அரளிச்செடி நகைத்தது!
(காலையில் கண்ட காட்சி)

மதுரை பாபாராஜ்

அடர்ந்து வளர்ந்த அரளிச் செடியின்
மடலைப் பறித்தாள் ஒருத்தி - உடனே
செடியின் உரிமையாளர் வந்தார்! அவளைப்
பறிக்காதே என்றார் சினந்து.

செடியில் இருந்தால் மடல்கள் உதிரும்!
கடவுளுக்கு அர்ச்சனை செய்யப் பறித்தால்
சடக்கென்று பாய்கிறாயே! என்றே செடியும்
நகைத்தது அச்செயல் கண்டு.

மடல்போல் நீயும் பறிக்கப் படுவாய்!
உடலும் புதைந்திடும் மண்ணுள் - தடுக்க
சடக்கென்று கோபம் வருமோ?மனிதா!
பிறருக்(கு) உதவுவதே வாழ்வு.

 

spbabaraj@gmail.com