வாய்மையைப் போற்றல் வரம் !

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்


னகவி என்றாலும் ஆசுகவி என்றாலும்
மானிடம் சொல்லும் மனிதம் !

ாட்டு விழுப்பம் நவிலுமொழி அன்பின்றிக்
கூட்டுமொழி யாகிலுமே கேடு !

ெய்வம் தொழுவார் திருமுறைகள் பாடிவரும்
சைவர் புனிதரெனச் சாற்று !

ற்பனையும் காப்பும் கனியும் திருப்பாக்கள்
சிற்பம் மரபென்றே செப்பு!

ாளெல்லாம் திட்டு நரம்புஇலா நாக்கென்று
தேளாய்க் கடிக்கும் திடல் !

ேர்மையாய் நின்றும் நிகழ்ச்சி அறமாயும்
வாய்மையே போற்றும் வரம் !

டைப்பாளி யாயிருந்தும் பண்புஇலான் கெட்ட
நடைப்பிணமே நாத்தும் நரி !

ல்லசொல் சொல்லான் நயம்பற்று இல்லானோர்
வல்ல கவியாய் வரான் !

றம்பாடிச் செல்வான் அடிக்கமலம் போற்றும்
திறம்பாடி யூற்றும் துயர் !

ிட்டித் திரவியத்தைத் தட்டிப் பறியென்ற
கெட்டான் இனத்துக் கிடர் !

 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்