நான் கற்ற பாரதியார்

புலவர் முருகேசு மயில்வாகனன்

சொல்வேந்தன் பாரதியே சோதிமய மானவனே
கல்லார்க்கும் ஏற்பக் கவிதந்த – நல்வேந்தே!
வேதாந்த நல்லறிவை வேட்பாகப் பெற்றதன்
ஆதாரம் பாக்களிலே ஆம்.

நல்ல கவிஞன் நறுக்கு மொழியாளன்
வல்ல எழுத்தாளன் மாசற்ற – சொல்லின்
வரகவியாய் வாழ்ந்துசென்ற வல்லாள வேந்தன்
உரமாம் தமிழரின் ஊற்று.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்