புத்தாண்டே    அருள்வாயா....  

மன்னார் அமுதன்                               
                                           
புத்தாண்டில் பல புதுமை 
பூக்க
வேண்டும் - முப்
பத்தாண்டு
துன்பமெல்லாம் 
போக்க
வேண்டும்

மத்தாப்பாய்
எம்வாழ்வு
மலர
வேண்டும் - மனதில்
நிறைந்த
பகை புகையாக
மறைய
வேண்டும்

இறைவனிடம் நம்பிக்கை 
கொள்ள
வேண்டும் - தொழிலில்
இயன்றவரை
புதுமுயற்சி 
செய்ய
வேண்டும்  

சத்தான இலக்கியங்கள் 
ஆக்க
வேண்டும் - தமிழன்
சாதீயக்
கொள்கைகளை
நீக்க
வேண்டும்

பயன் அறிந்து பாராட்டா
நட்பு
வேண்டும் - மார்பில்
படுமாறு
அடிக்கின்ற 
எதிரி
வேண்டும்

இல்லற இன்பங்கள் 
நிறைய
வேண்டும் நாட்டில்
இனிய
தமிழ்க் குழந்தைகள் 
பெருக
வேண்டும்

நல்லறத்தை நம்மவர்கள் 
அறிய
வேண்டும் எவர்க்கும்
நலம்தரும்
செயல்களையே 
புரிய
வேண்டும்

சோதனைகள் எம்மைச்சீர்
தூக்க
வேண்டும் வாழ்வில்
சோர்வென்ற
சொல்லை நாம் 
நீக்க
வேண்டும்

சாதனைகள் ஆயிரம் நாம் 
படைக்க
வேண்டும் மக்கள்
வேதனைகள்
பொடிப்பொடியாய் 
உடைக்க
வேண்டும்

பாதகர்கள் செயல்களையே 
படிக்க
வேண்டும் பாட்டால்
பயத்தினிலே
அவர் இதயம்
துடிக்க
வேண்டும்

பார் போற்றும் பண்புடனே 
வாழ
வேண்டும் அயலில்
பசித்தோரைக்
கண்டு உளம் 
நோக
வேண்டும்

புசிக்கையிலே பசித்தவர்க்கும் 
ஈய
வேண்டும் ஊர்வாய்ப்
புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும் 
தாங்க
வேண்டும்

கம்பிவேலிக் கூண்டுகள் தூள்
ஆக
வேண்டும் - எங்கள்
சிறகொடிந்த
பறவைகள் வான்
காண
வேண்டும்

பல நூறு ஆண்டுகள் நாம் 
ஆள
வேண்டும் அறத்தில்
பல
கோடி நல்லிதயம் 
வாழ
வேண்டும்

 


amujo1984@gmail.com