ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் இரா.இரவி
 

ழிவது கண்ணீர் அல்ல
செந்நீர்
மரம் அறுக்கையில் !

நூற்றாண்டுகள் கடந்தும்
கம்பீரமாக நிற்கின்றன
வெள்ளையர் காலத்து கட்டிடங்கள் !

சில ஆண்டுகளில்
விரிசல் விழுந்துள்ளன
அரசியல்வாதிகளின் கட்டிடங்கள் !

ழங்கப்படவில்லை
வாங்கப்படுகின்றன
விருதுகள் !

சீர்தூக்கி சிந்தித்தால்
நடக்காது
தற்கொலை !

சாக பல வழிகள் இருக்கையில்
வழிகள் உண்டு
வாழவும் !

நினைவு நாளில் மட்டும்
நினைக்கப்படுபவனல்ல
மகாகவி பாரதி !

பிறர் சொல்வதை கேட்காவிடினும்
மனசாட்சி சொல்வதை கேள்
சிறப்பாய் வாழ்வில் !

வேண்டாம் தன்னலச்சீற்றம்
நல்லவருக்கு வேண்டும்
பொதுநலச்சீற்றம் !






 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்