தித்திக்கும்
தீபாவளி
!
எம்.ஜெயராமசர்மா
-.
அவுஸ்திரேலியா
மனமெல்லாம்
ஒன்றுபட்டு
மகிழ்ச்சிவெள்ளம்
பெருக்கெடுத்து
தினமெங்கள்
வாழ்வுவரின்
தித்திக்கும்
தீபாவளி
!
பட்டாசு
மத்தாப்பு
பட்சணங்கள்
அத்தனையும்
சுற்றிவந்து
நின்றுவிடின்
சுவைத்துவிடும்
தீபாவளி
!
எத்திக்கும்
உள்ளவெங்கள்
இரத்தபந்தம்
எல்லாரும்
எங்களிடம்
வந்துநின்றால்
இனித்துவிடும்
தீபாவளி
!
புத்தாடை
தனையுடுத்தி
புத்துணர்வு
கொண்டவராய்
புன்முறுவல்
முகம்வந்தால்
பூத்திடமே
தீபாவளி
!
மதங்களால்
மோதும்
மனம்
மாறிவிட்டால்
இனங்களை
சிதைக்கும்
குணம்
மாறிவிட்டால்
மதுபோதை
என்னும்
வெறி
மாறிவிட்டால்
மண்மீது
என்றும்
நல்ல
தீபாவளிதானே
!
பட்டாசு
வெடிப்பதை
பக்குவமாய்
வெடித்தால்
பட்சணங்கள்
உண்பதையும்
பக்குவமாய்
செய்தால்
பலபேரின்
மனத்தினையும்
மகிழ்ச்சிபெற
வைத்தால்
பலநாளும்
எங்களுக்குத்
தீபாவளி
அன்றோ
!
நரகாசுரராக
நாம்மாறி
இருந்து
கொண்டே
லாபநட்டம்
பேசுவதில்
நியாயமென்ன
இருக்கிறது
நம்மனதில்
அசுரகுணம்
நமைவிட்டே
அகன்றுவிடின்
நமக்குநல்ல
தீபாவளி
நாளுமே
வந்துநிற்கும்
!
மத்தாப்புக்
கொளுத்துகின்றோம்
மதவெறியும்
ஊட்டுகின்றோம்
சத்தியத்தை
தர்மமதை
தலைகுனியச்
செய்கின்றோம்
மாபாதகம்
அனைத்தும்
மனத்தைவிட்டு
வெளியேற்றி
தீயதெல்லாம்
தீயிடுவோம்
தீபாவளித்
தினத்தில்
!
தீபாவளித்
தினத்தில்
சிறுவர்களைக்
காத்திடுங்கள்
தீயினால்
வருங்கேட்டை
தினம்மனதில்
எடுத்திடுங்கள்
மத்தாப்பும்
பட்டாசும்
மனமகிழ்ச்சி
தந்திடினும்
மனம்வருந்தச்
செய்துவிடும்
மகிழ்ச்சியையும்
போக்கிவிடும்
!
ஆதலால்
அனைவருமே
அகமகிழ்ந்து
நிற்பதற்கு
அவசரத்தைக்
கைவிட்டு
அயர்வகற்றி
நின்றிடுவோம்
கோபமதை
குறைத்திடுவோம்
குணமுயர்வு
பெற்றுநிற்போம்
பூதலத்தில்
தீபாவளி
பொலிவுபெற
நாமிணைவோம்
!
கோவில்
சென்றுகும்பிடுவோம்
குறைசொல்லல்
தவிர்திடுவோம்
பாவநிறை
அத்தனையும்
பறந்தோடச்
செய்திடுவோம்
தோழமையை
வளர்த்திடுவோம்
சுயநலத்தை
விட்டிடுவோம்
யார்மனமும்
நோகாமல்
நல்லதீபம்
வைத்துநிற்போம் !
|