மனமே மனமே

கவிஞர் புகாரி

டிந்து ஒடிந்து
விழுந்தாய்

எடுத்து எடுத்து
நிறுத்தினேன்

மனமே
நீ
மீண்டும் மீண்டும்
ஒடிந்து ஒடிந்தே
விழுந்தாய்

எடுத்து நிறுத்தும்
கவலையைக் கைவிட்டு
சனியனே என்று
மறந்தே போனேன்

ஒடியாத
வானமானாய்
அன்றுதொட்டு
நீ
ஒடிந்து விழும்
இதயங்களுக்கெல்லாம்
மயிலிறகு பொழியும்
கர்ப்பம் தரித்தாய்

பூட்டும் சாவியும்
நீதான் நீதான்
மனமே மனமே




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்