உறைந்துள்ளார் எந்தன் உளத்து


கவிஞர் இனியன்,  கரூர்

மறைந்தும் மறையாத மாமனிதர்; ஒன்னார்

அறைந்தும் அருள்செய்த அன்பர்- மறைபோல்

நிறைந்துள்ளார் என்றும் நிலத்தினில் காந்தி

உறைந்துள்ளார் எந்தன் உளத்து.

(ஒன்னார்- பகைவர்)




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்