முத்தமிழை வீழ்த்தும் மும்மொழிக் கொள்கை

பாவலர்  கருமலைத்தமிழாழன்
 


 

ிந்தனைக்குத் தாய்மொழிதாம் ஏற்ற தென்று
       சிந்தித்தே தமிழ்மொழிக்கு முதன்மை ஈய
இந்தியினை விரட்டுதற்குக் கல்வி தன்னில்
      இருமொழியின் கொள்கையினைக் கொண்டு வந்தார் !
வந்தயிந்த கொள்கையினால் இந்தி ஓட
       வகையாக அவ்விடத்தில் இங்கி லாந்தார்
முந்தியாண்ட அடிமையாலே ஆங்கி லத்தை
      முதன்மைமொழி என்றேத்தி அமர வைத்தார் !

ந்ததியர் அம்மாவைப் பிணமாய் யாக்கிச்
       சவக்குழியை வெட்டிட்டார் தமிழன் னைக்கு
சிந்திக்கும் திறனுமின்றி அறிவு மின்றிச்
       சிறந்ததமிழ்ப் பண்பாட்டைத் தொலைத்து விட்டார் !
சொந்தமான உடையகற்றிக் கழுத்தி றுக்கும்
       சொக்காய்க்குக் கயிறுகட்டி மாட்டிக் கொண்டார்
வந்திட்ட மழைதன்னைப் போபோ வென்றே
       வளமான வாழ்க்கையினைத் துரத்தி விட்டார் !

ருமொழியாய்த் தமிழ்படித்த நிலையை மாற்ற
       ஓதுகின்றார் மும்மொழியைத் தில்லி யுள்ளோர்
இருமொழிகள் உள்ளபோதே தமிழில் கல்வி
       இல்லையென்னும் நிலைமைதானே தமிழ கத்தில்
இருமொழிகள் மும்மொழியாய் ஆகி விட்டால்
       இந்தியாவின் மொழியென்றே இந்தி ஓங்கும்
பெருமுலக மொழியென்றே ஆங்கி லந்தான்
       பெயர்சொல்லும் ! தமிழ்மொழியோ முடங்கிப் போகும் !

 

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்