நதியின் பாடல்.

நச்சியாதீவு பர்வீன்

நதியின் பாடல்
ஒரு மெல்லிய ராகமாய்
ஒலிக்கும்..
இடைவிடாக் கனவுகளில்
இடறி விலும் வாழ்க்கை
நாறிய நிமிசங்களைப் பார்த்து
காறித்துப்பும் நினைவுகள்
அடைகாத்த அருவெறுப்புக்களை
அசைபோட்டு அழும் மனசு
தீப் பிடித்து எரியும்
காலத்தின் முதுகில்
இரண்டு வெண்ணிறக் கோடுகள்
ஒன்று பிறப்பாய்
மற்றையது இறப்பாய்
எல்லா சோகங்களையும்
சுமந்து கொண்டு
மவுனப் பாடல்களை
இயற்கை இசைக்கிறது..
எஞ்சியிருப்பது
நதியின் பாடல் மட்டுமே..
அதுவும் விதி மாறும் வரைக்கும்தான்.


armfarveen@gmail.com