நாற்காலி

கவிதாயினி ச.சந்திரா

மேசைக்கு அந்தப்புறம்
உனக்கு ஒரு மதிப்பு !
மேசைக்கு இந்தப்புறம்
உனக்கு வேறு மதிப்பு !
உன்னை வைத்தல்ல
நாற்காலியே !உனக்கு மதிப்பு !
நீ இருக்கும் இடத்தை
வைத்தேஉனக்கு மதிப்பு !
நீ சுழன்றாலோ உனக்கு
தனி மதிப்பு !நாற்காலியே !
மனித அத்தியாயத்தின்
இறுதி நாளில் கூட
உயிரற்ற ஜீவனைச் சுமக்கும்
மனிதாபிமானம் கொண்ட நீ
சில நேரங்களில் மின்சார
நாற்காலியாய் உருமாறி
தூக்குத்தண்டனைக்கு
துணைபோவதும் ஏனோ ?