பூவும் புயலும் . . . . . . .

கவிஞர் பொன் இனியன், பட்டாபிராம்



பூவிற் தொடங்கி பொய்யில் கலித்துறை போற்றுமாறா
தாவில் லதுவாய்த் தளைகெடாக் கட்டளை தானியற்ற
பாவல்லார் சொன்ன படியாய் முயல்வேன் பயந்தபடி
ழூபூவதென் னெஞ்சிற் புதுக்கா தெனிலோர்ப் புயல்வருமே
                                                                                                           பூ அது என்


பூவும் மணமும் பொலிதரு சோலையாய்ப் பொத்தியவர்
ஆவி செயலத் தனையுந்தா னீயும் வரதனவர்
மேவிய வர்க்கே மிகுந்தூட்டிக் கற்பிக்கும் மேன்மையராம்
போவுபொல் லாங்கெவர் போய்ச்செயி னாங்கோர் புயல்வருமே

பூப்போலும் மென்மைப் பொலியுநல் லுள்ளம்; பொருள்விளங்க
யாப்பும் மரபுமா யாந்தொடை யெல்லாமும் யத்தனித்தே
பாப்புனையும் மேலான பாவலர்தம் நெஞ்சத்தும் பாவிகளால்
போப்போ யெனுமாறு பொல்லாங் குறினோர்ப் புயல்வருமே

பூவோடு சேர்ந்து பொருந்திய நாரும் பொலிவுறும்
பாவோடு தானிசையப் பண்விளங்கு மாறதன் பாடுறுமே
தாயோ டருசுவை தான்போகுங் கல்வியது தந்தையோடாம்
போயாடி வீற்றாய்ப் பொலிவிட மின்றேல் புயல்வருமே

பூப்போலும் மென்மைப் புளகாங் கிதமாக்கும் வாய்மழலை
யாப்பும் புதுக்குமே யாழிசை யுந்தோற்கும் யாயெவர்க்கும்
வாய்த்தபே றாகும் மதலை அஃதுடையார் வையமிதில்
போத்த ருதலானார் புல்லார் மனத்துப் புயல்வருமே

பூநாறுங் கூந்தலாள் புன்னகை யாலெனைப் பூட்டினளே
தானேயும் தன்னுள் குதிபோடு தென்னுளம் தையதக்க
ஆமாறு என்னை யவள்வந் தணைவாளேல் ஆவிதங்கும்
போமாறு தானாயின் பொக்கெனும் நெஞ்சிற் புயல்வருமே

பூத்ததெலாம் வையத்துப் பூவாமா ஒன்று போயமரும்
வாய்த்தவா றாக வசந்தநன் மார்பும் வனிதைதோளும்;
நோய்த்த பிறிதோ நுடங்கியே பாடைமேல் நுஸறிடவாம்
போய்வீசு தென்றலும் மாறியோர் நாளில் புயல்வருமே

பூவுக்கும் மென்மைக்கும் பொத்திநல் லொப்பாய்ப் பொருந்திடவே
நாவுக்கும் இனிமைதர நாம்பெண்னைப் போற்றி நயந்துரைத்தே
ஓவாது நாளும் ஓச்சிக்கொண் டேதான் ஒடுக்குகிறோம்
போமாறொன் றில்லாப் பொழுதில் அவளாற் புயல்வருமே

பூவா தலையாநீ போட்டால் தெரியுமே பொள்ளெனவா
நீயா யிலைநானா நிச்சய மாகும் நினைவதுவாய்
காயாத வெய்யிலிற் காய்ந்துதீய் கின்றோமால் காப்புறவே
போவாத வெக்கைதான் போமாறு வானில் புயல்வருமே

பூவென்னாம் நெற்றிக்குப் பொட்டென்னாம் பாடையிற் போகையிலே
வாவென்று நல்லோர் வரவேற்க வையத்து வாழ்ந்தொருவன்
நோவந்த போதும் நுடங்குமா றாகானாம் நொந்துபிறர்
போவென்னு மாறான பூரியர்தம் வாழ்வில் புயல்வரும்




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்