மனதை திருடியவள்...

கவிமுரச வசந்தா, சென்னை

என் வார்த்தைக்கு தலைவி அவளே.
அதில் பிறந்திடும் கவிகளின் தாயே..!
கண் மூடி பார்த்தேன் தேவி.
என் மனசுக்குள் குடி கொண்ட குமரி ..!
யார் என்று சொல்லிட ஆசை .
அவள் பெயர் சொல்லி கொஞ்சிட ஆசை..!

என் வீட்டு சோலையில்
எத்தனை பூக்கள் உண்டு.
அத்தணையும் ஆசைபடும்
அழகான கூந்தல் அது ...!

யார் என்று என்னுள் கேள்வி.
பதில் தேடி அலைந்தேன் பெண்ணே..!
என் பாதி நீயே என்று
உணர்ந்தேனே... என் உயிர் கண்ணே..!

 

tmr.raj85@gmail.com