கவிஞன்

கவிஞர் புகாரி

னக்குள்
எரியும் நெருப்பைத்
திரியில் ஏற்றும் எரிமலை

புழுக்கள்
நிறைந்த பூமியைச்
சலிக்கத் தெரிந்த சல்லடை

அனுபவ
ரத்தம் திரித்து
பாலாய்ச் சுரக்கும் மார்பு

மொழியின்
வேர்கள் உலுக்கி
பூக்கள் கொட்டும் காம்பு

உணர்வின்
விரல்கள் விரித்து
உழலும் உயிர்க்கு மருந்து

நிலவும்
வாழ்க்கை வழக்கில்
தலைமுறை கடந்த தீர்ப்பு

மறுக்கும்
தரையை மிதித்து
பறக்கத் தெரிந்த பறவை





 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்