மாற்றமே மருந்து

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு 


                   

வர்ணாசிரம பேதம் காட்டி
வஞ்சனையாய்ப்
பஞ்சமரென்று
தர்மத்தின்
நெறியெனச் சொல்லி
தாழ்மைப்படுத்தி
வைத்து,
ஆதிக்க
வெறி பிடித்தோர்
ஆட்டிப்
படைத்துயர்ந்தார்! - சமூக
நீதியை
எடுத்துரைக்க
நிலைமைகள்
மாறிற்றின்று! 

தீண்டாமை திணித்தோரின்று
தீண்டாமைத்
தீயில் நொந்தார்!
தாழ்வென்று
சொன்ன வேலை;
தான்செயப்
பழகிக் கொண்டார்!
ஆண்டவர்க்குச்
செய்யும் சேவை
அருகதை
அற்றுப் போனார்! - எங்கும்
தாண்டவமாடும்
தொற்றால்
சமூக
விலக்கம் கண்டார்! 

கவசங்கள் அணிவோர் கூட
கரோணா
பாதக  முற்றார்!
அவரவர்
துப்புரவென்னும்
அவசியத்
தூய்மை கற்றார்!
ஒருவரையொருவர்
சார்ந்து
உய்வதே
வாழ்வென்றுணர்ந்தார்!
மருந்திலாத்
தொற்றால் பெற்ற - பெரும்
மாற்றமே
மருந்தாய்க் கொள்வார்!



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்