யார் இந்த மாவீர்ர்?

புலவர் 
முருகேசு மயில்வாகனன்


னவாதம் மேலோங்க ஈழப்போ ராட்டம்
மனமொழி மெய்களால் மீண்டும் – இனவழிப்பே
கல்வியிலே சிங்களத்தார் கைவைக்க காளையர்கள்
தொல்லை கொடுத்தனரே தேர்.

ரந்திருந்த போராட்டம் காலத்தின் மாற்றம்
வரமாகப் பெற்றனரே வாய்ப்பை – தரமான
போரைத் தவறின்றிப் போற்றும் வகையிலே
சீராகச் செய்த சிறப்பு.

நெஞ்சேற வந்தகுண்டை நேரெதிர் கொண்டதனை
வஞ்சனையர் கண்டஞ்சி வாடியே – தஞ்சமென
ஓடி ஒழித்தனரே ஏக்கமுடன்இ எம்மவர்கள்
நாடினரே வெற்றிபல நன்கு.

டற்புலிகள் சாகசங்கள் கண்ணைக் கவரும்
கடமையின் காவலர்கள் காலம் – இடமளிக்கா
விட்டாலும் தாமுணர்ந்தே வீரச் செயல்களை
திட்டமிட்டுச் செய்த சிறப்பு.

ான்படை யோடு தரைப்படையும் வானுயர
ஊனமின்றிப் போரில் உயர்ந்தனரே – தேனினிய
தாய்நாட்டைக் காக்கத்தான் தக்க 'பொலிஸ்'படையும்
கைவரப் பெற்றனரே காண்.

மாண்டாலும் கொள்கையில் மாற்றமிலா மாவீர்ர்
ஆண்டதோர் காலமுண்டே அக்காலம் – மீண்டுவர
பாரெங்கும் செந்தமிழர் பக்குவமாய் வாழ்நாட்டின்
கூரறிவால் கூர்க்கும் சிறப்பு.

ெற்றிக்கு வித்திட்ட வேங்கைகளின் வீரவாழ்வு
இற்றைவரை ஓங்கி ஒளிர்கின்ற – நற்பெயரை
சிற்றறிவு கொண்டோர் சிதைக்கத் துணிந்தார்கள்
பற்றுள்ளோர் பார்த்திருக்கார் பார்.

ெண்ணை திரண்டுவர வேற்றாரின் ஆதரவால்
மண்மீட்கச் சென்றவரை மாற்றாரின் – குண்டுகளால்
கொன்றொழித்த சிங்களமே கொள்கை வகுப்பாரின்
பொன்மொழியின் கோட்பாடோ சொல்.

சூழ்ச்சியால் வென்றவரை சூழ்ந்ததே பாவமின்று
வாழ்க்கையில் இன்பதுன்பம் வாய்ப்பாக - சூழ்ந்துநிற்கும்
எந்நேரம் ஏதென்றறி யாத மகிந்தர்க்கு
வந்தவினை நன்கறிய வாய்ப்பு.

ாண்டாலும் மாழாத மாவீர்ர் மாசற்ற
காண்டற் கரியநற் காளையர்கள் – தீண்டாமை
என்னும் அரக்கனை ஏற்கா தொழித்தனரே
இன்னலையும் ஏற்றார் எதிர்த்து.

டுகற்கள் என்றுமே நாட்டுக்குச் சொல்லும்
வடுவாம் செயல்களின் வாய்ப்பை – நடுநின்று
ஆராய்ந் தறிந்துமே ஆவனசெய் ஆள்வோரின்
சீராம் கடமைச் சிறப்பு.
 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்