பொங்குமின்பத்  தைத்திங்கள்  போற்று

பாவலர்  கருமலைத்தமிழாழன்


 

சாதிமத   எண்ணத்தை
         
சாய்க்கின்ற   காழ்ப்புதனை
வீதிகளில்
   வளர்க்காமல்
         
விட்டெரிப்போம்   போகியிலே !

வஞ்சகத்தைப்   பகைமையினை
         
வழித்தெறிந்து   மங்கலமாம்
மஞ்சளெனும்
   மனிதநேயம்
         
மனங்களிலே   ஒளிரவைப்போம் !

அன்பென்னும்   தோரணத்தால்
         
அகமெல்லாம்   அழகுசெய்து
முன்நின்று
   அனைவரையும்
         
முகம்மலர்ந்து   வரவேற்போம் !

கரும்பாகக்   கலந்துபேசி
         
காளைபசுவைத்   தொழுதுபோற்றி
அருஞ்சுற்றம்
   மகிழ்ந்துகூடி
         
அணைத்துபொங்கல்  பொங்கிடுவோம் !

தமிழரெல்லாம்   ஒன்றென்று
         
தரணியெல்லாம்   மதித்திடவே
அமிழ்தமெனத்
   தைப்பொங்கல்
         
ஆடிப்பாடிப்   போற்றுவமே !


 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்