பாவம் பொடிபட மனிதம் புரிபடும்..

வித்யாசாகர

டும் எறும்பு நசுங்கிப்போகும்
தின்ற மீனின் உடம்புநோகும்
வெட்டும் சதையில் பாவம் வடியும்
அது வாழ்வெங்கும் கூட வரும்;

பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம்
சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம்
உறவு புரியா மனதிற்குள்ளே
ஆயிரம் பூதம் கனமே சேரும்;

திட்ட கூட மனசு சாகும்
வார்த்தை அடியில் இதயம் கிழியும்
மனித எண்ண ஓட்டையில்வாழ்க்கை
மரணமாக அடைந்துப்போகும்;

முடிச்சவிழ்க்கா சிக்கல் நேரும்
அவிழ்க்கும் தருணம் அறுந்தும்போகும்
உடைந்தப்பின்னே ஒட்டவைக்கசில தருணமோ
இதயமோ வாய்ப்பின்றியே பிரிந்துநோகும்;

கொட்டித் தீர்க்கா எண்ணம் கொடிது
வெட்டும் வாளாய் வளரும் பெரிது
சுட்டும் விரல்கள் அசையும் பொழுதுள்
அது அறுக்கும் இலக்கு பிறப்பின் நெடிது;

கட்டில்கால்களாய் விதி மெலிந்திருக்கும்
உண்மையும் மனிதமும் தாங்கிபொருக்கும்
பொய்யினால் சுடும் சொல்லில்
கட்டிலும் காலமும் உடைந்தே நொறுங்கும்;

வெடிக்க வெடிக்க தகறும் மலைதான்
சறுக்கச் சறுக்க நாம் இடறும் நிலைதான்
சிரித்து மகிழ்ந்து சிரிப்பைப் பகிர்வின்
நிலைக்கும்மகிழ்வில் நீளும் வாழ்க்கை,

மனிதம் புரிந்தால் நாலும் வாழ்க்கை!!