உருத்திர தாண்டவம்

முல்லைஅமுதன்
 

அறுபத்தி நான்கில் இறுதியில்-

புயலால்
நீ  மீண்டு-

வந்தாய்..

.கடவுள் காப்பாற்றினார்  என்றோம்.

77 இன்  கலவரத்தில் தங்கை

திரும்பி  வந்தாள்  சேதாரமுமின்றி...

தலை கொய்து

சந்தியில் தொங்கவிடப்பட்ட

 நண்பனின் வாழ்வு பற்றியும்

கடவுள் சொன்னார்.

87 இல் இனப்புயலில் ஊர் வந்தோம்.

அம்மாளாச்சி பற்றியும்

 மெய்யால் அளந்தோம்.

90 உம் போய்-

புனித நாளென

சுனாமியும் புதிதாய் சேதி சொன்னது.

இப்போ-

ஆயிரம் ஆயிரம் தலைகள்

கொய்த பின்பும் மௌனமாக

 என்னை வத்திருக்க கற்றுத் தந்ததெப்படி...?

அரிச்சந்திரன் பற்ரியும் பிள்ளையார் கதை பற்றியும் சொல்லித்

தந்த உன்னால்-

முருகன் வதை பற்றிச் சொல்லித்

 தர முடியாது போனது ஏன்?

மௌனமாக  இருக்கையில் -

அவரவர் என் முதுகில் எறிப் போகையில்-

 சும்மா இருக்க கற்றுத் தந்ததே நீயல்லவா!

உன் அருகில்-

 நமது கடளரிடம் சற்றுக்  கேட்டுச் சொல்!

உனக்கென்ன...

சிரித்தபடி புகைப்படத்தில்-

உன் பாட்டில் இருக்கிற உன்னால் ஒரு தடவையாவது

சொல்லி விடு...

அம்மாவிடம் அவ்வப்போது சந்நதம் காட்டும் நீ-

இவர்களின்

 முன்னால் வந்து

 ருத்திர தாண்டவம் ஆடிவிடு....

இன்னும் ஆயிரம் தலைகள்

கொய்வதற்கு முன்னால்...!.

 

mullaiamuthan_03@hotmail.co.uk