தி வந்தது.

அதே போன்று வண்டி அடுத்த நிலையத்தில் நிற்க வில்லை. அதிர்ந்து போன என் நண்பன் விக்னேஷ் அதை என் இடம் சொல்லும் போது மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." என்று எனது கைபேசியின் அலறல், இது யார் கைபேசி என்று நான் கேட்க உனது என்றான். ஆனால் நான் இந்த பாட்டை வைக்க வில்லை என்று கூறினேன். பிறகு செய்தியை படித்தான் "சிவப்பு சங்கிலியை இழுக்கவும் இல்லை உங்கள் பின் பெட்டி வெடித்து விடும்" என்று இருந்தது.

அதிர்ந்து போன அவன் சிவப்பு சங்கிலியை இழுக்க போனான், நான் அவனை தடுத்து இது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் யாரோ செய்கிறார்கள் நம்பாதே என்றேன். சட்டென பின் இருந்து ஒரு பயங்கர சத்தம் திரும்பு பார்த்து இருவரும் அழுது விட்டோம் ஆம் செய்தியை போலவே நடந்தேறியது.

மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." கைபேசியின் அலறல் தொடர்ந்தது விக்னேஷ் எடுத்து படித்தான் "கதவின் அருகில் இருக்கும் நபரை கிழே தள்ளவும் இல்லை என்றால் உனது தலை வெடிக்கும் அந்த நபரும் கிழே விழுவார்". அதிர்ந்து போன இருவரும் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தோம்.

கதவின் அருகில் நின்று கொண்டு இருந்தவரை காண வில்லை, "விக்னேஷ் இங்க பாருடா அவரை காணும் ம் ம் ம் ....". ஆஆஅ .. (வாயில் இருந்து காற்று மட்டும் வந்தது) விக்னேஷ் தலை வெடித்து அவனது காது என் அருகில் விழுந்து கிடந்தது. என் சட்டை எல்லாம் அவனது இரத்தம். வண்டியின் வேகம் குறையாமல் வண்டியன் சத்தத்துடன் "தீபிடிக்க தீபிடிக்க..." அதிர்ந்தது செய்தியை எடுத்து படித்தேன் "வண்டியில் இருந்து கிழே குதிக்கவும் ... தீபிடிக்கும் தீபிடிக்கும் ...". என்ன செய்வது என தெரியாமல் கைபேசியை சன்னல் வழியாக வெளியே வீசினேன்.

மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." டமார் என வெடிக்கும் சத்தத்தில் விக்னேஷின் குரலில் "என்ன டா இன்னும் எழுந்திரிகிலைய ..." பதறி எழுந்து பார்த்தால் அத்தனையும் கனவு, மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." கைபேசியின் அலறல் அது எழுப்பு மணியின் ஓசை அனைத்து விட்டு மீண்டும் தொடங்கினேன் எனது கனவின் பயணத்தை...



itsat80@gmail.com