தைத்திரு நாளிதைப் போற்றிடுவோம்

கவிஞர் மாவிலி மைந்தன், சி.சண்முகராஜா, கனடா



தமிழர்தம் மரபினிற் தோன்றியதை – இந்தத்
       தாரணி போற்றிட ஓங்கிய
தை
அமிழ்தின் அருஞ்சுவை ஆகிய
தை - மன
      ஆழத்திலே உறைந்து ஊறிய
தை!

சேற்றினிலே ஏரைச் செலுத்திய
தை – வேர்வை
      சிந்தியே உழவர்கள் செதுக்கிய
தை
சோற்றினை யாவர்க்கும் வழங்கிய
தை – ஞாலம்
      சூழ்ந்த பசிதனை விரட்டிய
தை!

ஏறு தழுவலை ஏற்றிய
தை - பல
      ஏற்றம் மிகுசெய லாற்றிய
தை!
வீறுகொள் வீரத்தைப் போற்றிய
தை – புகழ்
     விஞ்சும் மரபினைச் சாற்றிய
தை!

சாதி மதபேதம் நீக்கிய
தை – நற்
      சமத்துவப் பாதையை ஆக்கிய
தை!
நீதி நெறிகளைச் சாற்றிய
தை – நம்
     நெஞ்சுக்குக்; குறள்நெறி சாற்றிய
தை!

உள்ளத்தில் நம்பிக்கை யூட்டிய
தை – எம்
     ஒற்றுமைக் கேதிசை காட்டிய
தை
கள்ள மிலாஅன்பை நாட்டிய
தை – இன்பக்
     காதலில் மெய்யுற வூட்டிய
தை!

தைத்திரு நாளிதைப் போற்றிடுவோம் - செந்
     தமிழர்தம் மரபினைக் காத்திடுவோம்!
இத்தரைத் துன்பங்கள் போக்கிடுவோம் - ஏழ்மை
    இலையெனும் உலகொன்றை ஆக்கிடுவோம்!

பொங்குக பொங்கல் பொலிவுறவே! – துயர்
    போகட்டும் ஞாலம் உயர்வுறவே!
மங்கலம் தங்கட்டும் மகிழ்வுறவே - இங்கே
    மானிடம் வெல்லட்டும் புகழ்பெறவே!






                

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்