எதிலும் வெற்றி சூழும் நாளை

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
 


ுதிய வாழ்வின் தொடக்கமாகப்
      புதிய ஆண்டும் வந்ததே!
விதியை வெல்ல வீறுகொள்ளும்
      வேகம் நெஞ்சில் தந்ததே!
நதியைப் போல நாளுமோடு
      நலங்கள் சேரும் என்றதே!
எதிலும் வெற்றி சூழும்நாளை
     என்று வாழ்த்தி நின்றதே!


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்