இது மரணம் சம்பவித்த வீடு

பிரபு

சுற்றமும் சூழமும்
சோகத்தோடு நிற்க
அழுதுகொண்டிருக்கிறார்கள் - என்
அன்பு மனைவியும் மகளும்
கலங்கி நிற்கிறான் மகன்

அள்ளி அணைத்து
ஆறுதல் மொழி சொன்னேன்
வாழ்நாளெல்லாம் காட்டாத அன்பை
காட்ட முயன்றேன் - ஆனால்
என் மொழி புரியவில்லை அவர்கட்கு

வேறு என்ன செய்ய முடியும்
கண்ணாடி பெட்டிக்குள் கிடக்கும் என்னால்...?...! ....?...!


priyamudan.prabu83@gmail.com