புலரும் விடியலுக்காய்...

.எலிசபெத (இலங்கை)

அம்மாவின் அதட்டல்களிப்போ
அதிகமாகி விட்டது
அப்பாவும் என் பிரயாணங்களில்
அழுத்து விட்டார்...

கைச்செலவு அதிகமாகி
கடன் வாங்குமளவு
பெரியவனாகி விட்டேன்
பக்கத்துணைக்கு நின்ற
அக்காவும்
அந்நியமாகிவிட்டதைப் போல
தோன்றுகிறது...
அடுத்த வீட்டுக்காரனின்
கேலிப்பேச்சு-என்னை
அவமானத்தில் தள்ளிவிடுகிறது...

தபாலக அலுவலர்கள் சிலர்
எனக்கு நண்பர்கள்
பெரிய பெரிய
நிறுவன முகவரிகள்
புதிய புதிய தெரு விலாசங்கள்
பல அதிகாரிகளி னறிமுகம்-ஆனால்
நானின்னும்
விடையில்லா வினாவாய்...
நான் யாரென்று புரியவில்லையா??
விடியலை தேடும்
வேலையில்லா பட்டதாரி....!!!