நாளும் முயன்றிடுவோம்

கவிஞர் அ.இராஜகோபாலன்
 




ன்றன் மொழியோர் ’உயர்மொழி’ என்றிடில்
       ஒன்றும் பிழையில்லை – அதன்
உயர்வை யுணர்ந்தே உவகை கொள்வதில்
       ஒன்றும் தவறில்லை.

ன்றன் மொழிதான் உலகிலு யர்ந்ததென்
       றுரைப்பது சரியில்லை – இங்கே
ஏசிப் பிறமொழி பேசிடு நன்பரை
       எள்ளுதல் முறையில்லை.

ன்றாய்த் தாய்மொழி உலகிலு ளோர்க்கொரு
       உரிமையில் உளதாகும். – அந்த
ஒவ்வொரு மொழியிலும் உயர்படைப் பென்பவை
       ஒருநூ றுளவாகும்.

ன்றாய்ப் பிறமொழி நூல்பல மாற்றி
       நம்மொழி சேர்த்திடுவோம். – இன்னும்
நம்நூல் பலவும் பிறமொழி மாற்ற
       நாளும் முயன்றிடுவோம்.


சர்வதேச தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)

 

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்