யாரையும் நோகாத கனவுகள்..

வித்யாசாகர்

வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின் -
வாசத்தொடும்,
வரலாறாய் மட்டும் மிகாமலும்,
முன்னேற்றப்  படிக்கட்டுகள் நிறைந்த
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -
மல்லிகைப் பூக்க,
ஒற்றை நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின் அசைவில் -
சுகந்தக் காற்று வீசும் -
தென்றல் பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி -
உயிர்கள் அனைத்தும் வாழ
யாரையும் நோகாமல் ஒரு - கனவேனும் வேண்டும்!!



vidhyasagar1976@gmail.com