பசுமைசாலையா கூற்றுக்கயிறா

பாவலர் கருமலைத்தமிழாழன்

ற்றுக்கிங் கரசாங்கம் மக்கள் தம்மை
          ஏதிலியாய் ஆக்குதற்கா ! திட்ட மெல்லாம்
வற்றாத வளங்கனினைத் தருதற் கன்றி
          வாடவிட்டு மக்களினைக் கொல்வ தன்று !
கொற்றவனே கூற்றுவனாய் மாறி யிங்கே
          கொடுங்கோலாய் செய்வதுவா மக்க ளாட்சி
பெற்றதாயின் உயிர்பறித்தல் போன்ற தன்றோ
          பேணுகின்ற வயலழித்துச் சாலை போடல் !

க்களுக்கு நன்மைதரும் திட்ட மென்றால்
          மகத்தான திட்டமென்றே உலகு போற்றும்
தக்கபடி செயல்திட்டம் வகுக்கும் போதே
         தகுதிட்டம் எனமக்கள் ஏற்றுக் கொள்வர் !
சிக்கலினை உண்டாக்கி வாழ்வு தம்மை
         சீரழிக்கும் திட்டமதோ கீழ்மை திட்டம்
திக்கெட்டும் எதிர்த்தபோதும் செய்வே னென்றால்
         திருவாட்சி அன்றஅது தீய ஆட்சி !

நெல்வயல்கள் அழித்தமைக்கும் நீள்சா லையா
        நெஞ்சினிக்கும் பசுமைசாலை ! வீட ழித்தே
எல்லோரைத் தெருவினிலே நிற்க வைக்கும்
         எண்சாலை களாஇன்பம் நல்கும் சாலை !
அல்லலினைத் தருகின்ற செயல்கள் செய்யும்
         ஆட்சியதோ மக்கள்தம் தீய ஆட்சி
தொல்லைதரும் ஆட்சியினைத் தூக்கெ றிந்தே
         தோள்தட்டி நல்லாட்சி அமைப்போம் வாரீர் !


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்