புதுச்சேரி தந்தமகன், புலமைமிகு 'பிரபஞ்சன்'

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
 


றுமையிலே வரண்ட வற்றாத 'ஜீவநதி' - அவன்
திறமையிலே உயர்ந்து தான்வளர்ந்த தங்கமகன்
பொறுமைமிகு பிள்ளைவன் பொதிகை மலைத்--தென்றல்
சிறுவயதில் கற்றுயர்ந்த சிரஞ்சீவி வைத்திலிங்கம்

சிரியர், எழுத்தாளர், அழகுகவி, அற்புத  -  விமர்சகர்
பேசுநயம் பெற்றெழுந்தான் 'பிரபஞ்சன்' புனைபெயரில்
வீசுபகழ் ஆனந்த விகடன் வித்தகக் - குமுதம்
வாசகர் மத்தியிலே வானுயந்து நின்றனனே

'என்ன உலகமெடா' சிறுகதை வாசகரைப்  -  பின்னி
உன்னி உணரவைத்த உயர்ந்த படைப்பாகும்
கன்னல் மொழிநடை காந்தக் கருத்தழகு  -  பிரபஞ்சன்
இன்னல் இடரெல்லாம் எழுத்தாக மலர்ந்தனவே!

ஞா
னம் சிறந்த நாற்பத்தாறு நூல்கள்  -  படைத்தான்
'வானம் வசப்படும்' சாகித்திய விருதுபெற்றது
தேனொத்த படைப்புகள் பாடப் புத்தகங்கள் -  ஆயின
'நேற்றுமனிதன்' கல்லூரிப் பாடநூ லாச்சே!

ந்தி, தெலுங்க, கன்னடம், பிரான்சு  -  யேர்மன்
வந்து வரவேற்றே, ஆங்கிலம் சுவீடன்
வந்தனை கூறி விருப்புடன் மொழிபெயர்த்  -  தனவே
சிந்தனையைப் பாராட்டி விருதுகள் தந்தனவே!

பொ
ன்மகனே! பிரபஞ்சனே! புண்ணியனே உன்னைப் - பெற்ற
அன்னை தவமதனை அகிலமே போற்றுதடா!
தன்னிகர் அற்ற தனிப்பெரும் எழுத்தாளனே -  தாய்நாடு
சென்னியில் வைத்துன்னைச் சேவிக்க மறவாதே!
 


 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்