தந்தையர் நாள்
முனைவர் அ.கோவிந்தராஜூ
தந்தையின் சிறப்பை முதன் முதலில்
தரணிக்கு உரைத்தவன் தமிழன்!
தந்தையர் நாடென்னும் போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
என்று என்றைக்குப் பாடினானோ பாரதி
அன்றே தொடங்கிவிட்டது
தந்தையர் நாள் கொண்டாட்டம்!
தன் மக்களைத் தக்கவாறு அவையத்து
முந்தியிருக்கச் செய்பவன் தந்தை
என்று என்று பாடினாரோ வள்ளுவர்
அன்றே தொடங்கிவிட்டது
தந்தையர் தினக் கொண்டாட்டம்!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
என்றார் பாட்டோலை எழுதிய பொன்முடியார்
அன்றே தொடங்கிவிட்டது
தந்தையர் நாள் கொண்டாட்டம்.
நம்தமிழ் நாட்டில் என்றுமுள நற்றமிழில்
அன்றே தொடங்கிவிட்டது
தந்தையர் நாள் கொண்டாட்டம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|