தெருமுனையில்;
நின்று
பார்
போதும்!!
வித்யாசாகர்
1
நீ
அந்த
தெரு
வழியே
போனாயென்று
எல்லோருக்கும்
தெரியும்;
எனை
பார்த்தாய்
என்று
எனக்கு
மட்டும்
தானே
தெரியும்..
சிலசமயம்
நின்று
கடையில்
ஏதேனும்
வாங்குவாய்
அது
எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக
நிற்கிறாய்,
வாங்கினாய்
என்று
எனக்கு
மட்டும்
தானே
தெரியும்..
தெருமுனை
திரும்பி
எனை
பார்த்ததும்
அடிக்கடி
மணி
பார்ப்பாய்
-
வெறுமனே
அலைபேசியை
காதில்
வைத்து
வீணே
யாரையேனும்
அழைத்துப்
பேசுவாய்
அவசரமோ;
நேரமாகி
விட்டதோ
போல்
எல்லோரும்
நினைப்பார்கள்;
ஆனால்
நீ
அடிக்கடி
பார்க்கும்
மணியிலும்
அவசியமில்லாமல்
அழைத்த
அழைப்பிலும்
தான்
எனக்கான
காதலை -
அவ்வளவு
வைத்திருக்கிறாய்
என்று
எனக்கு
மட்டுமே
தெரியும்!!
----------------------------------------------------------------------------
2
அதெப்படியோ
நான்
விரைவாக
வந்தால்
நீயும்
விரைவாக
வருகிறாய்
தாமதமாக
வந்தால்
-
நீயும்
தாமதாமாக
வருகிறாய்
-
மனதிற்கு
மட்டுமே
நம்மை -
சரியாக
தெரிகிறது
போல்!!!
----------------------------------------------------------------------------
3
நீ
அருகில்
வருகிறாய்
உன்
கால
கொலுசு
சப்தம்
என்
மீதேறி
காதுகளில்
புகுந்து
-
உடம்பெல்லாம்
பதிவாகி
வெளி
சென்று
கடக்கிறது
என்னை
உன்னோடு!
அந்த
கொலுசின்
சப்தத்தில்
உன்
பதட்டமும்
நீயும்
புரியவில்லை
-
இப்போது
அமர்ந்து
உன்னையும்
உன்
கொலுசையும்
நீ
என்னை
நெருங்கி
ஒதுங்கி
அவசரமாய்
கடந்ததையும்
எண்ணிப்
பார்க்கையில்
புரிந்தது
-
நீ
என்னை
நிமிர்ந்து
பார்க்காவிட்டாலும்
நாளைக்கு
என்னருகே
வந்து
உடலெல்லாம்
புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில்
நின்று
திரும்பிப்
பார்க்காவிட்டாலும்
மனதில்
நினைத்திருப்பாய்
என்று!!
----------------------------------------------------------------------------
4
உனக்கொன்றும்
நான்
அத்தனை
பெரிய -
அவசியம்
இல்லை
தான்;
போ..
நீ
பெசாவிட்டாலென்ன,
பார்க்கா
விட்டால்
தான்
என்ன?!!!!!!
எனக்கு
நீ -
வாழுமளவு
வேண்டும்;
இல்லையேல்
-
உயிர்
பிரியுமளவேனும்!!!
----------------------------------------------------------------------------
5
உன்
வெளுத்த
தோலோ
கருப்பு
விழியோ
புது
வண்ண
ஆடையோ
மயக்கும்
அழகோ
உன்
ஆர்பாட்டமோ
உன்னிடத்தில்
காமமோ
காதலோ -
ஒன்றும்
வேண்டாம்
தினமும்
இந்த
வழியில்
வந்து
பொ;
போதும்!!
vidhyasagar1976@gmail.com
|