ஊமை உள்ளங்கள்

வி. சந்திராதேவி - நமுனுகுல (இலங்கை)


பாசத்தில் வேசங்களை பார்த்து
பழகிய எனக்கு உன் பாசமொரு
இன்ப அதிர்ச்சியடி!

வாசத்தை மணந்ததுண்டு
உண்மை நேசத்தை
உணர்ந்ததில்லை
இன்று உன்னால் உணர்ந்தேனடி
இவ்வுலகில் மனித ஜென்மம்
மரணிக்கவில்லையென்று!

உன் இரக்கமனசை
வரவேற்கும் அதே நிமிசம்
இவ்வுலகைப்பற்றி கொஞ்சம் கூறுகிறேன்
கேள்!

உண்மைகளையும், பாசங்களையும்
இவ்வுலகம்
புதைத்துக்கொண்டிருகின்றது
யாரையும் நம்பாதே!

பைத்தியகாரி!
என்னைக் காணவில்லையென்று
உன் மனம்
நோகுகிறதென்றாயே
உன்னை உயிர்வாழ வைக்கும்
காற்றுக்கூடதான் உன் கண்ணில்
தென்படுவதில்லை
அதனால் காற்று இல்லையென்பாயா?

பாசங்கள் உருவமாவதை விட
அருவமாக இருப்பதே
அழியாமலிருக்கும் அன்பே!
.
உண்மை அன்பை உரத்துக் கூறவேண்டும்
என்று எண்ணுகிறாயே
அப்படியானால் ஊமைகளெல்லாம்
அன்பற்றவர் என்பாயா?
என் அன்பு அப்படிதான்
புரிந்துக்கொள்!

நான் வரிகளில் இனிமையாய்
எழுதி முடிக்க என் அன்பு
சிறுகதையல்ல
என்றுமே முடியாத
தொடர்கதை!

 

hamshana2012@gmail.com