நாயினும் கீழாம் நவில்!

கவிஞர் கே.பி.பத்மநாபன்


தாயின்
அரவணைப்பும் தந்தையின் பேரன்பும்
சேயின்
நலமுயர்த்தும் சீராக:- ஆயினுமென்?
பேயின்
குணத்தோடு பெற்றோரைப் பேணாதோர்
நாயினும்
கீழாம் நவில்.
 

ஆயிரம் நூலறிவை அன்றாடம் கற்பித்து
மாயிருள்
நீக்கும் மதியாசான்:- தூயிறையாம்
தாயினும்
மேலோனைத் தான்மதியா மாணாக்கர்
நாயினும்
கீழாம் நவில்.
 

வாயினால் தானுரைத்த வாக்கினையே காவாமல்
பேயினைப்
போலாள்தல் பேதைமை:- கோயிறைகள்
தூயிறையாய்
வாழாமல் தொட்டதெலாம் ஊழலெனின்
நாயினும்
கீழாம் நவில்.


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்