குறுங்கவிதைகள்

கவிஞர் இரா.இரவி

வானிலிருந்து வந்து
உழவனுக்கு
உதவியது
வயல்
விளைந்திட !

கண்ணுக்குத் தெரிவதில்லை
தந்தது
இதம்
உடலுக்கும்
உள்ளத்திற்கும் !

கதிரவன் மறைந்து
நிலவின்
வருகை
இன்பம்
இணைகளுக்கு !

ஓரிடத்திலேயே  நில்லாமல்
வேறிடம்
செல்கையில்
மனதிற்கு
மகிழ்ச்சி !

இசைக்கத் தெரியாவிட்டாலும்
ரசிப்பதிலும்
உண்டு
சுவை !

ஆக்கமும் அழிவும்
உள்ளது
பயன்படுத்தலில்
நெருப்பு
!

மலர்கள் மீது
சந்திரன்
அனுப்பிய
காதல்
கடிதங்கள் !

உருவமற்றது
ஓங்கி
அடித்தால்
உருக்குலைத்து
விடும் !

நதிகளின்  கூட்டணி
மீன்களின்
வாழ்விடம்
மீனவர்களின்
வாழ்வாதாரம் !

வானிலை அறிக்கையில்
வாசிக்கிக்காத
போதும்
வந்து
வீழ்த்துகின்றது !

சில நேரம் துன்பம்
சில
நேரம் இன்பம்
யாருமற்ற
நேரம் !

முக்காலமும் நிகழும்
முடிவற்ற
நிகழ்வு
காதலர்களுக்கு
!

பிரிந்து பின் சேர்ந்தால்
பரவசம்
தன்வசம்
இணையர்களுக்கு
!

மாதா பிதா குரு
மூன்றும்
ஒரே வடிவில்
நண்பன்
!

விலகிவிட்டபோதும்
வெறுக்கவில்லை
மனம்
என்னவளை
!





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்