உரையாடும் நினைவுகள்

முனைவர் து.ருக்மணி

ன்னோடு
பேசுவதில்லையென
எப்போதாவதான நம்
உரையாடலைக் கூட
நீ நிறுத்திவிட்டாலும்
வாசிக்கும்போதும்
வாழ்வுச் சூழலிலும்
உன்பெயர் கொண்ட
யாரோ ஒருவரைக்
கடக்கும் நேரம்
ஓடிவந்து உரையாடுகின்றன
உன்னுடனான
என் நினைவுகள்
உனக்கும்
அப்படித்தானே !





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்