மீளெழும் கனவுகள்..

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

அதிகாலைப் பட்சிகளின்
அலறல் கடந்து..
சூரியகக் குளியல் நடத்தும்
நிர்வாண பொழுது
சுவாசம் புணரப்பட்டு
முகம் கழுவாத மரங்கள்
சோம்பல் முறித்து..
எழும் ஒருநாளின்
தழும்புகளை தடவிப்பார்க்கும்
நிழல்கள்..
தார்ப்பாதைகளின்
தாழ்வாரங்கள் தோறும்..
கனவுக் கொடிகள் படர்ந்து
வேகமாய் ஓடும் வாழ்க்கை
தன்னை கடந்து செல்லும்
ஒரு மிக நெருங்கிய நட்பையோ..
அல்லது..
ஒரு உறவையோ..
அவதானித்து
குசலம் விசாரிக்க முடிவதில்லை
இந்த மீளெழும் கனவுகளில்.


armfarveen@gmail.com