நேரிலா நேரிழை !

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்


லகத் தமிழை உதித்ததோர் பூமித்
தலமாக வேவந்த தாயாய் -  அலகின்
முதலாகப் பூத்து மொழிப்பூ அவளாய்
விதையாக நின்றாள் விரும்பி !

பேசும் குரலாய் புவிமாந்தர் ஒன்றாக
வாசம் பரப்பும் வடிவுடையாள்  -  தேசமெலாம்
பாசமொழி ஆக்கிப் படியுரைக்கும் வண்டாகும்
நேசமொழி தானே இவள்!

றைவனைப் போற்றும் இசையாக நின்றே
மறையினை வார்த்தவளே வந்தாள்  -  குரலாக
யார்வந்தா லென்னவோ யாப்போடும் தூரிகை
நேர்கொள்;ள வைத்தாள் நிசம்!

காப்பியங்கள் கண்டாள் கனந்துறையும் தெய்வமொழித்
தோப்பெனவே நின்றாள் துறையார்ந்தாள்  -  ஆப்பெனவே
பல்மொழியார் வந்தும் பகைமொழியார் வந்துமென்ன
வெல்லும் தமிழ்மொழியே வேர்!

ன்னை இழந்தேன் இவட்குத் தலைவணங்கிப்
பொன்னைத் தமிழெழுத்தாய்ப் பெற்றேனே  –  தன்நேரில்
இல்லா அழகெழிலாள் ஏகப் பரப்பிலெங்கும்
சொல்லாகி நிற்பாள் செகம்!

 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்