கைவிட்ட காவல் தெய்வம்                

.ஜெகதீஸ்வரன், காட்டுப்புத்தூர்,திருச்சிராப்பள்ளி.

வீடுபுகுந்த ரானுவவீரர்கள்
தமிழ்ப் பெண்களின்
கற்பை சூரையாடும்போது
மாதந்தோறும் பொங்கலிட்டு
மாசிமாதம் கிடாய்வெட்டி
தலைமுறை தலைமுறையாய்
வணங்கி வந்த
ஊரின் எல்லையில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
காவல் தெய்வம்
கடைசிவரை வரவேயில்லை                



sagotharan.jagadeeswaran@gmail.com