தொழிலாளர் நாங்கள்

புலவர் முருகேசு மயில்வாகனன்

சிந்து

செய்யும் தொழிலே தெய்வம்

தேர்ந்து கொண்டாலே தேறுமே வாழ்வு

வையம் சிறக்கவே நாங்கள்

வாய்ப்பாய்த் தொழில்செய்து வாழ்வில் உயர்வோம்

தெய்வம் நமக்குத் -  துணையே

தேசியம் காக்கவே தேர்ந்த தொழில்களை

மெய்யை வருத்தியே செய்து மகிழ்வோம்.

 

ஆடைகள் நெய்வோம் மற்றும்

ஆலைகள் தோறும் அரும்பணி செய்வோம்

மூடைகள் தூக்குவோம் முனைப்பாய்

மாற்றுத் தொழில்களை மனமாகச் செய்வோம்

காடுகள் வளர்ப்போம் களனிகள்

காலத்துக் கேற்பவே காய்கறித் தோட்டங்கள்

மாடு வளர்ப்பது எங்கள்

மாண்பான தொழிலென்று மார்தட்டி சொல்வோம்.

 

கூலித் தொழிலாளர் நாங்கள்

கூடித் தொழில்செய்தே கூடி மகிழ்வோம்

ஆலைத் தொழிலாளர்க்கு ஆங்கு

ஆற்றும் தொழிலுக்கு ஆனதோர் சங்கம்

வேலை நிறத்தத்தை விரும்போம்

வெற்றியைக் காண்போம் விரைவிற் பேசியே

சீலமுடைத் தொழிலாளர் நாங்கள்

செய்யும் தொழிலைச் சீராகச் செய்வோம்.

 

வேலை தருனரோடு வேட்பாய்க்

கலந்து பேசியே காண்போமே வெற்றி

சீலத்தைக் காக்கும் சிந்தையர்

சிறப்பாய்ப் பணிசெய்தே சீர்பெறு வோமே

காலத்துக் கேற்பவே காண்போம்

கடின உழைப்பாலே காட்டுவோம் வெற்றி

மூல முதலீடு செய்வோர்

முற்றுந் தெரிந்த தொழிலகம் காண்பர்.

‘குதர்க்கம் விளைத்தே பெருங்

கொள்ளை யடித்திட்ட கோடீஸ்வர ர் பலபேர்

எம்ரத த்தைப்பிழிந்தே - சொத்தை

வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே

நிதியின் பெருக்கம் விளை

நிலமுற்றும் உங்கள் வசமாக்கி விட்டீரே’

சதிசெய எண்ணிடில் நாங்கள்

சாதித்துக் காட்டுவோம் சலிப்பேது மின்றியே!        

  

                     

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்