நடுத்தெருவில். . . . .

முனைவர் ச.சந்திரா

விதை முதல் விருட்சம் வரை
பாரத தேச சொத்திற்கு
உயில் எழுதுகிறது
அன்னிய அரசாங்கம் !

நாட்டின் முதுகெலும்பு
முறிக்கப்பட்டு
நரம்புகள் அறுக்கப்படுகிறது
நவீனம் எனும் ஆயுதம் கொண்டு,

உழவு மாடுகள் உல்லாசமாய்
பயணம் போகின்றன
உயிரிழக்கும்
உண்மையறியாமல்!

பயிர்களோடு
மனிதப் பிணிகளை
சேர்த்தே வளர்க்கின்றன
செயற்கை உரங்கள் !

பூச்சிக் கொல்லி மருந்துகளோ
அணு அணுவாய் உருமாற்றம்
மனித உயிர்க் கொள்ளியாய்

நிலமகளின் துகிலுரிக்க
துச்சாதனனாய்
அறுவடை
இயந்திரத்தின் அவதாரம் !

மொத்தத்தில் விவசாயம்
நவசாயம் பூசிக்கொண்டு
நடுத்தெருவில் ஊர்வலம் !
 

neraimathi@rocketmail.com